Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாய் காவல் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு…

October 15, 2025

யாழ்ப்பாணம், கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இப் காவல்நிலையம், கடந்த 30 வருடங்களாக  காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ள நிலையில் அக் காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் வந்த நிலையில் , அதற்கு பலன் கிட்டியிருக்கவில்லை.

இந் நிலையில், 2019ஆம் ஆண்டு, இக் காணிகளுக்கு உரிமையான 9 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். இதன் பிரகாரம் வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை  காவல்துறையினர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்காத நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய்  காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று, அங்குள்ள  காவல்துறையினரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார்.

அதேவேளை கோப்பாய் காவல் நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள் முடிந்துள்ளன. எனினும், முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/order-to-immediately-remove-kopai-police-station/

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-184.jpg?resize=750%2C375&ssl

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய பொலிஸார்!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ். நீதிமன்றின் பதிவாளர் முன்னிலையில் இன்று அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. 

கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாக கைப்பற்றி அமைக்கப்பட்டருந்தது.

தமது காணிகள் , வீடுகளை விட்டு பொலிஸார் வெளியேற்றப்பட்டு, தமது காணிகள் மற்றும் வீடுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு, யாழ் மாவட்ட நீதிமன்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு கால பகுதியில் 07 உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு விசாரணைகள் கடந்த 06 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி பொலிஸார் தனியார் காணிகள் வீடுகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்து விட்டு, வெளியேற வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 மாதங்களுக்கு மேலாகியும், பொலிஸார் காணிகள், வீடுகளை ஒப்படைக்காத நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை நீதிமன்ற பதிவாளரின் முன்னிலையில் பொலிஸார் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமது காணிகள் , வீடுகளை இழந்து வாடகை வீடுகளில் தங்கியிருந்தவர்களுக்கு தற்போது சொந்த காணிகள், வீடுகள் கிடைத்தமை பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.

அதேநேரம், கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

May be an image of ambulance

May be an image of one or more people and tree

May be an image of motorcycle, street and road

https://athavannews.com/2025/1450437

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.