Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோழிமுட்டையை சட்டியில் போட்டு பொரித்தபோது முட்டையினுள் இருந்த மஞ்சள்கருவை காணவில்லை!!!

Featured Replies

தான் கடையில் வாங்கிவந்த முட்டைகளை மத்தியானம் பொரித்து சாப்பிடுவதற்காக சட்டியில் உடைத்து ஊற்றியபோது அவற்றினுள் இருந்த மஞ்சள் கருக்களை காணவில்லை என்று பொதுமகன் ஒருவர் போலிசில் புகார் கொடுத்ததால் நேற்று தமிழ்நாடு சென்னையில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்த சட்டிகள், மற்றும் பொலித்தீன் பைகளை கொண்டுவந்து அவற்றினுள் முட்டையை அடித்து ஊற்றி அதனுள் மஞ்சள் கரு இருப்பதை உறுதிசெய்தபின்பே கடையில் இருந்து முட்டைகளை வீட்டுக்கு வாங்கிச்சென்றனர்.

முட்டையினுள் இருந்த மஞ்சள்கரு எப்படி காணாமல் போயுள்ளது என்பது பற்றி அக்கறை கொள்ளாத மைனாரிட்டி தி.மு.க அரசு விரைவில் பதவி விலகவேண்டும் என்று செல்வி. ஜெயலலிதா அவசர அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

செல்வி. ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞர். கருணாநிதி சென்னை போலிஸ் கமிசனர் தலமையில் கியூ பிரிவு போலிசாரின் புலனாய்வுப்படை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்தப்படை விரைவில் முட்டையினுள் இருக்கும் மஞ்சள் கருக்கள் காணாமல் போகும் மர்மம் என்ன என்பதை கண்டுபிடிக்கும் என தான் நம்புவதாகவும் நிருபர்களிடம் தெரிவித்தார்.

காலங்காலமாக வெள்ளைக்கருவும், மஞ்சள் கருவும் சேர்ந்த முட்டையை சாப்பிட்டுவிட்டு இப்போது எப்படி திடீரென்று மஞ்சள் கரு இல்லாமல் வெள்ளைகரு மட்டும் உள்ள முட்டையை பொரித்து சாப்பிடுவது என்று பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

முட்டை விற்கும் கடைகளிற்கு திரள்திரளாகச் சென்ற பொதுமக்கள் கோழிமுட்டையினுள் மஞ்சள் கரு இருக்கின்றதா என்று சோதனை செய்து பார்த்ததால் பல இலட்சம் முட்டைகள் சில மணிநேரங்களில் அடித்து ஊற்றப்பட்டு இப்போது சென்னை நகரின் பல பகுதிகளில் மிகுந்த வெடுக்க மணம் அடிப்பதாக சென்னை நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கோழிமுட்டையினுள் மாத்திரம்தான் மஞ்சள் கருவை காணவில்லையா அல்லது ஏனைய பறவைகளின் முட்டைகளிலும் மஞ்சள் கருக்கள் காணாமல் போய் உள்ளதா என்பதை கண்டறிவதில் தீவிர ஆர்வம் கொண்ட மக்கள் மற்றைய பறவைகள் முட்டையை இடுகின்ற உயரமான மரங்களில் ஏறி அவற்றின் பொந்துகளை சோதனை நடாத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்னையில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில் மஞ்சள் கருக்கள் காணப்படவில்லை என்று வதந்திபரவியதால் தமிழ்நாட்டின் பங்குச்சந்தையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது.

தகவல்: யாழ் பரபரப்பு நிருபர்

யாவும் கற்பனை

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரி இதை ஏன் செய்தி திரட்டியில் பகுதியில போட்டு இருக்கிறீங்க??

ஜெனரல்!!

மிகவும் ஒரு முக்கியமான செய்தியை தந்ததிற்கு மிக்க நன்றிகள் :) ...........முட்டை போடுறது வந்து பெண் பறவை தானே ஆகவே இந்த பெண் பறவையில் தான் குற்ற இருக்கிறது என்று நினைக்கிறேன் :lol: !!இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க........ :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"கோழியிலையும் பிழை இல்லை முட்டையிலும் பிழை இல்லை பார்க்கிற பார்வையில தான் பிழை இருக்கு" :)

இந்தியாவில் தான் மக்களுக்கு வேலையில்லை என்று பார்த்தால் .....................

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை சட்டியில் இருந்த மஞ்ஞள் கருவை திருடி சாப்பிட்டதாக காவல் துறையினர் ருவர் மீது சந்தேகம் கொண்டிருந்தாலும் அவர் வேறு ஒரு நாட்டில் இருப்பதால் கோழி முட்டை திருடனை கைது செய்ய முடியாமல் காவல் துறையினர் தினறி வருகினறனர்..இவர் ஏற்கனவே ஒரு முறை பாம்பில் பால் கறக்கலாம்' என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றியதற்காக காவல்துறையினர் ஏற்கனவே அவரை எச்சரித்து அணுப்பி இருந்தது குறிப்பிடதக்கது...

இதேவேளை இன்று காவல்துறையினர் மக்களுக்கு விடுடுத்திருக்கும் செய்தியில் முட்டையை பொரிக்கும் போது குசினி கதவை மூடிவிட்டு பொரிக்குமாரும் சந்தேகத்துக்கு இடமானவர்கள் உங்கள் இல்லங்களுக்கு அருகில் நட(ன)ம் ஆடினால் அவசர எண்னுக்கு தொட்hபுகொள்ளுமாரும் Nகேட்டிருக்கின்றனர்...

News By SNS news Service...

Thansk to dubakkur.com

சுண்டல் அண்ணா யார் அந்த இரண்டு பேர் :wub: அவர்களை பிடிக்க விசேட பொலிசார் இறக்கபட்டுள்ளார்களா........ :lol:

அப்ப நான் வரட்டா!!

Naan Neruppu..Nee? Seruppu.......Naan Aaaagayam..Nee? Vengayam...Naaan Singam....Nee? Asingam..

ஹீஹீ. ரொம்பத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

2 பேர் இல்ல ஓரால் தான்.............

2 பேர் இல்ல ஓரால் தான்.............

அப்ப சரி ஏனேன்றா "ருவர்" என்று எழுதி இருந்தது அதுதானெ கேட்டேன் :lol: பிந்தி கிடைத்த கலநிலவரம் என்ன??? :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய கள நிலவரம் கோழி முட்டை மஞ்கள் கரு திருடன் தான் அதை தங்க காசு என்று தப்பாக நினைத்து திருடி விட்டதாக வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தெரிகின்றது உறுதிபடுத்தபடவில்லை..............

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தான் மக்களுக்கு வேலையில்லை என்று பார்த்தால் .....................

:wub:

  • தொடங்கியவர்

எல்லாம் சரி இதை ஏன் செய்தி திரட்டியில் பகுதியில போட்டு இருக்கிறீங்க??

எதிர்காலத்தில் இங்கு வரக்கூடிய ஒரு செய்தியை எனது நுண்ணறிவால் அறிந்து இப்போதே போட்டுவிட்டேன். இது தவறா?

ஜெனரல்!!

...........முட்டை போடுறது வந்து பெண் பறவை தானே ஆகவே இந்த பெண் பறவையில் தான் குற்ற இருக்கிறது என்று நினைக்கிறேன் :wub: !!இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க........

கடைசியாக பொரிபடப்போவது குஞ்சுதானே? எனவே குஞ்சில்தால் பிழை இருக்கின்றது என நான் நினைக்கின்றேன். சிலவேளைகளில் குஞ்சு கடுமையான பசி காரணமாக மஞ்சள் கரு முழுவதையும் தானே திண்டு முடிச்சு இருக்கலாம்.

இந்தியாவில் தான் மக்களுக்கு வேலையில்லை என்று பார்த்தால் .....................

... பார்த்தால்... உலகத்தில இப்ப எல்லாருமே வேலை இல்லாமல் தான் இருக்கிறீனம் எண்டு உங்களுக்கு விளங்குவதாய் சொல்ல வாறீங்களோ?

இதேவேளை இன்று காவல்துறையினர் மக்களுக்கு விடுடுத்திருக்கும் செய்தியில் முட்டையை பொரிக்கும் போது குசினி கதவை மூடிவிட்டு பொரிக்குமாரும் சந்தேகத்துக்கு இடமானவர்கள் உங்கள் இல்லங்களுக்கு அருகில் நட(ன)ம் ஆடினால் அவசர எண்னுக்கு தொடர்புகொள்ளுமாறும் கேட்டிருக்கின்றனர்...

News By SNS news Service...

Thansk to dubakkur.com

மேலும், திறந்த சட்டியில் முட்டையை பொறிக்காது மூடிய சட்டியினுள் வைத்து பொரிக்குமாறு கேட்டுள்ளனர். இறந்தவர்களின் ஆவிகள் முட்டை மஞ்சள் கருவில் வாய்வைக்கக்கூடும் என்று காவல்துறையினர் சந்தேகிப்பதே இதற்கான காரணமாகும்.

பிந்தி கிடைத்த கலநிலவரம் என்ன??? :lol:

வெள்ளைக்கருமீது மஞ்சள் துளை தூவி மஞ்சள் கருபோல மாற்றி மோசடி செய்து முட்டைப்பொரியல் விற்ற பல உணவகங்களை தாம் சீல்வைத்து மூடியுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.