Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வை கட்டியெழுப்ப Technocity நிறுவனம் ரூ. 50 மில்லியன் நன்கொடை

Published By: Vishnu

24 Dec, 2025 | 06:38 PM

image

"இந்த நோக்கத்திற்கு ஆதரவாக முன்வந்த முதலாவது IT நிறுவனம் நாமே." - டெக்னோசிட்டி நிறுவன தலைவர் ஃபமி இஸ்மாயில் இலங்கையில் HP, ASUS, MSI, Lenovo, BenQ, Raidmax, Kaspersky போன்ற சர்வதேச புகழ்பெற்ற வர்த்தகநாமங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட முன்னணி விநியோகஸ்தரான Technocity Pvt Ltd (டெக்னோசிட்டி) நிறுவனம், ரூ. 50 மில்லியன் பெறுமதியான பாரிய நிவாரண உதவியை வழங்க முன்வந்துள்ளது. 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு உதவும் நோக்கில் இத்திட்டத்தை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள், கட்டடங்கள் மாத்திரமன்றி, பல பாடசாலைகளின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளும் முழுமையாகச் சீர்குலைந்துள்ளன. இந்த அவசரத் தேவையைக் கருத்திற் கொண்டு, Technocity நிறுவனம் ரூ. 50 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. இதில் உட்கட்டமைப்புகளை சீரமைப்பதற்காக ரூ. 20 மில்லியன் பணமாகவும், ரூ. 30 மில்லியன் பெறுமதியான அதிநவீன கணனி சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப (ICT) வசதிகளும் வழங்கப்படவுள்ளது. இதன் கீழ், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு 50 'Techno View' 65" மற்றும் 86" செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ஸ்மார்ட் போர்ட்கள் (Interactive AI Smart Board Display Panels), மடிகணனிகள், All-in-one பிரின்டர்கள் மற்றும் போட்டோபிரதி இயந்திரங்கள் ஆகியன வழங்கப்படவுள்ளன. இந்த அதிநவீன சாதனங்கள் வகுப்பறைகளை மீள நவீனமயப்படுத்தவும், அனர்த்த நிலைமையிலும் கூட சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமையை உறுதி செய்யவும் வழிவகுக்கும்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அலுவலகத்துடனான நெருக்கமான ஒருங்கிணைப்புடன், இந்த மனிதாபிமான முயற்சியானது ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2025 டிசம்பர் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, Technocity நிறுவனத்தின் தலைவரும் அதன் நிறுவுனருமான ஃபமி இஸ்மாயில், இதற்கான காசோலையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளித்தார்.

இந்த பணியின் பின்னாலுள்ள முக்கியமான கடமை தொடர்பில், Technocity மற்றும் Laptop.lk ஆகிய நிறுவனங்களின் தலைவரும் அவற்றின் நிறுவுனருமான ஃபமி இஸ்மாயில் கருத்து வெளியிடுகையில், “உட்கட்டமைப்பு சேதங்கள், கல்வி மற்றும் அத்தியாவசிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளைப் பாதிக்கும் வேளையில், மனிதாபிமானமே முன்னிற்க வேண்டும் என்பதை இத்தகைய தருணங்கள் எமக்கு நினைவூட்டுகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கௌரவத்துடனும் வலிமையுடனும் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுவதே எமது நோக்கமாகும். அத்துடன் இந்த நோக்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்த முதலாவது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நாம் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார்.

இன்று, இலங்கை மக்கள் தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்துள்ள நிலையில், Technocity நிறுவனத்தின் இந்த மனிதாபிமானம் மிக்க தலைமைத்துவமானது, தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த அடையாளத்தை எடுத்துக் காட்டுகிறது. பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், இலங்கை மக்கள் இவ்வாறான கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் துணையாக நிற்பார்கள் எனும் காலத்தால் அழியாத உண்மையை இந்த உதவியானது வலியுறுத்துகிறது.

image1.png

இடமிருந்து வலமாக – புகைப்படத்தில், Technocity நிறுவனத்தின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தலைவர் சஞ்சுல ஹெட்டிகே, ஜசீம் ஜுனைதீன் (CFO), மின்ஹாஜ் பாரூக் (சில்லறை வணிக பிரவின் தலைவர்), அக்ரம் பதுர்தீன் (CEO), பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்த்ரி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தலைவர் மொஹமட் ஃபமி இஸ்மாயில், விநியோக முகாமையாளர் ஜெஹான் தங்கப்பன், கேமிங் விநியோகப் பிரிவு தலைவர் மொஹமட் காதிர் இஸ்மத், நிஸ்ரான் ஷியாத் ஆகியோரை காணலாம்.

https://www.virakesari.lk/article/234353

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.