Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம் - பிரதேசமக்கள் விசனம்

27 Dec, 2025 | 03:14 PM

image

வவுனியா சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார்  ஆலயத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிடாது தடுத்து வந்த தொல்பொருள் திணைக்களம் சில ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் பிரதேசம் என பெயர் பலகை இட்டிருந்ததோடு அங்கு உள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கி இருந்தது.

அங்கிருந்த பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளையும் இடைநிறுத்தி இருந்ததோடு எவ்வித புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள விடாது தடை செய்திருந்தது.

எனினும் ஊர்வலங்கள் கடும் பிரயத்தனத்தின் மூலம் கடந்த ஆட்சிக்காலத்தில்  அமைச்சின் அனுமதிய  பெற்று பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பித்தன. 

இந் நிலையை சாதகமாக பயன்படுத்திய தொல்பொருள் திணைக்களம் அங்கிருந்த எண்கோண மண்டபத்தின் தாம் புனரமைத்தால்  மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்பதனை அறிந்து ஐங்கோண மண்டபத்தில் விகாரை அமைக்கும் பணியை மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த எண்கோண மண்டபம் இருந்த பகுதியில் இருந்து கடந்த காலத்தில் எண்கோண வடிவிலான சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டு அது எல்லப்பமருதன்குளம் குளக்கட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டு தற்போது எல்லப்பமருதங்குளம் பகுதியில் அது கோவில் கொண்டு எழுந்தருளி இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் குறித்த மண்டபம் அமைந்திருந்த பகுதியிலேயே தற்போது விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

குறித்த எண்கோண வடிவிலான சிவலிங்கம் கிளிநொச்சி,  குறுந்தூர்மலை மற்றும் இந்தியாவின் கும்பகோணம் பகுதிகளிலும் ஆய்வுகளகன் போது காணப்பட்டதாகவும் தொல்பொருளாளர்கள் தெரிவிப்பதோடு அதேபோன்றதான சிவலிங்கமே குறிப்பிட்ட சமணங்குளம் பகுதியில் காணப்பட்டதாகவும் அந்த எண்கோண வடிவிலான சிவலிங்கமே குறித்த எண் கோண மண்டபத்தில் வைத்து புராதன காலங்களில் வழிபட்டு இருக்கலாம் என்கின்ற வரலாறுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையிலையே குறித்த இடத்தில் விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1000733567.jpg

1000733587__1_.jpg

1000733535.jpg

https://www.virakesari.lk/article/234534

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம்

வவுனியா, சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிடாது தடுத்து வந்த தொல்பொருள் திணைக்களம் சில ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் பிரதேசம் என பெயர் பலகை இட்டிருந்ததோடு, அங்குள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கி இருந்தது.

பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகள் இடைநிறுத்தம்

மேலும், அங்கிருந்த பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளையும் இடைநிறுத்தி இருந்ததோடு, எவ்வித புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ளவிடாது தடை விதித்திருந்தது.

வவுனியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம் | Viharaya In The Pillayar Temple Complex Vavuniya

எனினும் ஊர் மக்கள் கடும் பிரயத்தனத்தின் மூலம் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சின் அனுமதியை பெற்று பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளை ஆரம்பித்தனர்.

இந்நிலையை சாதகமாக பயன்படுத்திய தொல்பொருள் திணைக்களம் அங்கிருந்த எண்கோண மண்டபத்தினை தாம் புனரமைத்தால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்பதனை அறிந்து எண்கோண மண்டபத்தில் விகாரை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த எண்கோண மண்டபம் இருந்த பகுதியில் கடந்த காலத்தில் எண்கோண வடிவிலான சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டு, எல்லப்பமருதன்குளம் குளக்கட்டு பகுதியில் அது கோவில் கொண்டு எழுந்தருளி இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

விகாரை அமைக்கும் பணி

குறித்த மண்டபம் அமைந்திருந்த பகுதியிலேயே தற்போது விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

குறித்த எண்கோண வடிவிலான சிவலிங்கம் கிளிநொச்சி, குருந்தூர்மலை மற்றும் இந்தியாவின் கும்பகோணம் பகுதிகளிலும் ஆய்வுகளின் போது காணப்பட்டதாக தொல்பொருளாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம் | Viharaya In The Pillayar Temple Complex Vavuniya

இதனை ஒத்த சிவலிங்கமே சமணங்குளம் பகுதியில் காணப்பட்டதாகவும், அந்த எண்கோண வடிவிலான சிவலிங்கமே குறித்த எண் கோண மண்டபத்தில் வைத்து புராதன காலங்களில் வழிபட்டு இருக்கலாம் என்கின்ற வரலாறுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையிலேயே குறித்த இடத்தில் விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த பகுதியில் முழுமையாக தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

25-694fd5d997d58.webp

25-694fd5da4a51f.webp

https://tamilwin.com/article/viharaya-in-the-pillayar-temple-complex-vavuniya-1766838422

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரை ராஜபக்ச காலத்தில் அமைந்தது என முரட்டு முட்டு கொடுத்த காவடியார் எங்கே?

அந்த திரியிலும் தலை கறுப்பை காணோம்😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகிலேயே வெட்கம் ,நேர்மையில்லாத அரசுகள் என்றால் சிங்கள அரசு மற்றும் யூத அரசு மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

கள்வர் தாம் பிடிபடுவதற்குமுன் தம்மை பிடிப்பவரை தமக்கு அடிபணிய வைப்பது அல்லது அதிகாரத்தை பறித்து வீட்டுக்கனுப்புவது. தமிழரை நிம்மதியாக வாழ விடுவதில்லை என்பதில் கட்சி பேதமின்றி இணைந்து விடுகிறார்கள். இலங்கையில் அரசியல் செய்ய முக்கிய ஆதாரமே தமிழர்தான். அவர்கள் இல்லையென்றால் அரசியல் பூச்சியமே. இதற்கு சிங்கள மக்கள்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இனவாதம் பேசாமல் ஆட்சியை பிடித்தவரே ஒரு இனத்தை வெறுத்து ஒதுக்குகிறார். நாடு முன்னேற வாய்ப்பேயில்லை, இது நாட்டின் சாபக்கேடு. நிற்க, அரசாங்க காணிகள் இருக்கின்றன, விகாரைக்குரிய காணி என்று வேறு சிலவற்றை குறிப்பிடுகிறார்கள் அப்படியிருக்கும்போது ஏன் சைவ ஆலயங்களை குறி வைக்கிறார்கள்? ஒரு இந மக்களின் பண்பாடு, நாகரிகம்,கல்வி, வரலாறு, வழிபாட்டு முறைகளை அழித்துவிட்டால் அந்த இனத்தை எளிதாக அழித்துவிடலாமென திட்டம் போட்டு செயற்படுத்துகிறார்கள். இவற்றை கவனிக்க அரசியல்வாதிகளுக்கு நேரம் காணாது. கட்சி அங்கத்தவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவது, கூட்டங்களில் கலகங்களை ஏற்படுத்துவதிலேயே காலத்தை கழிக்கிறார்கள். சட்ட மேதை என்று சொல்லிக்கொள்பவர் யாரும் தலையிடுவதில்லை, பின் மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லையென குறை கூறுவது. இனஅழிப்பு நடந்ததற்கு ஆதாரமில்லை, இல்லையென்றால் வென்றுவிடுவேன். இதற்கு எல்லா ஆதாரமும் உண்டு ஆனால் என்னிடம் திறமையில்லை வழக்கை வெல்வதற்கு என ஏற்றுக்கொள்ள வரட்டு கௌரவம் விடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன திடீர் ஞானோதயம்?

இண்டைக்கு பறுவமோ?

#அனுர எனக்கொரு போதி மரம்😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.