Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுக் குரலை ஒடுக்க முனையும் இந்திய அரசு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவு: டிஜிபி எச்சரிக்கை

சென்னை: தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பொதுக் கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்டவை நடத்தினால் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் கூட்டங்கள், பேரணிகள் நடத்தியுள்ளனர். முதல்வர் கருணாநிதியும் இரங்கல் கவிதையை வெளியிட்டிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முத்தாய்ப்பாக, கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில், முதல்வர் கருணாநிதியை விமர்சித்து மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசப் போக தமிழகம் அவரது கொடும்பாவிகளை தூக்கில் போட்டும், எரித்தும் போராட்டம் நடந்து வருகிறது. இதைக் கண்டித்து காங்கிரஸாரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழக டிஜிபி ராஜேந்திரன் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், உள்ளிருப்புக் கூட்டங்கள், பட்டிமன்றங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துபவர்கள், ஆர்ப்பாட்டங்கள், உருவ பொம்மைகள் எரித்தல், சாலை மறியல் செய்தல் போன்ற போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புகள், தனி நபர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (1967) கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தல், சுவர் விளம்பரங்கள் செய்தல், கண்காட்சி நடத்துதல் மற்றும் எவ்வித ஆதரவு செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது.

மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடும் அச்சக உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பொது இடங்களில் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ்.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- இராமேஸ்வரத் தமிழ் மீனர்வர்களது பாதிப்பிற்கே கவலை கொள்ளாத இந்தி(ய) அரசு இயந்திரம்.

சிறிலங்கா அரசின் செயற்பாடுகளுக்குப் பின் மறைமுகமாக இருந்துகொண்டு திரை மறைச் செயல்கள் புரிந்துவவரும் இந்த இந்தி(ய) அரசு இயந்திரம் தனது ஆளுகைக்குட்பட்ட தமிழகத்தில் ஏற்படும் பரிவலைகளைக் கண்டு விசனம் கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

வெறும் சினிமாக்களால் கிளுகிளுப்பூட்டி, சாதியப் பிரிவுககளுக்குள் தமிழகத் தமிழர்களை முடக்கி ஆளும் அரசு இயந்திரம் இதையும் மீறியதான தமிழின உணர்வு பெறுவதைக் கண்டு சகிக்கும் நிலையில் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

மக்களது மனங்களை வென்றெடுத்த தலைவர்கள் தொடர்பான எழுச்சியை அரசு இயந்திரக் கட்டுமானத்தால் ஒடுக்க முடியுமா?

- இவ்வகை ஒடுக்குதல் மேன்மேலும் கிளர்ந்தெழும் நிகழ்வுக்கே வழிகோலும்.

- ஆனாலும் தமிழகத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவின் உயிர்ப்பை உலகத் தமிழினம் உணர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் தமிழனுக்கு என்ன அந்தச்தோ அதுதான் இந்தியாவில் தமிழனுக்குள்ள அந்தச்து. நாங்கள் எல்லோருமே ரெண்டாம் தர குடிமக்க்ள். ரெண்டு இடத்திலும் அடிபடுவது தமிழந்தானே! தமிழன் உயிருக்கும், உணர்வுக்கும் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு ?!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் வெட்டிப் பேச்சிலேயே காலத்தை கடத்தி வருகின்றோம். இது மறுக்க முடியாத உண்மை. எமது அரசியல் வெளிநாட்டு கொள்கையில் பாரிய மாற்றம் வேண்டும்.

தொடர்ந்து தமிழக தலைவர்களை நம்பி இருப்பது அவர்களின் பேச்சுக்களுக்கு மதிமயங்குவது நிட்சயமாக தவிர்க்க படல் வேண்டும்.

முக்கியமாக புலிகளின் வெளிநாட்டு அரசியல் புலனாய்வு பிரிவு மிகவும் திறம்பட இயங்குதல் வேண்டும்.

தமிழகத்தில் புலிகளின் ஆதரவாளர் போல ரோவின் ஆட்கள் நீண்ட காலமாக இயங்கிவரக்கூடிய சாத்தியமும் இருக்கின்றது என்பதையும் கவனத்தில் எடுத்தல் வேண்டும்.

அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை மிக கவனமாக புலிகள் ஆராய்வதுஅவசியம்.

தொலைத் தொடர்புகள் மிகவும் அவதானமாக கையாளப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.