Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவு தரும் வை கோவிடம் அறிவீனமாக விளக்கம் கேட்கிறது, சரவணபவானின் யாழ் உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியை முறியடிக்க முனையும் ஜெயலலிதா

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற் கான சமரச முயற்சிகளில் சர்வதேசம் எங்கும் சமாதானப் புறா வாகப் பறந்து சென்று அமைதி எத்தனங்களில் ஈடுபட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல் வன், கொடூர வான் வல்லூறுகளால் கோரமாகச் கொல் லப்பட்டுவிட்டார்.

இனத்தாலும், மொழியாலும், உணர்வாலும் ஈழத் தமி ழர்களோடு தாய், சேய் போன்று தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழகம், இந்தக் கொடூரம் கண்டு கிளர்ந்து நிற்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் ஈழத் தமிழர் ஆத ரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் இச்சம் பவம் தட்டி எழுப்பி விட்டிருக்கின்றது.

இந்த எழுச்சி கண்டு துவண்டுபோன ஈழத் தமிழர் விரோத சக்திகள் அந்த எழுச்சியை அடக்கவும், அதன் ஊடாகத் தமக்கு அரசியல் லாபம் தேடவும் கங்கணம் கட்டிச் செயற் பட ஆரம்பித்து விட்டன.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, ஜன தாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி, கோமாளிப் பத்திரிகையாளர் சோ. ராமஸ்வாமி என்ற ஒரு சிறு கூட் டம், தமிழகத்தில் மீண்டும் கிளர்ந்துள்ள ஈழத் தமி ழர் ஆதரவு எழுச்சியை முளையிலேயே கிள்ளும் சதித் திட்டத்துடன் திரும்பவும் ஒன்று சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டன. வழமைபோல வட இந்திய ஆரியப் போக்குப் பின்புல ஊடகங்கள் இதற்கு ஒத்து ஊதி, இந்த எதிர்ப்பைப் பூதாகரப்படுத்திக் காட்டவும் முழு மூச்சில் தயாராகி நிற்கின்றன.

தமிழ்ச்செல்வனின் குரூரப் படுகொலையால் உலகத் தமிழினமே அதிர்ச்சியில் உறைந்துபோய்க் கிடக்கின் றது. தமிழகத்தில் பெரும் உணர்வலைகளை அது தட் டியெழுப்பியிருக்கின்றது. இச்சமயத்தில் தாம் மௌனம் காப்பது, உலகத் தமிழினத்தின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் தமக்கு பேரிழுக்கையும், தமிழக மக்களின் கடும் அதிருப்தியையும் சம்பாதித்துத் தந்துவிடும் என் பதை உய்த்துணர்ந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி முந்திக் கொண்டு மௌனம் கலைத்தார்.

தமிழ்ச்செல்வனின் கொடூரக் கொலைபற்றிய தக வல் கிடைத்ததும் தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி யின் கூட்டரசில் பிரதான பங்கு வகிக்கும் முக்கியஸ்த ரான பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர் இரா மதாஸ், கடுமையான வாசகங்கள் அடங்கிய அவசரக் கடி தச் சீட்டு ஒன்றைக் கலைஞருக்கு அனுப்பி வைத்தார் என்றும் கூறப்படுகின்றது. இவ்விடயத்தில் விரைந்து ஏதே னும் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத் தமி ழக முதல்வரை நெட்டித் தள்ளியதில் இந்தக் கடிதத் துக்கும் பங்குண்டு என்கின்றன தமிழகச் செய்திகள்.

இந்நிலைமை காரணமாக, தமிழ்ச்செல்வன் மறைவை ஒட்டி கழிவிரக்கத்துடன் இரங்கல் செய்தி ஒன்றைத் தமக் கேயுரிய கவிதைப் பாணியில் தமிழக முதல்வர் வெளி யிட்டு, இவ்விடயத்தில் உலகத் தமிழினத்தின் உணர்வலை களோடு தாமும் சேர்ந்து நிற்கின்றார் என்பதை உலகுக்கு அடையாளப் படுத்திக் கொண்டார்.

அவ்வளவுதான். இந்த இரங்கல் செய்தியை ஒரு பெரிய விவகாரமாக்கி, ஊதிப் பெருப்பித்து, அதன்மூலம் அரசியல் குழப்பத்தை உருவாக்கத் தயாராகிவிட்டது "ஜெயலலிதா அன்ட் கொம்பனி'.

ஈழத் தமிழரின் அரசியல் தலைவர் ஒருவரின் படு கொலையில் குறுகிய அரசியல் லாபம் தேடும் அற்பத் தனத்தில் அந்த அணி குதித்திருக்கின்றது.

இந்த இரங்கல் செய்தி வெளிப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் இருந்த இரகசியத் தொடர்பு அம்பலமாகிவிட்டது என்றும்

இந்திய அரசமைப்புக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் விசு வாசமாகச் செயற்படுவதற்கு உறுதியளித்து, சத்தியப்பிர மாணம் செய்து பதவியேற்ற கலைஞரின் அரசு, இந்தி யாவில் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் பிர முகர் ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்ததன் மூலம், தேசிய பாதுகாப்புக்கு விரோதமாகச் செயற்பட்டதால் ஆட்சியிலிருந்து அகற்றப்படவேண்டிய தகுதி இழப்பு நிலைக்குச் சென்றுவிட்டது என்றும்

கூக்குரலிட்டு, ஒப்பாரி வைக்கத் தொடங்கியுள்ளது ஜெயலலிதா அணி.

""உலக நாடுகள் அனைத்தும் சமாதான முயற்சிகளுக் காக அழைத்துப் பேசியது தமிழ்ச்செல்வனைத்தான். பச் சைத் தமிழரான தமிழக முதல்வர் மனித நேயத்தோடு மட்டு மல்ல, தன் இனத்து மாவீரன் ஒருவன் இப்படி அநியாய மாகக் குருத்தோலையாக வளர்ந்த நிலையில் கொல்லப் பட்டு விட்டானே என்று எண்ணிக் கண்ணீர் சிந்துவதற் கும் அவருக்கு உரிமை இல்லையா?'' என்று ஜெயலலிதா அணியைப் பார்த்து நியாயம் கேட்டிருக்கின்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

"தானாடாவிட்டாலும் தசையாடும்' என்பார்கள். அப் படியேதான் கலைஞர் கருணாநிதியின் மனமும், இந்தக் கொடூரக் கொலையால் கொஞ்சம் அசைந்து கொடுத் திருக்கின்றது.

அந்த உணர்வைக் கொச்சைப் படுத்துகின்றார் ஜெய லலிதா.

ஈழத் தமிழர்களுக்கும், அவர் தம் நியாயம் மிக்க போராட் டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்கு டைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வா(ள்/ல்) பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தரு வது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாய மாகும்.

-உதயன்

Edited by கந்தப்பு

இந்தச் செயற்பாடு எப்போதும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. தமிழகத் தமிழர்களை இந்திய மக்கள் இந்தியராகக் கருதுவதேயில்லை. தென்னிந்தியர்கள் மத்தியில் ஆட்சிப்பீடத்திற்கு வந்தாலும், இந்த நிலைதான். அதைத் தென்னிந்திய மக்கள் உணர வேண்டும்.

ஜெயலலிதாவும் அவர் தம் பரிவாரங்களும் ஈழப்பிரச்சனையைப் பற்றியும் அங்குள்ள அப்பாவி தமிழ் மக்களைப்பற்றியும் சிறிதளவேனும் சிந்திக்க மாட்டார்கள் .அவர்களுக்கு தேவை அரசியல் சிம்மாசனம் மட்டும் தான்.மனிதாபிமானம் அற்ற அரக்கர் கூட்டம் தமிழ் நாட்டில் கூட இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவு தரும் வை கோவிடம் அறிவீனமாக விளக்கம் கேட்கிறது, சரவணபவானின் யாழ் உதயன்

தமிழீழப் போராட்டத்துக்கு அன்று முதல் இன்று வரை ஆதரவு தரும் வை கோவிடம், அவரது உள் நாட்டு அரசியல் நிலை பற்றி அறிவீனமாக விளக்கம் கேட்கிறது, சரவணபவானின் யாழ் உதயன் பத்திரிகை.

http://www.sooriyan.com/index.php?option=c...8&Itemid=27

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவு தரும் வை கோவிடம் அறிவீனமாக விளக்கம் கேட்கிறது, சரவணபவானின் யாழ் உதயன்

தமிழீழப் போராட்டத்துக்கு அன்று முதல் இன்று வரை ஆதரவு தரும் வை கோவிடம், அவரது உள் நாட்டு அரசியல் நிலை பற்றி அறிவீனமாக விளக்கம் கேட்கிறது, சரவணபவானின் யாழ் உதயன் பத்திரிகை.

http://www.sooriyan.com/index.php?option=c...8&Itemid=27

ஆமி அப்படிச் சொல்கிறது புலிகள் இப்படிச் சொல்கின்றனர் என்று பலாலியில் ஓடர் எடுத்து பேப்பர் அடிப்பவர்கள் யாரின் ஓடரில் இப்படி எழுதினார்கள் ? அதையும் சொல்லி ஒரு ஒப்பாரி வைத்தால் அடுட்தமுறையும் சர்வதேச விருது கறண்டி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.