Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

08 Jun, 2025 | 10:13 AM

image

(நா.தனுஜா)

வட, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ்த்தேசிய கட்சிகளின் சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு  வெள்ளிக்கிழமை (06) மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் அவற்றின் நிலைவரம் என்பன தொடர்பில் கேட்டறிந்த உயர்ஸ்தானிகர், தாம் அம்மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி அவ்வாறான திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் இருப்பின், அதனைத் தம்மிடம்

வழங்குமாறும், அதுபற்றி அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களின் பின்னரான தமிழ்த்தேசிய கட்சிகளின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய உயர்ஸ்தானிகருக்குப் பதிலளித்த சுமந்திரன், ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றத்திலும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத் தாம் முன்வைத்ததாகவும், இருப்பினும் அதற்கு முரணாக இரு கட்சிகள் கூட்டணி அமைத்து தம்வசமே அதிக ஆசனங்கள் இருப்பதுபோல் காண்பித்துக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒரே கொள்கையையே கொண்டிருப்பதாகவும், அணுகுமுறைகளே மாறுபட்டவையாகக் காணப்படுவதாகவும் தெரிவித்த சுமந்திரன், இருப்பினும் அதனை கஜேந்திரகுமார் மறுப்பதற்கான காரணம் தனக்குத் தெரியவில்லை எனவும் விசனம் வெளியிட்டார்.

அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில் 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் தயாரித்த அரசியலமைப்பு வரைபு சிறந்த பல கூறுகளைக் கொண்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் எடுத்துரைத்த சுமந்திரன், அதிலுள்ள குறைபாடுகள் பற்றி சகலரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, அதனை முற்றாக நிராகரிக்கவேண்டும் என கஜேந்திரகுமார் கூறிவருவது ஏற்புடையதன்று என்றும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/216895

  • கருத்துக்கள உறவுகள்

பம்மாத்து அடிக்கும் கஜேந்திரகுமாருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுகிறேன்

https://www.facebook.com/share/v/12JEkgjap28/

யாழில் 17 சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைப்போம்.!

“மக்கள் ஆணையைப் பெற்ற தமிழ் தேசிய கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறிவிட்டு இப்போது மக்கள் ஆணையை புறக்கணித்து தமிழரசு கட்சியை வீழ்த்தும் முனைப்பில் நிமிஷத்துக்கு நிமிஷம் பொய் கூறி பம்மாத்து அடிக்கும் கஜேந்திரகுமாருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுகிறேன். உதிரிகளை கூட்டுச்சேர்த்து மக்கள் ஆணையை மிதிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம்” - சுமந்திரன்

Fake பம்மாத்து கஜேக்கு இப்ப கால் நடுக்கம் வந்திருக்கும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

பம்மாத்து அடிக்கும் கஜேந்திரகுமாருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுகிறேன்

https://www.facebook.com/share/v/12JEkgjap28/

யாழில் 17 சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைப்போம்.!

“மக்கள் ஆணையைப் பெற்ற தமிழ் தேசிய கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறிவிட்டு இப்போது மக்கள் ஆணையை புறக்கணித்து தமிழரசு கட்சியை வீழ்த்தும் முனைப்பில் நிமிஷத்துக்கு நிமிஷம் பொய் கூறி பம்மாத்து அடிக்கும் கஜேந்திரகுமாருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுகிறேன். உதிரிகளை கூட்டுச்சேர்த்து மக்கள் ஆணையை மிதிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம்” - சுமந்திரன்

Fake பம்மாத்து கஜேக்கு இப்ப கால் நடுக்கம் வந்திருக்கும் 😂

மக்கள் இவைக்கும் பெரும்பான்மை வழங்கலையே?!

(ஜெயா அம்மையார் சொல்வது போல மைனோரிட்டி திமுக அரசு என குறிப்பிடுவார்!)

இவர்களும் மைனோரிட்டி ஆட்சி அமைக்கலாம்! எதிர்க்கட்சிகள் ஒற்றுமையானால் ஆட்சி அம்போ தான்!!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

இவர்களும் மைனோரிட்டி ஆட்சி அமைக்கலாம்! எதிர்க்கட்சிகள் ஒற்றுமையானால் ஆட்சி அம்போ தான்!!

சுமந்திரனுக்கு அது தான் கெட்ட கோவம் வந்து விட்டது போல.🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.