Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்திசாலி சிம்பன்சி குரங்குகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_44275652_counting_203.jpg

இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், கணித எண்களை நினைவு வைத்துக் கொள்வதில் மனிதர்களை விட புத்திசாலியாக செயல்பட்ட சிம்பன்சி குரங்கு பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பார்க்கலாம்.

அயுமு என்கிற சிம்பன்ஸி குரங்குக்கும் கியோடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கும் இடையில் ஒரு போட்டி நடத்தப்பட்டது.

அதாவது அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் கணினியின் தொடு திரையில் வரிசையாக எண்கள் தோன்றி மறையும். ஒரு நொடியை விட மிகவும் குறைந்த காலத்திற்கு மட்டுமே இந்த எண்கள் திரையில் தோன்றி கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விடும். அடுத்து, அந்த எண்கள் தோன்றி மறைந்த இடத்தில் இருக்கும் வெண் சதுர கட்டங்களை, எண்கள் தோன்றிய வரிசைக்கிரமப்படி தொட்டு அடையாளம் காணவேண்டும் என்பது தான் போட்டி.

இதில், அயுமு சரியாக அடையாளம் காட்டி ஆராய்ச்சியாளர்களை அசத்தியது. ஆனால் 9 பல்கலைக்கழக மாணவர்களால் இதை செய்யமுடியவில்லை. அவர்கள் அனைவருமே அடையாளம் காணமுடியாமல் திணறினார்கள்.

இதிலிருந்து, குறுகியகால நினைவாற்றல் என்கிற திறனில், மனிதர்களைவிட, சிம்பன்சிகள் புத்திசாலிகளாக இருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டிருப்பதானது, இந்த ஆய்வை மேற்கொண்ட கியோட்டோ பல்கலைக்கழக பேராசிரியர் மட்சுசாவா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

இதில் சுவாரஸ்யமான விடயம் என்னெவென்றால், இந்த பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்ல, ஆக்ஸ்போர்டிலிருக்கும் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் குரங்கினங்கள் குறித்து ஆராயும் பேராசிரியரான சைமன் பியார்டர் அவர்களும் இந்த சிம்பன்சியிடம் இதற்கு முன்பு நடத்தப்பட்ட சோதனைகளில் தோற்றுவிட்டார் என்பதுதான்.

இப்படியான எண்களை நினைவில் வைத்துக் கொள்ளும் விடயத்தில், சிம்பன்சிகளைவிட மனிதர்களின் திறமை குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று தற்போது ஆராய்ச்சியாளர்கள் விவாதித்து வருகிறார்கள்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதாவது மனிதர்களுக்கும் முன்பு இது போன்ற எண்கள் தொடர்பான குறுகிய கால நினைவாற்றல் அதிகமாக இருந்ததாகவும், காலப்போக்கில் மனிதர்கள் மொழிகளைக்கற்றுக் கொண்டு பேசத் துவங்கியதால், மூளையில் மொழிகளுக்கான இடம் அதிகமானதால், எண்கள் தொடர்பான திறமை குறைந்து விட்டிருக்கலாம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

எது எப்படியோ, இனிமேல் குரங்கை விட மனிதன் புத்திசாலி என்று பொத்தாம் பொதுவாக சொல்லிக்கொள்ள முடியாது. எண்கணித நினைவாற்றலில் மனிதர்களின் மூதாதையர்களாக கருதப்படும் குரங்குகள், தற்கால மனிதர்களைவிட திறமையானவர்கள் என்று இந்த சிம்பன்சிகள் நிரூபித்திருக்கின்றன.

bbc.co.uk/tamil

Edited by nedukkalapoovan

அட உண்மையாவோ நெடுக்ஸ் தாத்தா அக்சுவலா என்ட மம்மி வந்து என்னை கொஞ்சம் ஓவரா குழப்படி செய்தா லொள்ளு பண்ணிணா "குரங்கு" என்று எல்லாம் ஏசுறவா :lol: இப்ப தான் விளங்குது மம்மி ஏன் அப்படி ஏசினவா என்று :( ..........மம்மி யூ ஆர் கிரேட்............ :lol:

எங்கே எங்களின்ட "ஆதி" :unsure: ..........அவரை பற்றிய டிஸ்கசனில அவரை காணவில்லை ஆனாலும் ஆதிக்கு வாழ்த்துகள்! :lol: !

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"மனிசன் மனிசனோட தான் இவ்வளவு நாளும் போட்டி போட்டான் இப்ப குரங்கோடையுமா" :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட உண்மையாவோ நெடுக்ஸ் தாத்தா அக்சுவலா என்ட மம்மி வந்து என்னை கொஞ்சம் ஓவரா குழப்படி செய்தா லொள்ளு பண்ணிணா "குரங்கு" என்று எல்லாம் ஏசுறவா :lol: இப்ப தான் விளங்குது மம்மி ஏன் அப்படி ஏசினவா என்று :D ..........மம்மி யூ ஆர் கிரேட்............ :lol:

எங்கே எங்களின்ட "ஆதி" :unsure: ..........அவரை பற்றிய டிஸ்கசனில அவரை காணவில்லை ஆனாலும் ஆதிக்கு வாழ்த்துகள்! :lol: !

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"மனிசன் மனிசனோட தான் இவ்வளவு நாளும் போட்டி போட்டான் இப்ப குரங்கோடையுமா" :D

இந்த அம்மாமாருக்கு புத்தியே இல்ல. நம்மளப் பார்த்துக் குரங்குன்னா.. நம்மளப் பெற்றவங்க குரங்குன்னுதானே அர்த்தம். நம்மளச் சொல்லுறன்னு அம்மாமார் தங்களையே சொல்லிக்கிறாங்க. அறியாமை அறியாமை..! அப்பாமார் இப்படியான விடயங்களில கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பினம்..! :(:(

இந்த ஆய்வின் காணொளியில படு உசாரா அட்டகாசமா குழப்படிபன்னாம.. வெகு ஸ்ரைலா.. குரங்கார் பங்களிப்புச் செய்வதைக் காணலாம்..!

காணொளியை இந்த அறிவியல் செய்தியிடப்படும் புளாக்கர் இணைப்பில் பாருங்கள்..

http://kuruvikal.blogspot.com/

Edited by nedukkalapoovan

இந்த அம்மாமாருக்கு புத்தியே இல்ல. நம்மளப் பார்த்துக் குரங்குன்னா.. நம்மளப் பெற்றவங்க குரங்குன்னுதானே அர்த்தம். நம்மளச் சொல்லுறன்னு அம்மாமார் தங்களையே சொல்லிக்கிறாங்க. அறியாமை அறியாமை..! அப்பாமார் இப்படியான விடயங்களில கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பினம்..!

இந்த ஆய்வின் காணொளியில படு உசாரா அட்டகாசமா குழப்படிபன்னாம.. வெகு ஸ்ரைலா.. குரங்கார் பங்களிப்புச் செய்வதைக் காணலாம்..!

காணொளியை இந்த அறிவியல் செய்தியிடப்படும் புளாக்கர் இணைப்பில் பாருங்கள்..

http://kuruvikal.blogspot.com/

ம்ம்ம் தாத்தா நாம குரங்கு என்றா அவையும் குரங்கு தான் நீங்க சொல்லுறது சரி தான் ஆனாலும் அம்மா வந்து அம்மா தான் தாத்தா :D ...........அப்பாமார் அடக்கி வாசிப்பீனம் இந்த விசயத்தில பட் ஒவ்வொன்றிலையும் பிழை பிடிப்பீனம் :D பட் மம்மி அப்படி இருக்கமாட்டா அல்லோ :lol: அத்தோட ஜம்மு பேபியை அப்பாட்ட இருந்து காப்பாற்றுறது மம்மி அல்லோ :D சோ மம்மி கிரேட் பட் அப்பாவும் தான் கிரேட் தான் தாத்தா!! :)

அது சரி தாத்தா யாரந்த குருவி நல்லா இருக்கு அவரின்ட புளோக் இன்றைக்கு தான் பார்தேன் நல்ல பிரயோசனமான பல விசயம் போட்டு இருகிறார் :lol: எனி அடிகடி போய் பார்கிறேன் :D ........அவரை உங்களுக்கு தெரிந்தா அவருக்கு பேபி வாழ்த்து சொன்னது என்று சொல்லிவிடுங்கோ!! :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.