Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப் பாதை இன்மை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப் பாதை இன்மை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

17 Feb, 2026 | 06:28 PM

image

அனர்த்தங்களின்போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடங்கள் மூலம் பிள்ளைகளின் உயிராபத்து இன்றி வாழ்வதற்கான மற்றும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதற்கான உரிமை மீறப்பட்டுள்ளது எனத் தெரிவித்து ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான மு. தமிழ்ச்செல்வன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.

இன்றைய தினம் (17) யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனராஜிடம் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை மனித உரிமையாகும். வாழ்வுரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தாலும் சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளாலும் பாதுகாக்கப்படும் முதன்மை உரிமையாகும்.

கல்வி நிறுவனங்கள், குறிப்பாக சிறுவர்கள் அதிக நேரம் தங்கும் இடங்களாக இருப்பதால், அவர்களின் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பை உறுதி செய்வது நிர்வாகத்தின் சட்டப்பூர்வ கடமையாகும்.

அவசர கால வெளியேற்றப் பாதை இல்லாதது அல்லது செயலற்ற நிலையில் இருப்பது, தீ விபத்து, நிலநடுக்கம் அல்லது பிற அனர்த்தங்கள் ஏற்படும் சூழலில் மாணவர்களின் உயிரை நேரடியாக ஆபத்தில் ஆழ்த்தும்.

இது பாதுகாப்பு அலட்சியமாக மட்டுமன்றி, மாணவர்களின் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்பு உரிமையை மீறும் செயலாகவும் கருதப்படக்கூடியது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கள் உட்பட பாரதூரமான இழப்புக்கள் ஏற்படுதற்கும் அது காரணமாக அமைகிறது.

கடந்த 05.02.2026 அன்று கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் ஏற்பட்ட குளவிக் கொட்டுக்கு இலக்காகி 44 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மூன்று மாடி வகுப்பறை கட்டடத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அக்கட்டடத்தில் காணப்பட்ட ஒரே ஒரு பாதை ஊடாக வெளியேறுவதற்கு ஏற்பட்ட தாமதம் மற்றும் நெருக்கடி காரணமாக 44 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாக வேண்டியிருந்தது.

இந்த கட்டடத்தில் Emergency Exit காணப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினை குறைத்திருக்கலாம். இதேவேளை ஏதோவொரு அனர்த்தம் இவ்வாறான கட்டடங்களில் காணப்படுகின்ற ஒரேயோரு பாதையில் ஏற்பட்டிருப்பின் மாணவர்களின் நிலைமை மிகவும் பாரதூரமானதாக அமைந்திருக்கும்.

எனவே, இந்த சூழ்நிலையினை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் Emergency Exit இல்லாத பாடசாலை கட்டடங்களின் பாதுகாப்பு நிலையை உடனடியாக தொழில்நுட்ப ஆய்விற்கு உட்படுத்துதல், தேவையான இடங்களில் அவசர வெளியேற்ற படிக்கட்டு மற்றும் கதவுகள் அமைத்தல், தெளிவான சுட்டிக்காட்டி பலகைகள் மற்றும் அவசர ஒளி வசதி ஏற்படுத்தல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அவசர வெளியேற்ற முன்னாயத்த பயிற்சி வழங்கல், புதிய கட்டட நிர்மானத்தில் Emergency Exit இல்லாத கட்டடங்களுக்கு கட்டட அனுமதி வழங்குவதனை தடை செய்தல், கட்டட வடிவமைப்பில் Emergency Exit கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை வழங்குமாறு தனது முறைப்பாட்டில் கோரியிருக்கின்றார்.

https://www.virakesari.lk/article/238900

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பொறுத்தமட்டில் பொதுவாக பாடசாலை கட்டடங்களில் அவசரகால வெளியேற்ற பாதை இல்லை. இது அடிப்படையில் கட்டட வடிவமைப்பு, திட்டமிடல் குறைபாடு. பெரிய சிறிய பாடசாலை என வேறுபாடின்றி அனைத்து பாடசாலைகளிலும் இந்த குறைபாடு காணப்படக்கூடும். யாழ் இந்து கல்லூரி போன்ற பிரபல தேசிய பாடசாலைகளில் அண்மைக்காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் இதற்கு விதி விலக்காக அமையக்கூடும். ஆனாலும், இவற்றிலும் இந்த குறைபாடு காணப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அவசர கால வெளியேற்ற பாதை பாடசாலைகளில் உள்ளது அல்லது இல்லாதது பற்றிய விழிப்புணர்வு அவசியமானதும், தேவையானதும் ஆகும்.

நாங்கள் படிக்கும் காலத்தில் தேவை ஏற்பட்டால் சுவர், மதில் ஏறி பாய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

எனவே, இந்த சூழ்நிலையினை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் Emergency Exit இல்லாத பாடசாலை கட்டடங்களின் பாதுகாப்பு நிலையை உடனடியாக தொழில்நுட்ப ஆய்விற்கு உட்படுத்துதல், தேவையான இடங்களில் அவசர வெளியேற்ற படிக்கட்டு மற்றும் கதவுகள் அமைத்தல், தெளிவான சுட்டிக்காட்டி பலகைகள் மற்றும் அவசர ஒளி வசதி ஏற்படுத்தல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அவசர வெளியேற்ற முன்னாயத்த பயிற்சி வழங்கல், புதிய கட்டட நிர்மானத்தில் Emergency Exit இல்லாத கட்டடங்களுக்கு கட்டட அனுமதி வழங்குவதனை தடை செய்தல், கட்டட வடிவமைப்பில் Emergency Exit கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை வழங்குமாறு தனது முறைப்பாட்டில் கோரியிருக்கின்றார்.

தம்பி முறைப்பாட்டாளர்...நீங்கள் உவங்கன்ட போய் முறைப்பாடு செய்வதை விட உந்த புலம் பெயர் பழைய மாணவர் சங்கங்கள் இருக்கல்லோ அவையளிட்ட ஒரு விண்ணப்ப கடிதம் போடுங்கோ போட்டி போட்டு கொண்டு செய்து தருவாங்கள் ...அவுஸ்ரேலியா பழைய மாணவ சங்கம் செய்ய முதல் கனடா பழைய மாணவ சங்கம் செய்ய முன் வருவான்...

சில சமயம் சங்கங்களில் அங்கத்துவராக இல்லாத ஆட்கள், நாற்பது ஐம்பது வருசத்திற்கு பிறகு விசிட் பண்ணியிருப்பினம் அவையளிட்ட கேளுங்கோ உங்களுடைய அப்பா/அம்மா வின் நினைவாக உந்த உதவிகளை செய்ய முடியுமோ என்று உடனே உச்சி குளிர்ந்து தலையாட்டி போடுவினம் ...பாடசாலை அதிபருக்கும் கொண்டாட்டம் அதே சமயம் அரசாங்கத்துக்கும் பெயர் கிடைக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

நாங்கள் படிக்கும் காலத்தில் தேவை ஏற்பட்டால் சுவர், மதில் ஏறி பாய்வோம்.

நாங்கள் படிக்கும் காலத்தில்

சிமார்ட் டிவி,கொம்பூட்டர்,வைட் போர்ட்,குளிர்சாதனபெட்டி,ஏசி,வான் போன்ற்வை இருக்கவில்லை,

வகுப்பறைக்கு அரைசுவர்தான் அவசரத்திற்கு பாய்ந்து ஓடலாம்

ஆனால் இன்று சும்மா அந்தமாதிரி அரசாங்கம் செய்து கொடுத்திருக்கல்லோ 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

உங்களுடைய அப்பா/அம்மா வின் நினைவாக உந்த உதவிகளை செய்ய முடியுமோ என்று உடனே உச்சி குளிர்ந்து தலையாட்டி போடுவினம் ...

அது எல்லாத்தையும் விட அநுரகுமார திசாநாயக்க அரசுக்கு நல்ல ஒரு பெயரை பெற்று கொடுக்க வேண்டும் என்பதற்காக கட்டாயம் செய்வார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.