Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 3

13 Oct, 2025 | 05:05 PM

image

இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, அந்நியச் செலாவணி முகாமைத்துவம் (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) விதிமுறைகள், 2018-ல் முக்கியமான திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

அந்நியச் செலாவணி முகாமைத்துவச் சட்டம், 1999 இன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) "அந்நியச் செலாவணி முகாமைத்துவ (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) (திருத்தம்) விதிமுறைகள், 2025" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய திருத்தத்தின்படி, இந்திய வங்கிகள் (அத்துடன் அவற்றின் வெளிநாட்டுக் கிளைகளும்) இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளின் வங்கிகள் அல்லது தனிநபர்களுக்கு இந்திய ரூபாயில் (INR) கடன் வழங்கலாம்.

இந்தக் கடன் வழங்குதல் எல்லை தாண்டிய வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்காக (cross-border trade transactions) அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இலங்கையில் உள்ள வணிகங்களுக்குக் கடன் பெறுதலை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கடன்கள் இந்திய ரூபாயில் வழங்கப்படுவதால், இலங்கை வணிகங்கள் அந்நியச் செலாவணி மாற்று விகித இடர்களைக் குறைத்துக்கொள்ள முடியும். இது இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் நிதித் தொடர்புகளை வலுப்படுத்தவும் உதவும்.

https://www.virakesari.lk/article/227631

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

இந்திய ரூபாயில் வழங்கப்படுவதால், இலங்கை வணிகங்கள் அந்நியச் செலாவணி மாற்று விகித இடர்களைக் குறைத்துக்கொள்ள முடியும். இது இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் நிதித் தொடர்புகளை வலுப்படுத்தவும் உதவும்.

இதனால் இந்தியாவுக்கு என்ன இலாபம்?

மறைமுகமாக தாங்கள் இவர்களை அடிமைப்படுத்துகிறோம் என்று சொல்லவோ? அல்லது அமெரிக்கா கடன் தந்தால் டொலரில் திருப்பி கொடுக்க வேணும் எங்களிடம் எடுத்தால் இந்தியா ரூபாவில் ...கடனை அடைக்கலாம் என சொல்ல வருகின்றனரா?

பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்கா டொலருக்கு எதிராக புதிய நாணயம் உருவாக்க போயினம் என்று சொல்லிச்சினம் கடைசியல் இந்திய நாணயத்தில் கடன்...

சீனாவும் இரண்டு நாடுகளுக்கு அவையின்ட நாணயத்தில் கடன் கொடுப்பினம் ....அதிகமா பாகிஸ்தானுக்கும்,மாலைதீவுக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

download-15.jpg?resize=297%2C170&ssl=1

இலங்கையர்களுக்கு கடன் வழங்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி!

இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் வங்கிக்கும் கடன் வழங்குவதற்கு இந்திய வங்கிகளுக்கும் அவற்றின் கிளைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியால் (Reserve Bank of India) வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டு அந்நிய செலாவணி முகாமை (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) விதிமுறைகளில் திருத்தம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திருத்தத்தின்படி, இந்திய வங்கிகள் தற்போது இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் இருக்கும் ஒரு வங்கிக்கோ அல்லது தனிநபருக்கோ இந்திய ரூபாயில் கடன் வழங்க அனுமதியளிக்கின்றது.

அதன்படி, வெளிநாடுகளில் இருக்கக்கூடிய இந்திய வங்கியின் கிளைகள் தற்போது பூட்டான், நேபாளம் அல்லது இலங்கையில் வசிக்கும் ஒரு வங்கிக்கோ அல்லது ஒரு நபருக்கோ இந்திய ரூபாயில் கடன் வழங்கலாம்.

இந்த வளர்ச்சி இலங்கையில் உள்ள வணிகங்களுக்கு கடன் அணுகலை எளிதாக்குவதுடன் அத்தகைய கடன்களை இந்திய ரூபாயில் குறிப்பிட அனுமதிக்கும் ஏற்பாடு இலங்கை வணிகங்களுக்கு குறிப்பாக நன்மை பயக்கும்.

மேலும், மாற்று விகித அபாயங்களைக் குறைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் நிதி இணைப்புகளை வலுப்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1450333

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.