Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-2745-Original.jpg

1970 களில் தனியார் பாடசாலைகளில் இரசாயனவியல் ஆசிரியராக மிகவும் பிரபலமாக இருந்தார்.அந்தக் காலங்களில் படித்தவர்களுக்கு இவரிடம் படிக்காவிட்டாலும் இவரைத் தெரியாமலிருக்க முடியாது.

இரசாயனவியல் ஆசிரியராக சிறிபதி மாஸ்ரர் என்பவரும் இருந்தார்.இருவரும் மிகவும் பிரபலமாக இருந்தார்கள்.பொண்ட் மாஸ்ரர் பாடசாலைக்கு வெளியிலும் எல்லோருடனும் நண்பர்கள் போல பழகுவார்.

நானும் சிறிதுகாலம் இவரிடம் படித்தேன்.வகுப்புகளுக்கு ஒழுங்காக போவதில்லை.

இவரிடம் இருந்த திறமை என்னவென்றால் சோதனை வருவதற்கு முதல் கடந்தகால வினாத்தாள்களை எடுத்து அக்குவேறு ஆணிவேறாக விழங்கப்படுத்தி தானே ஒரு வினாத்தாள் தயாரித்து மாதிரிச் சோதனையும் எழுத வைப்பார்.

இதனால் சோதனைக்கு வரும் கேள்விகள் இவருக்கு முதலே தெரியவருகிறது என்ற குற்றச் சாட்டுகளும் உண்டு.

வீதிகளில் எப்ப கண்டாலும் 5 வினாடிகள் என்றாலும் கதைக்காமல் போக மாட்டார்.அவ்வளவு ஒன்றிப் போயிருந்தோம்.

1977 களில் வெளிநாடு வெளிக்கிட்ட பின்பு என்ன ஆனார் என்றே இதுவரை தெரியாமல் இருந்தேன்.அனேகமாக வெளிநாடு சென்றிருப்பார் என எண்ணியிருந்தேன்.

இரு தினங்களுக்கு முன் முகப்புத்தகம் ஊடாக இந்த செய்தியைப் பார்த்த போது மிகவும் கவலையாக இருந்தது.

இளம் வயதிலேயே காலமாகியுள்ளார்.காலமாகி 5 வருடங்களின் முன் காலமாகியுள்ளார்.

எப்படி காலமானார்?சுகயீனமாக இருந்தாரா?குடும்பம் பிள்ளைகள் என்று இருந்தாரா?

எதுவுமே தெரியவில்லை. என்னைப் போல இதை வாசிக்கும் நீங்களும் இவரைப் பற்றி முன்னரே அறிந்திருக்கலாம்..இவரிடம் படித்திருக்கலாம்.ஏன் இவர் இறந்த செய்தி கூட தெரியாமல் இருக்கலாம்.

யாருக்காவது விபரங்கள் தெரிந்திருந்தால் அறியத் தரவும்.

நன்றி.

ஆசிரியருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

IMG-2745-Original.jpg

1970 களில் தனியார் பாடசாலைகளில் இரசாயனவியல் ஆசிரியராக மிகவும் பிரபலமாக இருந்தார்.அந்தக் காலங்களில் படித்தவர்களுக்கு இவரிடம் படிக்காவிட்டாலும் இவரைத் தெரியாமலிருக்க முடியாது.

இரசாயனவியல் ஆசிரியராக சிறிபதி மாஸ்ரர் என்பவரும் இருந்தார்.இருவரும் மிகவும் பிரபலமாக இருந்தார்கள்.பொண்ட் மாஸ்ரர் பாடசாலைக்கு வெளியிலும் எல்லோருடனும் நண்பர்கள் போல பழகுவார்.

நானும் சிறிதுகாலம் இவரிடம் படித்தேன்.வகுப்புகளுக்கு ஒழுங்காக போவதில்லை.

இவரிடம் இருந்த திறமை என்னவென்றால் சோதனை வருவதற்கு முதல் கடந்தகால வினாத்தாள்களை எடுத்து அக்குவேறு ஆணிவேறாக விழங்கப்படுத்தி தானே ஒரு வினாத்தாள் தயாரித்து மாதிரிச் சோதனையும் எழுத வைப்பார்.

இதனால் சோதனைக்கு வரும் கேள்விகள் இவருக்கு முதலே தெரியவருகிறது என்ற குற்றச் சாட்டுகளும் உண்டு.

வீதிகளில் எப்ப கண்டாலும் 5 வினாடிகள் என்றாலும் கதைக்காமல் போக மாட்டார்.அவ்வளவு ஒன்றிப் போயிருந்தோம்.

1977 களில் வெளிநாடு வெளிக்கிட்ட பின்பு என்ன ஆனார் என்றே இதுவரை தெரியாமல் இருந்தேன்.அனேகமாக வெளிநாடு சென்றிருப்பார் என எண்ணியிருந்தேன்.

இரு தினங்களுக்கு முன் முகப்புத்தகம் ஊடாக இந்த செய்தியைப் பார்த்த போது மிகவும் கவலையாக இருந்தது.

இளம் வயதிலேயே காலமாகியுள்ளார்.காலமாகி 5 வருடங்களின் முன் காலமாகியுள்ளார்.

எப்படி காலமானார்?சுகயீனமாக இருந்தாரா?குடும்பம் பிள்ளைகள் என்று இருந்தாரா?

எதுவுமே தெரியவில்லை. என்னைப் போல இதை வாசிக்கும் நீங்களும் இவரைப் பற்றி முன்னரே அறிந்திருக்கலாம்..இவரிடம் படித்திருக்கலாம்.ஏன் இவர் இறந்த செய்தி கூட தெரியாமல் இருக்கலாம்.

யாருக்காவது விபரங்கள் தெரிந்திருந்தால் அறியத் தரவும்.

நன்றி.

ஆசிரியருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

பொண்ட் மாஸ்ரர், ஆரியகுளத்தடிக்கு அண்மையில் என நினைக்கிறேன், பொண்ட் இன்ஸ்ரிரியூற் என்ற ரியூசன் சென்ரர் (உள்ளூர் மாணவர்களின் பாசையில் "கொட்டில்" என்பார்கள்😂) ஒன்றை பல காலமாக நடத்தி வந்ததால் இந்தப் பெயர் வந்தது. இன்றுதான் இவரது உண்மையான பெயர் எனக்குத் தெரியும்.

"பொண்டர்" என அழைக்கப் படும் இவர், தான் தனியாக அல்லாமல், யாழ்ப்பாணத்தில் இருந்த பல ஆசிரியர்களின் உதவியோடு மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை அச்சிட்டு, மாணவர்களிடம் ஒரு தொகையை வாங்கிக் கொண்டு பரீட்சை வைத்து, அதை மேலும் சில ஆசிரியர்களின் உதவியோடு திருத்தி பெறுபேறுகளை வெளியிடுவார். "பொண்டர் அச்சிடும் கேள்விகள் பரீட்சையிலும் வருகின்றன" என்ற ஆச்சரியம் கொண்டோர், தாமாக கடந்த கால வினாத்தாள்களைக் (past papers) கண்கொண்டும் பார்க்காத மாணவர்களாக இருந்திருக்கின்றனர் என்று அர்த்தம். ஏனெனில், இலங்கையில் இவரது காலத்தில் இரசாயனவியல் போன்ற விஞ்ஞானப் பாடங்களுக்காக பரீட்சை வினாக்களைத் தயாரிப்போர் தெற்கில் இருக்கும் குறிப்பிட்ட சில பேராசிரியர்களாகத் தான் இருந்தனர் - இவர்களின் பெயர்கள் கூட யாழ்ப்பாண மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியும். கேள்விகளை இந்தப் பேராசிரியர்கள் மீள் சுழற்சி செய்வதும் அடிக்கடி நடக்கிற விடயம்.

ஆனால், இந்தத் தகவல்கள் கிடைக்காத ஒரு மாணவர் குழுவினரிடம் இருந்து, இந்த மாதிரிப் பரீட்சைகள் மூலம் பணம் சேர்க்கும் ஒரு முறையை பொண்டர் செய்து வந்தார். அவருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் கொட்டில் அமைத்துக் காசு பார்த்தவர்கள் இப்படி செய்ய முடியாமைக்கு, மாணவர்களின் சுயமான தேடலுல், பயிற்சியும் காரணமாக இருந்தன.

கடைசியாக பொண்ட் மாஸ்ரர் பற்றி நான் அறிந்தது 1999 இல் என்று நினைவு. தன் மாதிரிப் பரீட்சை முயற்சியை வடக்கிலிருந்து மத்திய மாகாணத்தின் கண்டி வரை விஸ்தரித்து, அதற்கு உதவ பேராதனையில் என் அறை நண்பனாக இருந்த ஒருவரை நாடியிருந்தார். அந்த அறை நண்பருக்கு உதவியாக நான் கண்டியில் ஒரு மண்டபத்தில் நடந்த மாதிரிப் பரீட்சையில் உதவி செய்திருந்தேன். அந்த வேளையில் தான், பொண்டர் தீவிரமான நோயினால் பாதிக்கப் பட்டு, மீண்டிருப்பதாக அறிந்தேன். புற்று நோயா, அல்லது பக்க வாதமா என்பது இப்போது நினைவில் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

பொண்ட் மாஸ்ரர், ஆரியகுளத்தடிக்கு அண்மையில் என நினைக்கிறேன், பொண்ட் இன்ஸ்ரிரியூற் என்ற ரியூசன் சென்ரர் (உள்ளூர் மாணவர்களின் பாசையில் "கொட்டில்" என்பார்கள்😂) ஒன்றை பல காலமாக நடத்தி வந்ததால் இந்தப் பெயர் வந்தது. இன்றுதான் இவரது உண்மையான பெயர் எனக்குத் தெரியும்.

"பொண்டர்" என அழைக்கப் படும் இவர், தான் தனியாக அல்லாமல், யாழ்ப்பாணத்தில் இருந்த பல ஆசிரியர்களின் உதவியோடு மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை அச்சிட்டு, மாணவர்களிடம் ஒரு தொகையை வாங்கிக் கொண்டு பரீட்சை வைத்து, அதை மேலும் சில ஆசிரியர்களின் உதவியோடு திருத்தி பெறுபேறுகளை வெளியிடுவார். "பொண்டர் அச்சிடும் கேள்விகள் பரீட்சையிலும் வருகின்றன" என்ற ஆச்சரியம் கொண்டோர், தாமாக கடந்த கால வினாத்தாள்களைக் (past papers) கண்கொண்டும் பார்க்காத மாணவர்களாக இருந்திருக்கின்றனர் என்று அர்த்தம். ஏனெனில், இலங்கையில் இவரது காலத்தில் இரசாயனவியல் போன்ற விஞ்ஞானப் பாடங்களுக்காக பரீட்சை வினாக்களைத் தயாரிப்போர் தெற்கில் இருக்கும் குறிப்பிட்ட சில பேராசிரியர்களாகத் தான் இருந்தனர் - இவர்களின் பெயர்கள் கூட யாழ்ப்பாண மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியும். கேள்விகளை இந்தப் பேராசிரியர்கள் மீள் சுழற்சி செய்வதும் அடிக்கடி நடக்கிற விடயம்.

ஆனால், இந்தத் தகவல்கள் கிடைக்காத ஒரு மாணவர் குழுவினரிடம் இருந்து, இந்த மாதிரிப் பரீட்சைகள் மூலம் பணம் சேர்க்கும் ஒரு முறையை பொண்டர் செய்து வந்தார். அவருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் கொட்டில் அமைத்துக் காசு பார்த்தவர்கள் இப்படி செய்ய முடியாமைக்கு, மாணவர்களின் சுயமான தேடலுல், பயிற்சியும் காரணமாக இருந்தன.

கடைசியாக பொண்ட் மாஸ்ரர் பற்றி நான் அறிந்தது 1999 இல் என்று நினைவு. தன் மாதிரிப் பரீட்சை முயற்சியை வடக்கிலிருந்து மத்திய மாகாணத்தின் கண்டி வரை விஸ்தரித்து, அதற்கு உதவ பேராதனையில் என் அறை நண்பனாக இருந்த ஒருவரை நாடியிருந்தார். அந்த அறை நண்பருக்கு உதவியாக நான் கண்டியில் ஒரு மண்டபத்தில் நடந்த மாதிரிப் பரீட்சையில் உதவி செய்திருந்தேன். அந்த வேளையில் தான், பொண்டர் தீவிரமான நோயினால் பாதிக்கப் பட்டு, மீண்டிருப்பதாக அறிந்தேன். புற்று நோயா, அல்லது பக்க வாதமா என்பது இப்போது நினைவில் இல்லை.

தகவல்களுக்கு நன்றி .

அவரைப்பற்றி சரியாக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்.

எனக்கும் அவருடைய உண்மையான பெயர் இதைப் பார்த்துத் தான் அறிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ட் இன்ஸ்ரியூட் என்று யாழ் பெரியஆஸ்பத்திரிக்கு முன்னால் இருந்தது. கொட்டடியிலும் இருந்ததாகக் கேள்வி.நான் அவரிடம் படிக்கவில்லை. ஆனால் அவருடைய ரியூட்டரியில் படித்தேன் யாழில் உள்ள பிரபலமான ஆசிரியர்களை அழைத்து வந்து பாடம் நடத்துவார். அவர்O/L இற்குத்தான் பாடம் எடுத்திருக்கிறார்.என்று நினைக்கிறேன்.A/L இற்கு அவருடைய ரியூட்டரியில் இரசாயனவியலுக்கு சிறிபதி>கனக்ஸ் கருணாகரன் போன்றவர்கள்படிப்பித்தார்கள். இந்தச்சிறிபதி ஒரு சிகரெட்பத்தி முடியும் நேரத்தில்அடுத்த சிகரெட்டை அந்த நெருப்பிலேயே பற்ற வைத்து இருமிக்கொண்டும் புகைத்துக் கொண்டும் பாடம் நடத்துவார். நல்ல ஆசிரியர்.கருணாகரன் இளைஞராக இருந்தபடியால் பாடம் முழுவதும் ஒரே பகிடியாகவும் சிரிப்பாகவும் போகும்அடிக்கடி புது புதுச்சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொண்டு ஸ்டைலாக ஸ்கூட்டரில் போவதைப்பார்த்து உள்pளுக்குள் பொருமியிருக்கிறோம். நல்ல மனிதர். நல்ல நிர்வாகத்திறமை உடையவர். அந்தக்காலத்தில் 4 பாடங்களுக்கு காசு கட்டினால் அனைத்து வகுப்புகளுக்கும் அனுமதி இருக்கும்.பணமும் எற்க் கொள்ளக்கூடிய அளவு தொகைதான். அதிகம் வாங்குவதில்லை.இரசாயனவியலில் பொண்ட்களைப்பற்றி நன்றாக பாடமெடுப்பதால் அந்தப் பெயர்வந்ததாக பேசிக்கொள்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

இந்தச்சிறிபதி

சிறிபதி மாஸ்ரர் இறக்கும்வரை எமக்கு அருகிலேயே இருந்தார்.

இறக்கும் தறுவாயிலும் சிகரட்டும் கையும் தான்.

மனிசன் ஒரு வழக்கறிஞன் செய்ய வேண்டியதை தானே செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.