Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-6.jpg?resize=750%2C375&ssl=1

அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது.

எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றைய தினம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மூன்று படகுகளில் வந்த 31 இந்திய மீனவர்களே இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1451865

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த 35 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில், கடற்படையின் ரோந்து கப்பல்கள் இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான மூன்று இயந்திரப் படகுகளை இடைமறித்தபோது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மூன்று படகுகளும் மீன்பிடி உபகரணங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 31 மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள நான்கு மீனவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்தவுடன், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த 35 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: விஜய் அதிரடி கோரிக்கை

Editorial   / 2025 நவம்பர் 03 , பி.ப. 03:46 - 0     - 26

messenger sharing button

facebook sharing button

print sharing button

email sharing button

image_f3d68bb226.jpg

 

 

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்குச் சொந்தமான 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கைது, மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் வலை வீசியபோது நடந்ததாகத் தெரிகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, கைது செய்யப்பட்ட 35 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும் என்று கோரினார். ஒன்றிய அரசு, மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே தமிழக மீனவர்கள் மீதும் காட்டி, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

விஜய் மேலும், தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, ஒன்றிய அரசும் தமிழக அரசும் இணைந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தினார். இலங்கைக் கடற்படையின் இந்த நடவடிக்கை, மீனவர்களின் உரிமைகளை மீறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முடிவாக, இந்தக் கைது சம்பவம், தமிழக மீனவர்களின் பிரச்சினையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. விஜயின் அறிக்கை, மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது, கடல் எல்லை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்பதை உணர்த்துகிறது.

Tamilmirror Online || தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: விஜய் அதிரடி கோரிக்கை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.