Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!

25 Mar, 2026 | 02:49 PM

image

இஸ்ரேலிய பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திடம் இஸ்ரேல் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சினால் கடந்த 23 ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கான இஸ்ரேலிய பிரதிப் பணிப்பாளர் நாயகம் நினா பென்-அமி விடுத்துள்ள இக்கடிதத்தில், ஈரானின் பலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன:

ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13, 15 மற்றும் 16 வயதுடைய மூன்று சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 18 சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 வயது சிறுமி ஒருவர் கவலைக்கிடமான நிலையிலும், 10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் பலத்த காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதிகள் மீது ஈரான் 'கொத்தணி குண்டுகளை' (Cluster munitions) ஏவித் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/241899

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை குழந்தைகளை காசாவில் கொன்று குவித்திருக்கிறார்கள்…

அதைப் பார்த்தும் உலகம் அமைதியாக இருந்தது.

இப்போ மட்டும் அவசரக் கடிதமா?

உங்களால் நினைத்தது போல இந்தப் போர் நடக்கலையா?

சமீபத்தில் ஈரான் பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டதும்

உங்கள் கண்களுக்கு தெரியலையா?

உலகமே ஒரு பெரிய மேடை…

அதில் நடிப்பது மட்டும் தான் நிஜம் போல காட்டுறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோவில், சமீபத்தில் இஸ்ரேல் வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பற்றி விரிவாகப் பார்க்கப் போகிறோம். 1980-களில் தொடங்கிய இலங்கை உள்நாட்டுப் போரில் இஸ்ரேல் ஆற்றிய மறைமுகப் பங்கு என்ன என்பதை இந்த ஆவணங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்க இலங்கை அரசு ரகசியமாக இஸ்ரேலின் உதவியை நாடியது. ரோந்துப் படகுகள், நவீன துப்பாக்கிகள் என 30 மில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுதங்களை இஸ்ரேல் எப்படி இலங்கைக்கு விற்றது? "விவசாய ஆலோசகர்கள்" என்ற போர்வையில் இஸ்ரேலின் 'மொசாத்' (Mossad) உளவாளிகள் இலங்கையில் எப்படி செயல்பட்டார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து அமெரிக்கா எச்சரித்தும், அதைப் பொருட்படுத்தாமல் இலங்கை அதிரடிப்படைக்கும் (STF), அதிபர் ஜெயவர்த்தனாவின் பாதுகாவலர்களுக்கும் இஸ்ரேல் ஏன் பயிற்சி அளித்தது? வரலாற்றை மாற்றிய இந்த மறைக்கப்பட்ட உண்மைகளைத் தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாகப் பாருங்கள். (ஆதாரம்: இஸ்ரேலிய மனித உரிமை வழக்கறிஞர் ஈட்டாய் மேக் (Eitay Mack) 'The Wire' தளத்தில் எழுதிய கட்டுரையின் அடிப்படையில்).

  • கருத்துக்கள உறவுகள்

657125162_1484846423426201_5415712874257

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.