Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலக்கானாரா? இலக்கு வைக்கப்பட்டாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கானாரா? இலக்கு வைக்கப்பட்டாரா?

[04 - November - 2007] [Font Size - A - A - A]

-விதுரன்-

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இறந்துவிட்டார். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டுவிட்டார். இனி எவருடன் இந்த அரசு சமாதானம் பற்றிப் பேசப்போகிறது?

கிளிநொச்சியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது தங்களுக்குக் கிடைத்த பெருவெற்றியாக அரசு கொண்டாடுகிறது. ஆனால், இது சமாதான முயற்சிகளுக்கு கிடைத்த பெருந்தோல்வியென்பதை அரசு மறந்துவிட்டது. இந்தப் படுகொலையானது சமாதானப் பேச்சுகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிட்டது.

விடுதலைப் புலிகளுக்கெதிரான படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வந்த நிலையில் அநுராதபுரம் மீதான புலிகளின் தாக்குதல் சமாதான முயற்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. புலிகளுடன் மீண்டும் சமாதானப் பேச்சுகளை நடத்தத் தயாரென அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்ச்செல்வனின் படுகொலையானது இனி சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான புலிகளின் தாக்குதலுக்கு பழிவாங்கிவிட்டதாக தென்னிலங்கையெங்கும் பிரசாரம் செய்யப்படுகிறது. அநுராதபுரம் தோல்வியை மறைக்க முடியாது தவித்த அரசுக்கு தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட தாக்குதலானது பெரும் ஆறுதலாயுள்ளது.

அநுராதபுரம் விமானப்படைத்தளத்தை புலிகள் முற்றுமுழுதாக அழித்துவிட்டாலும் விமானப்படையின் உளவு நடவடிக்கைகளும் தாக்குதல் திறனும் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லையென்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசு மார்தட்டுகிறது. படைத்தரப்பும் பெருமை கொள்கிறது.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதை பெரிதும் வரவேற்றுள்ள ஜே.வி.பி., அநுராதபுரத்தில் விமானப்படையினருக்கு ஏற்பட்ட பேரழிவையடுத்து, மேலும் அழிவுகளைத் தடுத்துநிறுத்த வேண்டுமானால் புலிகளுடன் பேசுவதைத் தவிர வேறுவழியில்லையென எல்லோரும் கூறியபோது, மீண்டும் சமாதானப் பேச்சுகள் ஆரம்பமாகிவிடுமோ எனத் தாங்கள் அச்சம் கொண்டதாகவும் எனினும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதால் சமாதானப் பேச்சுக்கான சாத்தியமே இனி இல்லாது போய்விட்டது பெரும் ஆறுதலளிப்பதாகவும் கூறியுள்ளது.

தமிழ்ச்செல்வன் அரசியல்துறைப் பொறுப்பாளராயிருந்து சமாதான முயற்சிகளுக்கு பெரும் பணியாற்றியிருந்தபோதும் அவர் கொல்லப்பட்டதன் மூலம், மிகப்பெரும் பயங்கரவாதியொருவர் அழிக்கப்பட்டுவிட்டதாக வெள்ளிக்கிழமை அரச தொலைக்காட்சிகள் செய்திகளை ஒளிபரப்பின. அரசின் வழிநடத்தலிலேயே தமிழ்ச்செல்வனின் கொலை குறித்த செய்திகளை அரச தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடனும் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசுடனும் தமிழ்ச்செல்வன் சமாதானப் பேச்சுகளை நடத்தியவர். எனினும், அவர் கொல்லப்பட்ட செய்தியை அரச தொலைக்காட்சி ஒளிபரப்பிய விதம் குறித்து சிங்கள மக்களே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

1990களின் முற்பகுதியில் அவர் இராணுவப் பிரிவில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ படங்களையும் புகைப்படங்களையும் காண்பித்ததுடன் அவர் சமாதானப் பேச்சுகளில் கலந்துகொண்ட எந்தவொரு படத்தையும் காண்பிக்கவில்லை. மாறாக, அவரொரு மோசமான பயங்கரவாதியெனவும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைகள் உட்பட அனைத்துக் கொலைகளுக்கும் முக்கிய காரணமாயிருந்தவரெனவும் அந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டன.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் கிழக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கும் இவரே காரணமெனவும் சிங்கள மக்களது படுகொலைகளுக்கும் இவர் காரணமாயிருந்ததாகவும் அந்தச் செய்திகள் தெரிவித்தன. இது தென் பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்ச்செல்வனைக் கொன்றதன் மூலம் நாட்டில் மேலும் இரத்தக்களரி உருவாக தாங்கள் காரணமாகிவிட்டதை மறைப்பதற்கும் தமிழ்ச்செல்வனின் கொலை குறித்து தென்பகுதியில் அனுதாபம் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதிலு

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது மிக முக்கிய தலைவரொருவரை வான் தாக்குதலில் இழக்குமளவுக்கு புலிகளின் விமான எதிர்ப்பு படையணி செயலிழந்திருந்ததா என்ற கேள்வி எழுவதுடன், இதுவரை காலமும் போர் விமானங்கள் எங்கு குண்டு வீசின என்பதை எவருமே கருத்தில் கொள்ளாது விமானப் படையினர் புலிகளின் இலக்குகள் மீது தான் குண்டுகளை வீசுகிறார்களென்றதொரு தோற்றப்பாட்டையும் இந்தத் தாக்குதல் ஏற்படுத்தப்போகிறது.

வன்னி வான்பரப்பை முழுமையாகப் பாதுகாக்கத் தேவையான நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ராடர்கள் என்பனவற்றைக் கொள்வனவு செய்வதற்கு பெரும்தொகைப் பணம் தேவை. இவ்வளவு பெரும்தொகைப் பணத்தைக் கொடுத்து வான் எதிர்ப்பு ஆயுதங்கள் வாங்குவது எந்தவோர் நாடுகளின் ஆதரவுமின்றி சொந்தக் காலில் நிற்கும் தமிழர்களுக்கு பெரும் சுமையாகவே இருக்கும். அதுபோக பாரிய யுத்தம் நிகழும்போது, வான் தாக்குதல் பெரிதாக சிறிலங்கா இராணுவத்திற்குப் பயனளித்ததில்லை. உதாரணமாக முகமாலைச் சமரின்போது போர் விமானங்களால் சிங்கள இராணுவத்திற்கு உதவமுடியவில்லை. எனவே பாரிய செலவீனத்தை தரும் வான் எதிர்ப்பு ஆயுதங்களை விட, விமானத் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்கும் பதுங்கு குழிகளும், விமானங்கள் எப்போது பறப்பை மேற்கொள்ளப் போகின்றன என்பதை உளவறிவதும்தான் தற்போதைய நிலையில் செய்யக்கூடியது (செய்யப் பட்டுவருகின்றது)

  • கருத்துக்கள உறவுகள்

"ஆனால், தாக்குதல் நடைபெற்று சுமார் ஏழு மணிநேரத்திற்குப் பின்னர் புலிகள் இதுகுறித்து அறிவித்த பின்னரே தமிழ்ச்செல்வன் உயிரிழந்த செய்தி படையினருக்கு தெரியவந்தது. இதன்மூலம், வழமையாக குண்டுகளை வீசுவது போல் விமானங்கள் குண்டுகளை வீசியபோது தமிழ்ச்செல்வன் அதில் சிக்குண்டது தெரியவந்தது. "

கதையை பார்த்தால் காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாக உள்ளது.என்றாலும் புலிகள் கவலையீனமாக இருந்தார்கள் என்பதை மறுக்க முடியாது.

"எந்த விமானப்படைக்கு புலிகள் மிகப்பெரும் சேதங்களை ஏற்படுத்தினார்களோ அந்த விமானப்படையே புலிகளின் மிக முக்கிய தலைவர் ஒருவரைக் கொன்று, விமானப்படைக்கெதிரான அநுராதபுரத் தாக்குதல் தங்களை எதுவிதத்திலும் பாதிக்கவில்லையெனக் காட்டிவிட்டதாக படைத்தரப்பு கூறியுள்ளது. "

இந்த வீரத்தை அனுராத புரத்தில் காட்டியிருக்கலாமே.அங்கே துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி தள்ளி விட்டு இப்போ வீரம் கதைக்கிறார்கள்.

"ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடனும் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசுடனும் தமிழ்ச்செல்வன் சமாதானப் பேச்சுகளை நடத்தியவர். எனினும், அவர் கொல்லப்பட்ட செய்தியை அரச தொலைக்காட்சி ஒளிபரப்பிய விதம் குறித்து சிங்கள மக்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். "

அதிர்ச்சி குறித்து விதுரன் புது வரவிலக்கணம் கற்பிக்க வருகிறாரா?? சிங்கள மக்கள் வீதி வீதியாக வெடி கொளுத்தி ஆர்ப்பரிக்கிறார்கள்.அத்தோடு இணையதள "சாற்றிங்" அறை அவர்களின் உணர்வை பிரதிபலித்தது.சுயமாக சிந்தித்து செயற்படாமல் செய்வதில் சிங்கள மக்களை சிங்கள,ஆங்கில ஊடகங்கள் வெற்றி கண்டுள்ளன என்றும் தான் கூற வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.