Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

581925393_10236519770008218_297368784632

காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=720409650518617 👈

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் அசிங்கம் காட்டிய இளைஞன் – வீடியோ வைரல்

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு பெண் பயணியிடம், ஒரு இளைஞன் தனது அந்தரங்க உறுப்பை காட்டும் அசிங்கமான செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது.

இது ஒரு கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றம் ஆகும்.

நாட்டின் பெயருக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரும் சேதம் விளைவிக்கும் செயல் இது.

Nuraichcholai boys

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

581943227_853549323887760_28187210279034

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பொதுமக்களிடம் உதவி கோரல்

Nov 16, 2025 - 08:07 AM

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பொதுமக்களிடம் உதவி கோரல்

வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பில் இந்தச் சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இது சம்பந்தமாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

பொத்துவில் பொலிஸ் நிலையம்: 063 2248022 

பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071 8591168

https://adaderanatamil.lk/news/cmi13v8p801ndo29nh6xj9vbz

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது

Published By: Vishnu

17 Nov, 2025 | 02:45 AM

image

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு தொடர்புடைய 23 வயதான திருமணமான இளைஞர் ஒருவரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு வந்திருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், அக்டோபர் 25 ஆம் திகதி சுற்றுலா மேற்கொண்டபோது ஒருவன் தகாத முறையில் நடந்து கொண்டதாக இலங்கை சுற்றுலா பொலிஸிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

மேலும், சம்பவத்தின் காட்சியையும் அவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதையடுத்து இது பெரும் கவனம் பெற்றது.

சுற்றுலா பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், சம்பந்தப்பட்ட பெண் அறுகம்பையிலிருந்து பாசிக்குடாவுக்குச் சென்றபோது திருக்கோவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/230531

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-92.jpg?resize=750%2C375&ssl=

பெண் சுற்றுலாப் பயணி மீதான பாலியல் வன்புணர்வு முயற்சி; சந்தேக நபர் கைது!

அருகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அண்மைய நாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த சில நாட்களாக சமூக ஊடக தளங்களில் பரவிய காணொளியில், இலங்கையில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணை சந்தேக நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது வெளிப்படுத்தப்பட்டது. 

அதன்படி, சந்தேக நபரை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடுவதற்காக இலங்கை பொலிஸார் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தனர்.

அதன்படி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (16) மாலை சந்தேக நபர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் களுவாஞ்சிகுடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.

ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, இந்த குற்றம் 2025.10.25 அன்று சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கு எதிராக நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

மேலும், சுற்றுலாப் பிரிவு, திருக்கோவில் மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூட்டு நடவடிக்கையின் பின்னணியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரின் அடையாளத்தை மாற்றியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2025/1452900

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.