Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது விசாரணை

General20 June 2025

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதில் முக்கிய இரண்டு தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காவல்துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால், இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக சம்பாதித்ததாக நம்பப்படும் பணத்தைப் பயன்படுத்தி பல அரசியல்வாதிகள் சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், பாதுகாப்புத்துறையின் முன்னாள் தலைமையதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/407729/investigation-against-28-people-including-tamil-politicians

  • கருத்துக்கள உறவுகள்

பல அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்த விசாரணை

Published By: VISHNU

20 JUN, 2025 | 03:12 AM

image

செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் பல அரசியல்வாதிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் தொரர்பாக பொலிஸார் நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

குறித்த சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் என கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்களைக் கைப்பற்ற இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் இயங்கும் IAID தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்புத் தலைவர் உட்பட 20க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து காவல்துறை நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, மேலும் சரிபார்க்க முடியாத சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்தும்.

சொத்துக்கள் விசாரிக்கப்படும் அரசியல்வாதிகளில் இலங்கை பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முந்தைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் குழு மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் அடங்கும்.

இந்தக் குழுவில் முன்னாள் மாகாண முதலமைச்சர்கள் பலரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பாகவும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

விசாரணையின்போது, யாரேனும் முறைகேடான ஆதாயங்கள் மூலம் சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/217956

  • கருத்துக்கள உறவுகள்

492723492_743982614692543_46433138241067

முறைகேடாய் சொத்து சேர்த்து சிக்கினார் மகிந்தவின் கூட்டாளி சாணக்கியன்!

28 அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு சிக்கல்: 3 தமிழர்களின் பெயர்களும் வெளியீடு!

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கங்களின் போது அதிகாரத்தில் இருந்த அமைச்சர்கள் உட்பட 28

அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த நபர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் உரிய சொத்துக்களை கொள்வனவு செய்ததாக எழுந்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த யாப்பா அபேவர்தன, மஹிந்த அமரவீர, சாமர சம்பத் தசநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாரச்சி, கஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, ஜானக திஸ்ஸகுட்டிஆரச்சி, வஜிர அபேவர்தன, மஹிபால ஹேரத், அநுர பிரியதர்ஷன யாப்பா, மனுஷ நாணாயக்கார, வடிவேல் சுரேஸ், துஷார சஞ்ஜீவ பதிரண, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் இராசமாணிக்கம், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சாந்த அபேசேகர ஆகியோரின் பெயர்கள் உரிய விசாரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பிலும், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விசாரணையில் யாராவது முறைகேடாக சம்பாதித்து சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News:- Tamil leader.lk

19,June,2025

Monisha Kokul is with Malaravan Uthayaseelan

  • கருத்துக்கள உறவுகள்

ஆடம்பர சொத்துகளை வைத்திருக்கும் 28 அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்; சி.ஐ.டி

Published By: DIGITAL DESK 2

23 JUN, 2025 | 12:28 PM

image

கொழும்பில் ஆடம்பர சொத்துகளை சேகரித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் கூற்றுப்படி,  ஆடம்பர சொத்து தொடர்பான விசாரணைகளில் முன்னாள் அமைச்சர்கள் பலர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, ஆடம்பர சொத்துகளை சேகரித்து வைத்திருக்கும் சுமார் 28 அரசியல்வாதிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவரின் சொத்துக்கள்  தொடர்பிலும்  விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல தரப்புகளிலிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள சொத்துகள் தொடர்பில் விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/218193

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2025 at 12:52, தமிழ் சிறி said:

492723492_743982614692543_46433138241067

முறைகேடாய் சொத்து சேர்த்து சிக்கினார் மகிந்தவின் கூட்டாளி சாணக்கியன்!

28 அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு சிக்கல்: 3 தமிழர்களின் பெயர்களும் வெளியீடு!

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கங்களின் போது அதிகாரத்தில் இருந்த அமைச்சர்கள் உட்பட 28

அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த நபர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் உரிய சொத்துக்களை கொள்வனவு செய்ததாக எழுந்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த யாப்பா அபேவர்தன, மஹிந்த அமரவீர, சாமர சம்பத் தசநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாரச்சி, கஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, ஜானக திஸ்ஸகுட்டிஆரச்சி, வஜிர அபேவர்தன, மஹிபால ஹேரத், அநுர பிரியதர்ஷன யாப்பா, மனுஷ நாணாயக்கார, வடிவேல் சுரேஸ், துஷார சஞ்ஜீவ பதிரண, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் இராசமாணிக்கம், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சாந்த அபேசேகர ஆகியோரின் பெயர்கள் உரிய விசாரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பிலும், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விசாரணையில் யாராவது முறைகேடாக சம்பாதித்து சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News:- Tamil leader.lk

19,June,2025

Monisha Kokul is with Malaravan Uthayaseelan

அமசடக்கிகளாக இருக்கும் முசுலிம் அரசியல் வாதிகளும் உள்ளடக்கப் பட வேண்டுமே...அவர்கள் என்.பி.பியால் புனிதர்கள் ஆக்கப்படுகினமோ..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

அமசடக்கிகளாக இருக்கும் முசுலிம் அரசியல் வாதிகளும் உள்ளடக்கப் பட வேண்டுமே...அவர்கள் என்.பி.பியால் புனிதர்கள் ஆக்கப்படுகினமோ..

ரிஷாட் பதியுதீனின் பெயர் இதில் இல்லாத படியால்...

தேசிய மக்கள் சக்தியின் விசாரணையில் சந்தேகம் ஏற்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

ரிஷாட் பதியுதீனின் பெயர் இதில் இல்லாத படியால்...

தேசிய மக்கள் சக்தியின் விசாரணையில் சந்தேகம் ஏற்படுகின்றது.

சனாதிபதியின் பதவியேற்பில்....ஒற்றைகண் சிமிட்டி அவரை குளிர்வித்ததை ...நான் யாழ் களத்தில் ஏற்கனவே எழுதியிருந்தேன்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.