Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

08 JUN, 2025 | 12:27 PM

image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இலஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அரசியலுடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டாம் என்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற தொழிற்றுறை நிபுணர்களுடான கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இலஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. முறையற்ற வகையில் ஒரு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, அதனூடாக அரச நிதி மோசடி செய்யும் அல்லது வீண்விரயம் செய்யும் சூழலே காணப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழலுடன் தொடர்புடைய கைதுகள் அனைத்தும் கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பிரதிபலனாகும். இக்காலப்பகுதியில் புதிதாக வழக்குகள் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. 2023 ஆம் 09 இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒருசில அரச நிறுவனங்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் விருப்பம் கொள்வதில்லை. சுங்கத் திணைக்களம், தேசிய இறைவரித் திணைக்களம், மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகிய அரச நிறுவங்களின் இலஞ்ச ஊழல் ஒழிப்பு கிளைகளை திறக்க தயார், ஆனால் அதன்பின்னர் அங்கு ஒருசிலர் பணியில் ஈடுபடமாட்டார்கள்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அரசியலுடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டாம் என்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம். ஊழல் மோசடிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என்ற வேறுபாடுகள் கிடையாது என்றார்.

https://www.virakesari.lk/article/216921

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.