Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-11.jpeg?resize=750%2C375&ssl=1

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உடல் நலகுறைபாடு காரணமாக தற்போது மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்

கடந்த 2019 ஆம் ஆண்டு, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த ‘மாகந்துரே மதூஷிடம்’ மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது.

இந்த துப்பாக்கி கடந்த 2001 ஆம் ஆண்டு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ராணுவத்தினரால் டக்ளஸ் தேவாநந்தாவிற்கு வழங்கப்பட்டிருந்தது

குறித்த துப்பாக்கி, வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

மேலும் டக்ளஸ் தேவானந்தாவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டிருந்தது

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பெறப்படதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட 1500 க்கும் மேற்பட்ட ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட 9 மில்லிமீட்டர் தோட்டாக்கள் தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை டக்ளஸ் தேவானந்தா கடந்த 28 ஆம் திகதி கம்பஹா மேலதிக நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 2026 ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

எனினும் அவர் தற்போது உடல்நல குறைபாடு காரணமாக மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1457743

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் போட்டியிடுவார்கள், அமைச்சுப்பதவி வகிப்பார்கள், ஊடக சந்திப்பு நடத்துவார்கள், மருத்துவமனைப்பக்கமே போயிருக்க மாட்டார்கள். ஆனால் பாருங்கோ.... கைது, விசாரணை என்றவுடன் சொல்லி வைத்த மாதிரி இந்த அரசியல் வியாதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுவார்கள். அதெப்படி வியாதி உள்ளவர்களால் அரசியல் செய்ய முடிகிறது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, satan said:

தேர்தலில் போட்டியிடுவார்கள், அமைச்சுப்பதவி வகிப்பார்கள், ஊடக சந்திப்பு நடத்துவார்கள், மருத்துவமனைப்பக்கமே போயிருக்க மாட்டார்கள். ஆனால் பாருங்கோ.... கைது, விசாரணை என்றவுடன் சொல்லி வைத்த மாதிரி இந்த அரசியல் வியாதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுவார்கள். அதெப்படி வியாதி உள்ளவர்களால் அரசியல் செய்ய முடிகிறது?

நான் நேற்று.... ரணில், கேகலிய ரம்புக்வெல மாதிரி, கைது செய்யப் பட்டவுடன் டக்ளஸ்ஏன், மருத்துவ மனைக்கு செல்லவில்லை என நினைத்து சந்தோசப் பட்டேன். அந்தத் சந்தோசம் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. வைத்தியசாலையில் ஜாலியாக போய்... டக்கி, படுத்து விட்டது.

பார்க்கப் போனால்.... பிள்ளையான் மட்டும்தான், உடல் ஆரோக்கியமான மனிதன் போலுள்ளது. மறியலுக்குப் போன நாளில் இருந்து, மாதக் கணக்கில் வைத்திய சாலைப் பக்கமே போகாமல், கம்பிக்குப் பின்னால் இருந்து களி தின்று கொண்டு இருக்கின்றார். இல்லாவிடில்... பிள்ளையானுக்கு, வைத்தியசாலையில் போய் படுத்திருந்தால் விசேட கவனிப்பு இருக்கும் என்று ஒருவரும் சொல்லிக் கொடுக்கவில்லையோ.

என்ன இருந்தாலும்... பிள்ளையானுக்கு, கெட்டித்தனம் காணாது. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.