Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு தாக்குதலுக்கு கண்டனம்- வன்னி மோதலில் பொதுமக்கள் சிக்குவது குறித்து கவலை: ஐரோப்பிய ஒன்றியம்

Featured Replies

கொழும்பு தாக்குதலுக்கு கண்டனம்- வன்னி மோதலில் பொதுமக்கள் சிக்குவது குறித்து கவலை: ஐரோப்பிய ஒன்றியம்

[வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 09:03 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்]

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வன்னி, கொழும்பு ஆகிய மோதல் நிகழுமிடங்களில் பொதுமக்களும் சிக்கிக் கொள்வது குறித்து கவலைப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் திட்டமிட்ட வகையிலான பொதுமக்களின் மீதான தாக்குதல்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவிக்கிறது. இத்தகைய தாக்குதல்களை எந்த அரசியலின் கீழும் நியாயப்படுத்த முடியாது. இது சாதாரண இலங்கையருக்கு ஆழ்ந்த துயரையும் பாதிப்பையுமே ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வன்னி அல்லது கொழும்பு அல்லது எங்கேயானாலும் இலங்கை இன மோதலில் அப்பாவி பொதுமக்கள் சிக்கிக் கொள்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மீளவும் பாரிய கவலை கொள்கிறது. அனைத்துலக மனிதாபிமான சட்டத்தின் படியாக மேலதிகமாக பொதுமக்களுக்கான பாதிப்பை தொடர்புபட்ட தரப்புக்கள் தவிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 30-11-2007 01:22 மணி தமிழீழம் [மயூரன்]

குண்டு வெடிப்புக்களை ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்களை, பயங்கரவாத செயல்களாக வர்ணித்து, ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில், இன்று அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம், கொழும்பில் நேற்று இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்கள், எந்தவகையான அரசியல் நியாயப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்றும், மாறாக இவை சாதாரண குடிமக்களின் துன்பத்தை அதிகரிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும், குறிப்பிட்டுள்ளது.

கொழும்பாயினும், வன்னி ஆயினும், வேறு எந்த இடமாயினும், மோதல்களில் பொதுமக்கள் கொல்லப்படுவது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கவலையை ஏற்படுத்துவதோடு, அனைத்துலக மனிதநேய சட்டங்களுக்கு அமைய, பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு சகல தரப்புக்களும் முற்பட வேண்டுமென எதிர்ப்பார்ப்பதாகவும், பிரித்தானிய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேபாணியில் அறிக்கையொன்றை விடுத்திருக்கும் பிரஞ்சு அரசாங்கம், கொழும்பில் நேற்று நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதல்களை தாம் கடுமையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, கொழும்பில் நேற்று இடம்பெற்ற இரட்டைவெடிகுண்டுத் தாக்குதல்களையும், வன்னியில் கடந்த 27ஆம் நாளன்று, பள்ளிச் சிறார்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்ட நாசகார கிளைமோர் தாக்குதலையும் கண்டித்து, இன்று அமெரிக்;க அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எனினும் இதில் சிறீலங்கா அரசாங்கத்தை நேரடியாக கண்டிப்பதை, அமெரிக்க அரசாங்கம் தவிர்த்துள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

-IBC-

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

உதை இலங்கை அரசுக்கும் நேரடியாக சொல்லுங்கோவன் பிரச்சனை முடிஞ்சுது.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் தந்திரோபாயங்களைத்தான் இலங்கைக்கும் பல அயோக்கிய நாடுகளும் வழங்கிவந்தன............

அவை இன்றளவிலும் வெற்றியும் கண்டன காரணம் புலிகள் ஒருபோதும் மக்களை இலக்காக்க மாட்டார்கள் என்ற துணிவு அவர்களிடத்தில் அசையாமல் இருந்தது. இருப்பினும் தற்போதைய இலங்கை அரசிற்கு அதில் சந்தேகம் இருந்தது காரணம் புலிகள் கை நீட்டினால் எதுவரை நீளும் என்பது புலிகளுக்கு மட்டுமே தெரியும். அது யாருக்கும் தெரியாது............

இப்போது எமது விரலை நீட்டினாலே எங்கு மட்டும் நீளும் என்று தெரிந்து வைத்து கொள்ளுங்கள் என்பதற்கு ஒரு சிறிய உதாரணமே இது................ அதுதான் உடனே பதறி அடித்து கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

ஆனாலும் ............ புலிகளின் விரல் இன்னமும் கொஞ்சம் நீண்டால் ............. உடனே வெண்புறா வேடமிட்டு பேசுங்கள் என்பார்கள் ஆதுதான் புலிகள் முடிந்த அளவில் இம்முறை இவர்களின் நாடகத்தை பொறுமையோடு பார்த்துக்கொண்டிருக்கின்றா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.