Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கும் படையினரின் போராட்டம் எதிரானது - விமல்

Featured Replies

சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கும் படையினரின் போராட்டம் எதிரானது - விமல்

முப்படையினரின் போராட்டம் விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக மாத்திரம் அல்ல சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளுக்கும் எதிரானது. அதனாலேதான் யுனெஸ்கோ, யுனிசெப், ஸ்கண்டிநேவிய நாடுகள் மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்க, பிரித்தானிய தூதுவர்கள் புலிகளை காப்பாற்ற முற்படுகின்றனர் என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடன் பேசித் தீர்வு காணுமாறு ஆலோசனை கூறும் ஐ.நா.

காஷ்மீர்த் தீவிரவாதிகளுடனும் பின்லேடனுடனும் பேச வற்புறுத்துமா?

நாடாளுமன்றில் விமல் வீரவன்ஸ சவால்

பயங்கரவாதியான பிரபாகரனுடன் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு ஒன்றைக் காணவேண்டும் என ஆலோசனை கூறும் ஐக்கிய நாடுகள் சபை, காஷ்மீர் தீவிரவாதிகளுடனும் பின்லேடனுடனும் அல் குவைதாவுடனும் பேசி அரசியல் தீர்வு காணவேண்டும் என அழுத்தம் கொடுக்க முன்வருமா ?

இவ்வாறு ஜே.வி.பி. பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான விமல் வீரவன்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி சர்வதேச அமைப்புகளுக்கு சவால் விடுத்தார்.

நாட்டில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைக் கண்டித்து வரவு செலவுத்திட்டத்திற்கு நாம் பொது எதிர்ப்புத் தெரிவித்தபோதும் நாட்டின் நலனில் அக்கறையுள்ளவர்கள் என்ற வகையில் தனித்துப் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு முழு ஆதரவையும் வழங்குகிறோம் எனவும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் நேற்றுக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

இலங்கை அரசையும் பயங்கரவாதப் புலிகளையும் சமநிலையில் வைத்து எம்மீது கண்டனம் தெரிவிக்கும் சர்வதேச அமைப்புகளின் தலையீட்டை நாம் உடைத்தெறியவேண்டும்.

போரினால் இரையாகும் சிவிலியன்களின் தொகை அதிகரிக்கும் நாடுகளில் முன்னணியில் இருப்பது இலங்கை என்று கூறிக்கொண்டு சர்வதேச சமூகம் இங்கே கால் ஊன்ற முயற்சிக்கின்றது. இதனை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும். முளையிலேயே கிள்ளவேண்டும்.

ஈராக்கில் சதாம் ஹுசைன் சர்வாதிகாரியாக நாட்டு மக்களை சித்திரவதை செய்கின்றார் என்றும், சூடானில் சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் என்றும் கூறித்தான் அமெரிக்காவும் நேட்டோப் படைகளும் அந்நாடுகளில் தலையிட்டு அவற்றைச் சின்னாபின்னமாக்கிவிட்டன. அதே நிலைமைதான் இங்கும் ஏற்பட்டுள்ளது.

ஜோன் ஹோம்ஸ் என்ற ஐ.நா. பிரதிநிதி எமது நாட்டில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன,சிவிலியன்கள் கொல்லப்படுகின்றனர், ஆட்கடத்தல்களும் பாலியல் வல்லுறவுகளும் இடம்பெறுகின்றன என்று கூறுகின்றார்.

இதேபோன்றுதான் ஐக்கிய நாடுகள் அமைப்பும், "யுனெஸ்கோ' மற்றும் "யுனிசெவ்' நிறுவனங்களும் சிவிலியன்களைப் பாதுகாக்கின்றோம் என்று கூறிக்கொண்டே நில ஆக்கிரமிப்பை மேற்கொள்ள முனைகின்றன.

எமது உள்நாட்டு விவகாரத்தில் அந்நிய நாடுகள் தலையிடுவதை நாம் ஆரம்பம்முதலே ஆட்சேபித்து வந்துள்ளோம்.

சமாதானத் தூதுவர்கள் என்ற பெயரில் நோர்வே காலடி எடுத்து வைத்தபோதும் நாம் கடுமையாக எதிர்த்தோம். அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையாரிடம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

அப்போது எம்மை கிணற்றுத் தவளைகள் என்றும் சட்டிக்குள் வளர்த்த தவளைகள் என்றும் கிண்டல் செய்தனர். ஆனால் இப்பொழுது இந்த மோட்டுத் தவளைகளும் அன்று நாம் கூறியவற்றையே திருப்பிக் கூறுகின்றன.

நாட்டுப்பற்றுடையவர்கள் என்று வாயளவில் கூறுபவர்கள் அதனை செயலளவில் காட்டவேண்டும்.

சர்வதேச சமூகம் இன்று புலிகள் இயக்கத்திற்கு இராஜதந்திர அர்த்தனத்தைப் பெற்றுக்கொடுக்கவே முயற்சிக்கின்றன.

பிரபாகரன் இன்று இராணுவ ரீதியாகத் தோல்வியடைந்து வருகின்றார். அதனால் இப்பொழுது தனது வியூகத்தை மாற்றி அமைத்துள்ளார். இதனால் தென்பகுதி சிவிலியன்கள் மீது குறிவைத்துச் செயற்படுகின்றார்.

கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றிய நமது இராணுவம் மன்னாரில் சிலாவத்துறைவரை புலிகளை விரட்டியடித்துள்ளன. முப்படைகளின் கூட்டு நடவடிக்கையினால் புலிகளை அவர்கள் வன்னியிலும் கிளிநொச்சியிலும் கட்டுப்படுத்தியுள்ளனர்.

இதில் இருந்து விடுபட புதுத்திட்டம் வகுத்துள்ளார் பிரபாகரன். அதன் முதற்கட்ட நடவடிக்கையாக டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திலும் நுகேகொடையிலும் குண்டு வெடிப்புத் தாக்குதல்களை நடத்தினார். இந்தச் சூடு தணிவதற்கு முன் கெப்பிற்றிக்கொல்லாவையில் அப்பாவி சிவிலியன்கள் மீது தாக்குதல்களை நடத்தி மகிழ்ச்சியடைகின்றார்.

தெற்கே யாலவிலும், நுகேகொøடயிலும், கெப்பிட்டிகொலாவையிலும் சிவிலியன்களைக் கொன்று குவித்து வடமுனையில் இருக்கும் நமது படையினரின் கவனத்தைத் தென்பகுதிக் குத் திசை திருப்புவதே புலிகளின் நோக்கம்.

கொலைவெறி பிடித்த பிரபாகரன் ஒருபோதும் சமாதானப் பேச்சுக்கோ, அரசியல் தீர்வுக்கோ உடன்படமாட்டார்.

இப்படியான நிலையில் புலியுடன் சமாதானப் பேச்சு, அரசியல் தீர்வு என்று கூறுவதில் எந்தவிதமான அர்த்தமும் கிடையாது.

நமது படையினர் இராணுவ ரீதியாகப் புலிகளை வெற்றிகொண்டு வருகின்றனர். ஆனால், அரசு அரசியல் ரீதியாகப் புலிகளைக் தோற்கடிக்கத் தயங்குவது ஏன்?

அரசும் புலிகளும் செய்துகொண்ட சமாதான யுத்த நிறுத்த ஒப்பந்தம் உடனடியாகக் கிழித்து எறியப்பட வேண்டும். இதன்மூலம் சர்வதேச தலையீட்டைத் தடை செய்ய முடியும்.

பயங்கரவாதியான பிரபாகரனுடன் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு ஒன்றைக் காணவேண்டும் என்று கூறும் ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச அமைப்புகளும் பின் லேடனுடனும், அல் குவைதா இயக்கத்துடனும், காஷ்மீர் தீவிரவாதிகளுடனும் பேசி அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த முன் வருவார்களா என்று சவால் விடுகின்றோம்.

அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்காக சர்வகட்சி மாநாடு ஒன்றைக் கூட்டி புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கப்போவதாகக் கூறுகின்றீர்கள். இது அவசியம்தானா? அரசமைப்பை மாற்றுவதால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். இந்த அரசமைப்பின் சில விதிகளை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஏனையவற்றை நாம் ஆதரிக்கின்றோம்.

புலிகளுடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அவர்களை இராணுவ ரீதியாகவே அழித்து ஒழிக்க வேண்டும். படையினர் பலப்படுத்தப்பட வேண்டும். படையினருக்கு அவசியமான சகல வசதிகளும் வழங்கப்பட வேண்டும்.

ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையும் தொடர்ந்து செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையும் புலிகளுக்குச் சாதகமானவையேயன்றி நாட்டிற்கு நன்மை அளிப்பனவல்ல. இதை நாம் அனுபவ பூர்வமாக அறிந்துள்ளோம்.

புலிகள் எப்பொழுதும் சிவிலியன்கள் மீது அக்கறை கொள்வதில்லை. வன்னியில் தமிழ் மக்கள் புலிகளால் வதைக்கப்படுகின்றனர். திறந்த வெளி சிறைச்சாலைகளில் அந்த மக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர். வன்னியில் தாய்மார் தமது ஆண் பிள்ளைகளின் உடைகளைக் கூட வெளியே காயப் போட அஞ்சுகின்றனர்.

நண்பர் மகேஸ்வரனின் உறவினர் ஒருவர் தனது மகனைப் புலிகளுடன் அனுப்பவில்லை என்று புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர்களை விடுவிப்பதற்கு மகேஸ்வரன் குரல் எழுப்பாதமை ஏன்?

கொழும்பில் தமிழர்கள் கைது செய்யப்படும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் , மகேஸ்வரனும் ஆவேசத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதேவேளை, தமது சொந்த மண்ணில் தமிழ் மக்கள் புலிகளால் அடக்கி ஆளப்படுவதை சித்திரவதை செய்யப்படுவதை எதிர்த்து இவர்கள் குரல் எழுப்பாதமை ஏன்? தமது சொந்த மண்ணில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமது சொந்த மக்களைப் புலிகளிடமிருந்து விடுவிக்கவும் அவர்கள் போராட்டம் செய்ய வேண்டும் எனவும் விமல் வீரவன்ஸ கூறினார். (உ 01)

http://www.sudaroli.com/pages/news/today/07.htm

  • தொடங்கியவர்

இந்த விமல் கோழைவன்சவிற்கு இன்னமும் சர்வதேசத்தைப்பற்றி புரிந்து கொள்ள முடியாமலிருக்கிறதே.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பன் வீர வம்ச தனது பொக்கற் நிரம்பும் வரை இப்படி தான் அறிக்கை விடுவார். கண்டுகொள்ள தேவையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.