Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணிலுடன் மகிந்த நடத்திய "பிரதமர்" பேரம்

Featured Replies

சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் பாரியார் எலீனாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற போதும் ரணில் விக்கிரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான "பேரம்" குறித்து விவாதித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

"பட்ஜெட்'டில் அரசு தோற்றாலும் நாடாளுமன்றக் கலைப்பு இல்லை! அதுதான் ஜனாதிபதியின் முடிவு எனத் தகவல்

இன்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது அரசு தோற்கடிக்கப்பட்டாலும், நாடாளுமன்றத்தைக் கலைத்துப் புதிய பொதுத் தேர்தலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிடமாட்டார் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதியே இத்தகவலை வெளியிட்டார் எனக் கூறப்படுகின்றது.

""வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் அரசு தோற்றாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருப்பவரை ஆட்சி அமைக்க அழைப்பேன்'' என்று ஜனாதிபதி அங்கு கூறினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எது நடந்தாலும், தாமே முப்படைகளினதும் பொலிஸினதும் பிரதம தளகர்த்தர் என்றும், பாதுகாப்பு, நிதி போன்ற அமைச்சுகளைத் தாமே தமது கைவசம் வைத்திருப்பார் என்றும் ஜனாதிபதி கோடிகாட்டினார்.

அத்தகைய சந்தர்ப்பத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்தும் எம்.பிக்களை அமைச்சர் பதவிகளுக்குத் தாம் தெரிவு செய்து, தேர்ந்தெடுப்பார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகவும், அவரின் கீழ் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இருந்தபோது தனது கட்சியைச் சேர்ந்த மூவரை அமைப்பாளர்களாகத் திடீரென ஜனாதிபதி குமாரதுங்க நியமித்தமை தெரிந்ததே.

அதேபோன்ற செயற்பாட்டையே தாம் பின்பற்ற வேண்டிவரும் என இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கோடிகாட்டியிருக்கிறார் எனக் கருத முடிகின்றது.

இதேசமயம், நேற்று முன்தினம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் துணைவியார் எலீனா ஜெயவர்த்தனாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அச்சமயம் சற்று நேரம் பக்கத்துப் பக்கத்தில் அமர்ந்திருந்து உரையாடினர் என்று கூறப்படுகின்றது.

வரவு செலவுத்திட்டத்தில் இந்த அரசு தோற்றாலும் நாடாளுமன்றைக் கலைக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும்

மாற்று அரசு அமைக்கும்படி ரணில் விக்கிரமசிங்கவையே தாம் அப்போது அழைப்பார் என்றும்

ஜனாதிபதி அச்சமயம் ரணிலிடம் தெரிவித்தாராம்.

ஆனாலும் தற்போதைய நாடாளுமன்றத்துடன் புதிய அரசு அமைக்கும் எண்ணம் தமக்குக் கிடையவே கிடையாது என்பதை ஜனாதிபதிக்கு அச்சமயம் தெளிவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்க, அடுத்த அரசை அமைக்கும் முடிவை மக்களிடையே விட்டுவிட வேண்டும் என்பதையே தாம் அப்போது வற்புறுத்துவார் என்றும் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தினார் என்று அறியவந்தது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.