Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவை வென்ற இளைஞன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘‘மறுபிறவி எடுத்து வந்தது மாதிரி இருக்கு. குழந்தைகளுக்கான தடுப்பூசிகளில்

ஆரம்பித்து வாழ்க்கையில் எல்லாத்தையுமே இனிதான் புதுசா தொடங்கணும்.

இனிமே எனக்கு ரெண்டு அம்மா. இவங்க சுபலட்சுமி சண்முகம். என்னைப்

பத்து மாசம் சுமந்து பெத்த அம்மா. இவங்க சாந்தி சுரேஷ். இந்த இரண்டாவது

பிறவியை எனக்குத் தந்த என் நண்பன் அருணோட அம்மா’’ இரண்டு

அம்மாக்களுக்கும் நடுவே குழந்தையாகச் சிரிக்கிறார் விக்னேஷ்வரன்.

p123beg2.jpg

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கிட்டத்-தட்ட கைவிடப்-பட்ட நிலையில்,

தன் இறுதி நாட்களை எண்ணிக்-கொண்டு இருந்தவர் விக்னேஷ்வரன். அண்ணா

பல்கலைக்கழக கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் மாணவர். பல நல்ல உள்ளங்கள் சேர்ந்து

தேர் இழுத்ததன் பலன்... ‘ஸ்டெம் செல்’ சிகிச்சை முடிந்து புதிய வாழ்க்கையைத்

தொடங்கி இருக்கிறார் விக்னேஷ். சென்னை கோட்டூர்புரத்தில் அடுக்குமாடிக்

குடியிருப்பு வீட்டில், ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தோஷம் துளிர்விட

ஆரம்பித்திருக்கிறது.

‘‘என் பையனும் இப்போ சின்னக் குழந்தை மாதிரிதான். யாராவது தும்மினால்கூட

அவனுக்குத் தொற்றிவிடும். இதனால் வீட்டுக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்க்கிறோம்.

அவன்எங்களுக்குத் திரும்பக் கிடைச்சதே பெரிய அதிசயம். எந்தத் தாய்க்கும் தன்

பிள்ளையை இப்படிப் பார்க்கிற நிலை வரக் கூடாது. ‘என்னை எடுத்துக்கோ, என்

பிள்ளையை விட்டுடு’ன்னு நான் சாமிகிட்ட வேண்டாத நாள் கிடையாது. கடவுள்

அருளால் என் பிள்ளை எனக்குத் திரும்பக் கிடைச்சுட்டான்’’ பொங்கும் கண்ணீரைத்

துடைத்துக்கொண்டே புன்னகைக்கிறார் விக்னேஷின் தாய்.

‘‘ஸ்கூல் படிக்கும்போதே எனக்கு ரத்தப் புற்றுநோய் இருக்கிற விஷயம் தெரியவந்தது.

‘முழுக்க குணப்படுத்த முடியாது ‘கீமோ-தெரபி’யால் கொஞ்ச காலம் ஆயுளை நீட்டிக்கலாம்.

அவ்வ ளவு-தான்’னு டாக்டர்கள் சொன்னாங்க. நாளாக ஆக ரத்தத்தில் புற்றுநோய்

செல்களின் எண்ணிக்கை அதிகமாகி, போன வருஷம் ‘கீமோதெரபி’யாலும் இனி

காப்பாற்ற முடியாதுன்னு கை விரிச்சுட்டாங்க. ‘இனிமே நான் பிழைக்க வாய்ப்பே

இல்லையாம்மா?’ன்னு அம்மாவிடம் கேட்பேன். இப்படி வருத்தத்தோட நான் பேசிட்டு

இருப்பதைப் பார்த்த என் நண்பன் அருண், அவங்க அம்மாவிடம் என் கதையைச்

சொல்லியிருக்கான். அவங்க எடுத்த முயற்சிதான், இன்னிக்கு நான் உயிருடன்

இருப்பதற்குக் காரணம்.

p123es5.jpg

சுத்தமா நம்பிக்கை இழந்து, இனி அவ்வளவுதான்னு இருந்தபோது, கடைசியா

இன்னொரு முயற்சி செய்து பார்ப்போம்னு நம்பிக்கை கொடுத்தாங்க அருண் அம்மா.

‘கார்ட் பிளட் டிரான்ஸ்பிளான்டேஷன்னு ஒரு சிகிச்சை இருக்கு. அப்படி முயற்சி

பண்ணினா, ஒருவேளை பிழைக்க வாய்ப்பு இருக்கு’ன்னு டாக்டர் கிருஷ்ணரத்தினம்

சொன்னதும் எங்களுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. ஆனா, ஒரு கோடிக்கும் அதிகமா

செலவாகும்னு டாக்டர் சொன்னதும் துவண்டுட்டோம்.

அண்ணா பல்கலைக்கழகத் துணை-வேந்தர், அருண் அம்மா எல்லோரும் சேர்ந்து

என் மருத்துவத்துக்காக பணம் திரட்ட ஆரம்பிச்சாங்க. எல்லாப் பத்திரிகைகளிலும்

விளம்பரம் கொடுத்தாங்க. ‘www.savevigneshwaran.com’னு தனியா ஒரு வெப்சைட்

ஆரம்பிச்சாங்க. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களும் ஐ.டி. துறையைச்

சேர்ந்தவங்களும் பெரிய அளவில் உதவினாங்க. நம்பவே முடியாது... கிட்டத்தட்ட

ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் சில மாதங்களிலேயே சேர்ந்துவிட்டது.

சிங்கப்பூர் சென்று பிரபல டாக்டர் பேட்ரிக் டேன் என்பவரிடம் சேர்ந்தோம். என்ன

மாயம் செய்தாரோ தெரியலை. அவர்தான் எனக்கு இரண்டாம் பிறவி தந்தார்’’

என்கிறார் விக்னேஷ்வரன்.

p123aqr8.jpg

இவருக்குக் கொடுக்கப்பட்ட ‘ஸ்டெம் செல்’ சிகிச்சை பற்றி விளக்குகிறார் டாக்டர்

கிருஷ்ண ரத்தினம்... ‘‘ரத்தப் புற்றுநோயில் மூன்றாவது முறை ‘ரிலாப்ஸ்’ ஆன பிறகு,

ஒருவர் அதிக நாள் உயிரோட இருப்பதெல்லாம் சாத்தியமே கிடையாது. ஒரே வழி

‘கார்ட் பிளட் டிரான்ஸ்பிளான்டேஷன்’ தான். ரத்தத்தில் இருக்கிற புற்றுநோய் செல்களை

மட்டும் தனியாக அழிக்க முடியாது. அதனால், அவரது உடம்பில் இருக்கிற ரத்த

அணுக்கள் அனைத்தையும் கொன்று வெளியேற்றிவிட்டு, புது ரத்தத்தைச் சுரக்கச்

செய்வது. பழைய ரத்தம் வெளியேறும்போது அதோடு சேர்ந்து புற்றுநோய் செல்களும்

வெளியேறிவிடும்.

அடுத்து, குழந்தை பிறக்கும்போது தொப்புள் கொடியில் இருந்து

எடுக்கப்படும் கார்ட் பிளட்டை அவர் உடலில் செலுத்தினால் அது புதிய ரத்தத்தைச்

சுரக்கச் செய்யும். ரத்தத்தை உருவாக்குகிற அம்மா செல்களை அழிச்சு, புது அம்மா

செல்களை உடம்பில் செலுத்துவதுதான் இந்த சிகிச்சை. வெற்றிகரமா சிகிச்சை

முடிந்து, விக்னேஷ் திரும்பி இருக்கிறான். இதுவரை AB +ve ரத்தம் ஓடிக்கொண்டு

இருந்த விக்னேஷ் உடலில், இப்போது புதுசாகச் சேர்ந்-திருக்கிற B +ve ரத்தம்தான்

ஓடும்.

உடம்பிலுள்ள ரத்த செல்களை அழிக்கும்போது அதில் இருக்கிற நோய் எதிர்ப்பு

சக்தி எல்லாமே அழிந்துவிடும். அதனால்தான் சின்னக் குழந்தைக்குப் போட வேண்டிய

எல்லா தடுப்பூசிகளையும் விக்னேஷ§க்குப் போட்டுட்டு இருக்கோம். ட்ரீட்மென்ட்

முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு. இனிமே பல்கலைக் கழகம் சென்று விக்னேஷ்

படிப்பைத் தொடரலாம்’’& நம்பிக்கை-யுடன் பேசு கிறார் டாக்டர் கிருஷ்ணரத்தினம்.

‘புது ரத்தம் பாய்ந்த மாதிரி இருக்கு!’ என்பார்களே...

விக்னேஷ்வரன் விஷயத்தில் அதுதான்!

vikatan.com

Edited by pepsi

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விஞ்ஞான உலகில் எதுவும் சாத்தியம் என விக்னேஸ்வரன் நிரூபித்துள்ளார்.

அட நாமும் கணணி வைரஸ் வந்தா Windows XP ஐ தூக்கிட்டு Windows Vista ஐ நிறுவி மீண்டும் புதிதாக AntiVirus Scanner போடுவது போல ரொம்ப சுலபமான விசயம்!

B+ = be positive

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.