Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அணிக்கு பயிற்சியளிக்க அழைப்பு வந்தபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகின்றார் ஹேஸ்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணிக்கு பயிற்சியளிக்க அழைப்பு வந்தபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகின்றார் ஹேஸ்டன்

[30 - November - 2007] [Font Size - A - A - A]

கோடிகளில் புரளும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஒருவழியாக அணிக்கு புதிய பயிற்சியாளரை இனம் கண்டுள்ளது.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் இடதுகை ஆட்டக்காரரான கேரி ஹேஸ்டனை பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் ஹேஸ்டனின் பெயர் இல்லாதது கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விண்ணப்பித்தோர் பலர் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இந்திய அணிக்கு பயிற்சியாளராகப் போகும் ஹேஸ்டன் கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது;

இந்திய அணிக்குப் பயிற்சியளிக்க அழைப்பு வந்தபோது அதிர்ச்சியடைந்தேன். இருந்தாலும், அம்முடிவு ஆலோசனையில் தான் உள்ளது. ஒருவேளை அப்பொறுப்பு அளிக்கப்பட்டால் அது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்.

எப்போது வந்தது அழைப்பு? ஒரு மாதத்துக்கு முன் பி.சி.சி.ஐ.யிடமிருந்து அழைப்பு வந்தது. அதை உணர்ந்து பதில் அளிக்க சிறிது நேரம் பிடித்தது. பின்னர் நேரில் வந்து பதில் அளிக்க வேண்டுமா எனக் கேட்டேன். எல்லாம் ஒரு வார காலத்தில் முடிந்தது.

நேர்காணல் எப்படி? பி.சி.சி.ஐ. `கோச்சின்' குழு உறுப்பினர்களைச் சந்தித்தேன். சில மணி நேரம் நேர்காணல் நடந்தது. ஆனால், இதுவரை முறையாக ஒப்பந்தம் எதையும் பெறவில்லை. ஆனால், எல்லாம் விரைவாக நடக்கிறது.

பி.சி.சி.ஐ. மூடிமறைத்தது ஏன்? கிரஹம் போர்டை நியமிக்க முயற்சித்தபோது நடந்தது மாதிரி அல்லாமல் இரகசியமாக நடப்பதையே நான் விரும்பினேன். பயிற்சியளிக்கப் போவது குறித்து யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை.

எப்போது முடிவு, அடுத்து? பி.சி.சி.ஐ. ஒரு வாரத்துக்குள் முடிவைச் சொல்லக் கூறியது சரியே. குடும்பம் எனக்கு மிகவும் முக்கியம். 2 குழந்தைகள் உள்ளன. சர்வதேச கிரிக்கெட் என்றால் அதிகமான நாள் குடும்பத்தைப் பிரிந்திருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். குடும்பத்துடன் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வந்ததும் பி.சி.சி.ஐ.யிடம் முடிவைத் தெரிவிப்பேன். தற்போதைய நிலையில் எல்லாம் சிறப்பாக நடக்கும் எனத் தெரிகிறது.

பயிற்சியளித்த அனுபவம் இல்லையே ? பயிற்சி அனுபவம் இல்லை என்பது பிரச்சினையாகத் தெரியவில்லை. வீரர்களுக்கு எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் எனச் சொல்லப்போவதில்லை. அவர்கள் அனைவரும் நல்ல அனுபவம் உள்ளவர்கள். அவர்களது திறமையை நம்பிக்கையுடன் எப்படி வெளிக்காட்ட வேண்டும் என்பதைக் கூறுவதே எனது முக்கியபணி.

எப்போது சேருவீர்கள்? பாகிஸ்தானுடனான பெங்களூரில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியின்போது அணியுடன் இணைய நிச்சயம் வாய்ப்பில்லை. எப்போது சேருவது என்ற பிரச்சினை உண்மையிலேயே உள்ளது. அநேகமாக அடுத்த ஆண்டு இணையலாம். அவுஸ்திரேலியத் தொடரின் பாதியில் இணையலாம் என நினைக்கிறேன். ஒரு வாரத்தில் உறுதி தெரிய வரும்.

40 வயதாகும் ஹேஸ்டன் 101 டெஸ்ட் போட்டிகளிலும் (7289 ஓட்டங்கள்) , 185 ஒரு நாள் போட்டிகளிலும் (6798 ஓட்டங்கள்) விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக 275 ஓட்டங்களும் ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 188 ஓட்டங்களும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 21 சதமும் ஒருநாள் போட்டிகளில் 13 சதமும் அடித்துள்ளார்.

http://www.thinakkural.com/news/2007/11/30...s_page41301.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.