Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 3

21 Nov, 2025 | 12:59 PM

image

மத்திய வியட்நாமில் வார இறுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி தொடர்வதாக  அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, 52,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அரை இலட்சம் வீடுகள் மற்றும் வணிக் நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி 1.5 மீற்றரை கடந்துள்ளது. சில இடங்களில் 1993 ஆம் ஆண்டின் அதிகபட்ச வெள்ள உயரமான 5.2 மீட்டரையும் கடந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

22.jpg

வியட்நாமின் கடலோர நகரங்களான ஹோய் ஆன் மற்றும் நா ட்ராங் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய கோப்பி உற்பத்திப் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சூறாவளியினால் ஏற்கனவே விவசாயிகளின் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களாகவே வியட்நாமில் சீரற்ற வானிலை நிலவுகிறது. கல்மேகி மற்றும் புவாலோய் ஆகிய இரண்டு சூறாவளிகள் ஒன்றன் பின் ஒன்றாக  தாக்கி பல உயிரிழப்புகள் மற்றும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை வியட்நாமில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

மண்சரிவுகள் முக்கிய வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளை சேதப்படுத்தியதை அடுத்து அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான சுற்றுலா நகரமான டா லாட்டுக்கான முக்கிய நுழைவுப் பாதையான மிமோசா கணவாயின் ஒரு பகுதி பள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளமையினால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இடிந்த பகுதியில் உருவான பெரிய இடைவெளியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கு அவசரகால தங்குமிடங்களை அமைக்கும் பணிகளில் இராணுவப் படையினரும் பொலிஸாரும் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வியட்நாமில் ஞாயிற்றுக்கிழமை வரை மிதமானது முதல் கடும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8.jpg

2.jpg

https://www.virakesari.lk/article/230996

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாமில் ஒரு பாலத்தையே இழுத்துச் சென்ற பெரும்வெள்ளம்! 

21 Nov, 2025 | 01:17 PM

image

மத்திய வியட்நாமில் 40க்கு மேற்பட்டோரின்  உயிர்களை காவு வாங்கிய மழை, வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால், லாம் டோங் (Lam Dong) மாகாணத்தில் ஓடும் டா நிம் ஆற்றின் (Da Nhim River) மீது பல தசாப்தங்களாக உறுதியாக நின்ற தொங்கு பாலம் உடைந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லும் காட்சி வைரலாகியிருக்கிறது. 

அந்நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

இந்த அனர்த்தத்தில் சிக்கி 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 9 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், டா நிம் ஆற்றின் நீர்மட்டம் வெள்ளம் காரணமாக உயர்ந்திருப்பதோடு,  அடித்துச் செல்லும் அந்த வெள்ளத்தில் வியாழக்கிழமை (20) ஆற்றின் மேலே பல ஆண்டுகாலமாக உள்ளூர் பிரதேசவாசிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த தொங்குபாலம் உடைந்து வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. 

Capture.JPG

g.jpg

nee.jpg

https://www.virakesari.lk/article/231003

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.