Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா, பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் மோதல் : 9 படையினர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனி 01-12-2007 18:30 மணி தமிழீழம் [மோகன்]

மன்னாரில் உக்கிர மோதல்கள்: 3 படையினர் பலி! 10 படையினர் காயம்

மன்னார் முன்னரங்க நிலைகளில் சிறீலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாந்தை தெற்கு அடம்பன் பிரதேசத்தில் நடைபெற்ற மோதலின் போது அரசாங்கப் படைகள் தரப்பில் 3 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 10 படையினர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

மன்னார் அடம்பன் முன்னரங்கப் பகுதி யில் நேற்றுக்காலை முதல் நீண்டநேரம் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக் கும் இடையில் கடும் மோதல்கள் இடம் பெற்றதாகப் பாதுகாப்பு அமைச்சு ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்தது.

இந்த மோதல்களில் விடுதலைப் புலி களின் தொடர் பதுங்கு குழிகள் அழிக்கப் பட்டதாகவும் 24 புலி உறுப்பினர்கள் கொல் லப்பட்டனர் என்றும் படைத்தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மோதலில் 4 படையினர் கொல் லப்பட்டனர். 14 படையினர் காயமடைந் தனர் என்றும் ஊடக நிலையம் தெரிவித்தது.

இந்த மோதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் நேற்றிரவு வரை வெளியாகவில்லை.

அதேவேளை

முகமாலைப் பகுதியில் நேற்றுமுன் தினம் நடந்த மோதலில் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் மற்றொருவர் காயமடைந்தார் என்றும் அறிவிக்கப்பட் டுள்ளது.

வெலிஓயாவிலும் மோதல்கள் இடம் பெற்றன என்றும் அதில் புலிகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது என்றும் படைத்தரப் பில் கூறப்பட்டது.uthayanpmuz6.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய பண்டிவிரிச்சான் பகுதி படையினர் வசமா????

புலிகளின் முக்கிய முன்னணி நிலையொன்றை படையினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் வவுனியா மேற்கு பெரிய பண்டிவிரிச்சான் பகுதியை படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். நேற்றுக்காலை முதல் இடம்பெற்ற மோதல்களை அடுத்தே புலிகளின் இம்முக்கிய நிலையை படையினர் கைப்பற்றியுள்ளனறாம்

இவ் மோதலின்போது 20 புலிகள் கொல்லப்பட்டும் 25 வரையிலானோர் காயமடைந்துள்ளதாகவும் தமது தரப்பில் 6பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அடம்பன் தெற்கு நோக்கிய இராணுவ நடவடிக்கையின்போது 23 புலிகள் கொல்லப்பட்டும் 57பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், இதன்போது மூன்று படையினர் காயமடைந்துள்ளதுடன் 20பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், மாந்தை, முள்ளிக்குளம், திருக்கேதீஸ்வரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற மோதலின்போது இரு படையினர் கொல்லப்பட்டும் 6பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 4:15 மணியளவில் வவுனியா பெரியதம்பனை பகுதியில் இடம்பெற்ற மோதலின்போது புலிகளின் 4 பதுங்கு நிலைகள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் இதன்போது ஏற்பட்ட மோதலில் புலிகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Edited by yarlpriya

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 02-12-2007 17:02 மணி தமிழீழம் [மயூரன்]

வவுனியா, பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் மோதல் : 9 படையினர் காயம்

சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் வவுனியா, பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இம்மோதல்களில் பொறிவெடியில் சிக்கி மூன்று படையினர் காயமடைந்துள்ளதாகவும் மோட்டார் எறிகணைத்தாக்குதலில் 6 படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகமையம் தகவல் வெளியிட்டுள்ளது.

பதிவு.கொம்

இரு நாட்களாக மன்னாரில் மோதல்: 12 படையினர் பலி! 80 படையினர் படுகாயம்

மன்னார் முன்னரங்க நிலைகளில் சிறீலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இன்றைய மோதலின் போது 6 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 40 வரையிலான படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் சிறிலங்காப் படையினர் நடத்திய முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாந்தை, திருக்கேதீஸ்வரம், அடம்பன் முருங்கள் ஆகிய பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகளின் பகுதிகள் நோக்கி முன்னகர்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது 4 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 25 படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டு 6 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளிலும் கண்ணிவெடிகளிலும் சிக்கி 9 படையினர் கால்களையும் அவயவங்களையும் இழந்துள்ளனர்.

இதுபோன்று நேற்று மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல் முயற்சி விடுதலைப் புலிகளால்ம முறியடிக்கப்பட்டுள்ளது.

கிளைமோர் பொருத்த முற்பட்ட ஆழ ஊடுருவும் அணியினர் விடுதலைப் புலிகள் திருப்பித் தாக்கியதில் கிளைமோர்களையும் வெடி பொருட்களையும் கைவிட்டு படையனிர் தப்பியோடியுள்ளனர்.

http://www.pathivu.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 02-12-2007 23:22 மணி தமிழீழம் [மோகன்]

இரு நாட்களாக மன்னாரில் மோதல்: 12 படையினர் பலி! 80 படையினர் படுகாயம்

மன்னார் முன்னரங்க நிலைகளில் சிறீலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இன்றைய மோதலின் போது 6 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 40 வரையிலான படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் சிறிலங்காப் படையினர் நடத்திய முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாந்தை, திருக்கேதீஸ்வரம், அடம்பன் முருங்கள் ஆகிய பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகளின் பகுதிகள் நோக்கி முன்னகர்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது 4 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 25 படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டு 6 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளிலும் கண்ணிவெடிகளிலும் சிக்கி 9 படையினர் கால்களையும் அவயவங்களையும் இழந்துள்ளனர்.

இதுபோன்று நேற்று மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல் முயற்சி விடுதலைப் புலிகளால்ம முறியடிக்கப்பட்டுள்ளது.

கிளைமோர் பொருத்த முற்பட்ட ஆழ ஊடுருவும் அணியினர் விடுதலைப் புலிகள் திருப்பித் தாக்கியதில் கிளைமோர்களையும் வெடி பொருட்களையும் கைவிட்டு படையனிர் தப்பியோடியுள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

வடபகுதியில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா இராணுவம் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.