Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11 Aug, 2025 | 05:14 PM

image

இந்நாட்டு கருவாடு உற்பத்தியின் தரத்தை உயர்த்தி, சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு அதனை மேம்படுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சானது, கடந்த வியாழக்கிழமை (07) அமைச்சு கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. 

கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஏற்றுமதியாளர்கள், பதப்படுத்துபவர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட துறையின் அனைத்து பங்குதாரர்களும் கலந்துகொண்டனர்.

ஐரோப்பா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற உயர் தரத்தை எதிர்பார்க்கும் சந்தைகளுக்கு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கருவாடுகளின் தரம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக இருந்தது.

இக்கலந்துரையாடலின் போது, பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. உள்நாட்டில் உயர்தரமான கருவாட்டினைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமம் அவர்களின் முக்கிய பிரச்சினையாக இனங்காணப்பட்டது. மேலும், நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் கருவாடு உற்பத்தியின் போது காணப்படும் தரம் தொடர்பான பிரச்சினைகளும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக வலியுறுத்தினார். "இறக்குமதி செய்யும் நாடுகளின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய, உயர்தரமான கருவாடு உற்பத்தியை உருவாக்குவதும், அதன் மூலம் ஏற்றுமதி சந்தையை வலுப்படுத்துவதுமே எமது பிரதான நோக்கமாகும்" என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் விளக்கினார்

  • தொழில்நுட்ப அறிவை வழங்குதல்: உயர்தரமான கருவாடு உற்பத்திக்காகத் தேவையான நவீன தொழில்நுட்பங்களை உற்பத்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

  • தனியார் துறையை ஊக்குவித்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் தரத்திற்கு ஏற்ற தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தனியார் துறைக்குத் தேவையான வசதிகளையும் நிபுணத்துவத்தையும் வழங்குதல்.

  • தரத்தை மேம்படுத்துதல்: நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் கருவாடு உற்பத்தியின் தரம் மற்றும் சுகாதார நிலைமைகளை உயர்த்துவதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குதல்.

இக்கலந்துரையாடலில் உற்பத்தியாளர்கள், உயர்தரமான கருவாட்டை உற்பத்தி செய்ய முன்வருவதாக இணக்கம் தெரிவித்தனர். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம், இலங்கையின் கருவாட்டுத் தொழிற்துறையை சர்வதேச மட்டத்தில் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த துறையாக மாற்றுவதற்கு கடற்றொழில் அமைச்சு எதிர்பார்க்கிறது.

கருவாடு ஏற்றுமதி சந்தையை மேம்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சு பங்குதாரர்களுடன் கலந்துரையாடல் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.