Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேஷியாவில் அனர்த்தங்களில் சிக்கி 174 பேர் பலி

29 Nov, 2025 | 12:00 PM

image

இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் இந்த வாரம் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் 79 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வட சுமத்திராவில் மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 42 பேர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர். மேலும் ஆசே மாகாணத்தில் 35 பேரும், மேற்கு சுமாத்திராவில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் , ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சில பகுதிகளில் ஒரு மீட்டர் உயரம் வரை நீர் நிறைந்துள்ளதால், மீட்புப் பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளன. படாங்க் டோறு நகரில் அடையாளம் காணப்படாத  உயிரிழந்தோரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்  மின்சாரம் மற்றும் வீதிகள்  சீரமைக்கப்பட்டு வருகின்றதாகவும்  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக அந்நாட்டு அரசு வானூர்தி மூலம் உதவி மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/231901

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேஷியா பெருவெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 248 ஆக உயர்வு

29 Nov, 2025 | 03:50 PM

image

இந்தோனேஷியாவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 248 ஆக உயர்ந்துள்ளதாகவும் மேலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்தோனேஷியாவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் சுழற்புயல் காரணமாக வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்டு வருவதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  248  ன உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் இந்தோனேஷியாவின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/231940

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேஷியாவில் பெரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்வு

02 Dec, 2025 | 11:39 AM

image

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமாத்திரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட  மூன்று புயல்களினால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில்  சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631  ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் பல பகுதிகளில் மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக மக்களை அணுக முடியாமல் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் மற்றும் புயல்கள்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் குடியிருப்புகள் , வீதிகள் , கட்டிடங்கள் என்பன சேதடைந்துள்ளன. 

இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் மலேஷியாவிலும் ஏற்பட்ட  அனர்த்தங்களில் சிக்கி  1,140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில், இந்தியோனேஷியாவில் மட்டும் 631 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், சுமாத்திரா தீவின் பல பகுதிகள் வெள்ள நீர் நிரம்பியதால் மக்களை எளிதில் இன்னும் அணுக இயலாததால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வெள்ளங்கள், மண்சரிவு காரணமாக வீதிகள் சேதடைந்ததால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

https://www.virakesari.lk/article/232221

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாவில் வெள்ளப் பேரழிவு: பலியானோரின் எண்ணிக்கை 900ஐ கடந்தது ; நூற்றுக்கணக்கானோர் மாயம்!

Published By: Digital Desk 1

07 Dec, 2025 | 12:02 PM

image

இந்தோனேசியாவில் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் மலாக்கா ஜலசந்தியில் உருவான சூறாவளியால் 100,000க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளன. இது தென்கிழக்காசிய நாட்டின் சில பகுதிகளில் மழை மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்தியது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் அண்மைய வாரங்களில் ஆசியாவைத் தாக்கிய பல தீவிர வானிலை நிகழ்வுகளில் ஒன்றாகும்.

மேலும், இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாமில் ஒட்டுமொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியுள்ளது.

இந்தோனேசியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆச்சே தமியாங்கில், வெள்ளத்தால் பல கிராமங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி, வாழ்விடங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

லிண்டாங் பவா கிராமத்தில் உயிர் பிழைத்த ஒருவர் மக்கள் தங்கள் வீடுகளின் கூரைகளின் மீது அமர்ந்து தங்களது உயிரை காப்பாற்றிக்கொண்டதாக சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

"மூன்று நாட்கள் சாப்பிடாமலும் குடிக்காமலும் தங்கள் நான்கு வயது குழந்தைகளுடன் தங்கள் வீடுகளின் கூரைகளின் மீது அமர்ந்து உயிரை காப்பாற்றிக்கொண்டவர்களும் இருந்தனர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கிராமத்தில் சுமார் 90 சதவீத வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 300 குடும்பங்கள் செல்ல இடமில்லாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

அங்கு ஏற்பட்ட வெள்ளம் ஒரு சிறைச்சாலையையே மூழ்கடிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியபோது, கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களை அனுப்புவதற்கு வேறிடம் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியதாகவும் இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிபோல்கா நகரம் மற்றும் மத்திய தபனுலி ஆகிய இரண்டு பகுதிகளுக்கான நில அணுகல் ஞாயிற்றுக்கிழமை வரை துண்டிக்கப்பட்டிருந்தது. உதவிகள் விமானம் மற்றும் கடல் வழியாக மட்டுமே அவர்களை அடைய முடிந்தது. சில பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் கொள்ளை நடந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/232654

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசிய வெள்ள பேரழிவு; உயிரிழப்பு 1,000ஐ கடந்தது - ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் இடம்பெயர்வு

09 Dec, 2025 | 11:23 AM

image

இந்தோனேசியாவில் கடந்த வாரம் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில், சிக்கி இதுவரையில் 1,000 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில், 234 பேர் காணாமல் போயுள்ளதுடன்  5,000 பேர் காயமடைந்துள்ளனர். இதில் , வட சுமத்திரா மற்றும் மேற்கு சுமத்திரா மாகாணங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும், 156,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 975,075 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

இதேவேளை, அந்நாட்டு கடலோர மாவட்டங்களில் வெள்ளநீர் சற்று தளர்ந்துவரும் நிலையில், மலைப்பகுதிகளிலுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. 

அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும் என அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் நவம்பர் முதல் ஏப்ரல் வரை நீடிக்கும் மழைக்காலம் பெரும்பாலும் கடுமையான வெள்ளங்களை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/232844

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.