Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலேசியத் தமிழர் பிரச்சினையில் புலிகளை சிக்கவைக்க முயற்சி

Featured Replies

பயங்கரவாதி என்றால் அவர் பயங்கரவாதியேயாகும். அவரின் மதமோ பூர்விகமோ விடயத்திற்கு எடுக்கக்கூடடிதொன்றல்ல என்று இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.

மலேசியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய சமூகத்தவர்கள் விடுதலைப் புலிகளின் அனுதாபிகளேன மலேசிய அரசு தெரிவித்திப்பது தொடர்பாக இந்திய வெளி விவகார அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்திருக்கிறார்.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹிதவுடன் தான் ஆரயவில்லை என்று முகர்ஜி கூறியுள்ளார்.

சார்க் அமைச்சர்கள் பேரவை மாநாட்டுக்காக புதுடில்லி சென்றிருக்கும் அமைச்சர் ரோஹித முகர்ஜியை வெள்ளி அன்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

மலேசியவில் தாங்கள் பாராபட்சமாக நடத்தபடபடுவதாக சர்ச்சையை எழுப்பியிருக்கும் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் தொடர்பாக மலேசிய அரசு தற்போது தெரிவித்துள்ள கருத்துகளால் பிரச்சனை பூதகராமாகியுள்ளது.

ஆனால் பயங்கரவாதத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து சர்வதேச சாசனங்கள் இருப்பதாகவும் ஒவ்வொரு அரசும் அவற்றுக்கு ஆதரவளித்து நடைமுறைப்படுத்த வேண்டும என்றும் முகர்ஜி குறிப்பிட்ருக்கிறார்.

இதே வேளை, மலேசியலவின் இந்து உரிமைகள் செயற்பாட்டுக் குழுவின் (ஹிந்த்ராவ்) தலைவரை சந்திக்க வியாழனன்று இந்திய அரசு மறுத்து விட்டது.

ஜெனீவாவுக்கும் வாஷிங்டனுக்கும் செல்வதற்கு முன் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த ஹிந்த்ராவ் தலைவர் வேதமூர்த்தி எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியை மட்டும் சந்தித்திருந்தார்.

மலேசிய அரசு மலேசிய தமிழரின் சர்ச்சையுடன் புலிகளையும் தொடர்பு படுத்தி சர்ச்சை செய்துள்ளது.

தேசிய நலன்களுக்கு அச்சுறுத்தலாக இந்திய வம்சாவளியினர் செயற்பட்டால உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மலேசியப் பிரதமர் அப்துல்லா அஹ்முத் பதாவி எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் இந்திய வம்சாவளி மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஹிந்த்ராவ் உறுப்பினர்களுக்கு விடுதலைப்புலிகள் உட்பட பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக மலேசிய அதிகாரிகள் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில பிரதமர் பதாவியிடம் இருந்து இந்தக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமது அமைப்புக்கு எந்தவிதமான தொர்பும் இல்லையென ஹிந்த்ராவ் அமைப்பின் தலைவரும் சட்ட ஆலோசகருமான பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

மலேசிய உள்நாட்டு பாதுகாப்புச் சட்ட விதிகளின் பிரகாரம் ஒருவரை விசாரணையின்றி பல வருடங்களுக்கு தடுத்து வைத்திருக்க முடியும். உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சை தன் வசம் வைத்திருக்கும் பிரதமர், பயங்கரவாதக் குழுக்கள், உள்ளுர் சண்டியர் கோஷ்டிகளின் ஆதரவையும் உதவியையும் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஹிந்த்ராவ் அமைப்பு ஈடுபட்டுக் கொண்டிருப்பது தனக்குத் தெரியுமெனவும் கூறியுள்ளார்.

இதே சமயம், பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட தலைவரான முஹமட் நஸ்ரி அஸீஸ் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் விடுதலைப்புலிகள், இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் போன்ற வெளிநாட்டுக் குழுக்களுடன் ஹிந்த்ராவுக்கு தொடர்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு ஆதரவு திரட்டச் சென்றுள்ள ஹிந்த்ராவ் தலைவர்கள் விடுதலைப்புலிகளின் தலவர்களையும் சந்தித்திருக்கக்கூடுமென அஸீஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா போன்ற நாடுகள் புலிகளை பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது. ஹிந்த்ராவ் அமைப்பு புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பது உண்மையானால் அவர்களும் பயங்கரவாத குழுவினரே என்று அஸீஸ் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க விடுதலைப் புலிகளுடன் தமது அமைப்பு எந்த விதமான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று ஹிந்த்ராவ் அமைப்பின் தலைவரும் சட்ட ஆலோசகருமான பி. உதயகுமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினக்குரல் செய்திகளை ஆதாரமாக் கொண்டு

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் வாழும் இந்து உரிமைமீட்பு குழுவினர் விடுதலைப் புலிகளின் ஆதரவை கோரியுள்ளனர்

[08 - December - 2007] [Font Size - A - A - A]

* மலேசிய சட்டமா அதிபர் தெரிவிப்பு

மலேசியாவில் வாழும் இந்து உரிமை மீட்புக் குழுவினர் தங்கள் போராட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவைக் கோரியுள்ளனர் என்று மலேசியாவின் சட்டமா அதிபர் கனி பட்டீல் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் வாழும் இந்தியர்கள் கடந்த வாரம் பிரிட்டன் தூதரகம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது பொலிஸார் தடியடி நடத்தி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பிரயோகித்தனர். இந்தப் பேரணியில் பங்கேற்ற 31 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக மலேசிய சட்டமா அதிபர் கனி பட்டீல் மேலும் தெரிவிக்கையில்;

"பேரணி நடத்திய இந்து உரிமை மீட்புக் குழுவினருக்கு இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு உள்ளது. விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்பு குறித்து பலரும் கவலைப்படுகின்றனர். இந்த விடயம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

http://www.thinakkural.com/news/2007/12/8/...s_page41889.htm

  • கருத்துக்கள உறவுகள்

:lol: ஆக தமிழன் அடிபடும்போதெல்லாம் அவர்கள் எங்கிருந்தாலும் நம்பிக்கையுடன் பார்க்கும் ஒரே தலைவர் எங்கள் மேன்மை மிக்க தேசியத் தலைவர்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆகவே தலைவர் தனது மாவீரர் தின உரையில் உலகிலுள்ள 80 மில்லியன் தமிழர்களுக்கும் சொன்ன செய்தியில் உள்ள யதார்த்தம் இப்போது பலருக்குப் புரிந்திருக்கும்.

தன்னைத்தானெ உலகத் தமிழினத்தின் தலைவன் என்று சொல்லிக் கொண்டு திரியும் சிலரைக்கூட ஏறெடுத்தும் பார்க்காமல் புலிகளைக் குற்றம் சாட்டியிருப்பதன் மூலம் மலேஷியாவே தமிழர்க்கு அடைக்கலமும் விடுதலையும் தரக்கூடியவர் எம் தலைவர்தான் என்று நினைத்து விட்டது !

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலேசிய அரசு இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை முதலாவதாக வாங்கலாம் என்று எதிர்பார்க்கபடும் போது இந்த பிரச்சனை ஏன் வந்தது :lol::lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=31580

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.