Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் சட்டத்திற்கு முன் நிற்க வேண்டி வரும் ; கலாநிதி கயான் ஜயதிலக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

27 JUN, 2025 | 05:20 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன்  செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் எதிர்காலத்தில் சட்டத்துக்கு முன் இருக்கவேண்டிவரும் என  கலாநிதி கயான் ஜயதிலக்க தெரிவித்தார்.

தனியார் தொக்காட்சி நிகழ்ச்சின்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் பாராளுமன்றத்துக்கோ மக்களுக்கோ தெரிவிக்காமல் வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதில்லை. 

ஆனால் அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து கைச்சாத்திடுவதற்கு முன்னர் நாட்டுக்கு தெரிவிக்கவும் இல்லை. கைச்சாத்திட்ட பின்னரும் அதனை தெரிவிக்க மறுத்து வருகிறது.

கரம்போட்  விநியோகித்த குற்றச்சாட்டுக்காக அண்மையில் நீதிமன்றம் 25 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.  

அப்படியானால்  இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தளவு காலம் சிறைத்தண்டனை வழங்கப்படும்?

நாட்டு மக்களுக்கு தெரிவிக்காமல் வெறு நாடொன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது மாத்திரமல்லாமல், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருக்கும் விடயங்களை வெளிப்படுத்துமாறு கேடடால், அதனையும் வழங்க முடியாது என தெரிவிப்பது பாரிய விடயமாகும். 

அதனால் இந்த விடயங்களை எப்போதாவது எங்களுக்கு நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல வேண்டி ஏற்படும். இந்தியாவுடன் இணைந்து ஆயுத உற்பத்திக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அரசாங்கத்துக்கு புதுமையான மன நிலையே இருக்கிறது.

அத்துடன் இந்தியாவுடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருக்கும் விடயங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதாக இருந்தால், அதில்  ஏதாவது  ஒருவிடயம் இருக்க  வேண்டும். 

அதனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும்போது, இந்த அரசாங்கத்தை முற்போக்கான அரசாங்கம் என நான் ஒருபோதும் தெரிவிப்பதில்லை. ரணில் விக்ரமசிங்கவைவிட வலதுசாரி வெளிநாட்டுக்காெள்கை மற்றும் தொடர்புகளே இந்த அரசாங்கத்திடம் இருக்கிறது.

இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது பல நாடுகள் இஸ்ரேலை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தன. ஆனால் இந்த அரசாங்கத்தினால் அவ்வாறான கண்ட அறிக்கை ஒன்றை வெளியிட முடியாமல்  போயிருக்கிறது.

இறையாண்மையுள்ள நாடொன்றுக்கு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்வது தவறு என்றாவது தெரிவித்திருக்க முடியும். ஈரான் எப்போதும் எங்களுக்கு உதவி செய்யும் நாடு.

மேலும் இந்த நாட்களில் ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் எமது  நாட்டுக்கு வந்து பலருடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.  எமது நாட்டில் யுத்தத்தின்போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவே கலந்துரையாடியுள்ளார். 

ஆணையாளர் அரசாங்கத்தில் இருக்கும் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். 

ஆனால் காசாவில் உணவுக்காக வரிசையில் இருப்பவர்கள் மீது  இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்துவதை காண்கிறோம். அங்கு பாரிய இனப்படுகொலை இடம்பெற்று வருகிறது. 

இது தொடர்பில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறதா? நீங்கள் இறுதியாக காசாவுக்கு எப்போது சென்றீர்கள் என ஆணையாளரிடம் இவர்கள் கேட்டிருக்கலாம். 

காசாவில் நாளாந்தம் பாரியளவில் மனித படுகொலைகள் இடம்பெறுவதை தொலைக்காட்சிகளில் காணும் நிலையில், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல்,  இலங்கையில் முடிவடைந்த யுத்தம் தொடர்பில் கதைத்து எமக்கு ஆலாேசனை வழங்கிச்செல்லும்போது வாய்மூடி இருக்கும் அளவுக்கு பலவீனமான அரசாங்கமா இந்த நாட்டில் இருக்கிறது என  கேட்கிறேன் என்றார். 

https://www.virakesari.lk/article/218640

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.