Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமைகளுக்கு ஆதரவளிப்பதில் அரசு அர்பபணித்துச் செயற்படுகிறது. - மஹிந்தா

Featured Replies

தனது அரசு மனித உரிமைகளுக்கு ஆதரவளி(ழி)ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என மஹிந்த தெரிவித்திருக்கிறார்.

மனித உரிமைகள் தினத்தை ஒட்டி தாம் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலே அவர் இப்படித் தெரிவித்திருக்கின்றார். அந்தச் செய்தியின் முழு வடிவம் வருமாறு :-

இவ்வருட மனித உரிமைகள் தினமானது மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசப் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டதன் 60வது ஆண்டு பூர்த்தியைக் குறித்து நிற்கின்றது. இது உலகின் சுதந்திரம், நீதி, சமாதானம் என்பவற்றின் அடிப்படையாக மனித உரிiமைகள் மற்றும் மனித கௌரவம் என்பவற்றுக்கான மதிப்புக் காணப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறது.

மனித உரிமை மீறல்களில் காரணியாகவும் வெளியீடாகவும் வறுமை காணப்படுகிறது என்பதை அங்கீகரிப்பது மனித உரிமைகளுக்கான மதிப்பின் முக்கியதோர் அம்சமாகும். ஆதலால் இவ்வருட மனித உரிமைகள் தின ஏற்பாடுகள் மாற்றத்தின் காரணிகளாக வறுமையில் வாழும் மக்களைக் கருத்தில் கொண்டு முன்னுரிமை அனித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இந்த மனோபாவமானது வறுமையை ஒழிப்பதற்கும் குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் கணிசமான முன்னேற்றங்களைக் கொண்டு வருவதற் உதவமுடியும்.

இலங்கையில் இவ்வருட மனித உரிமைகள் தினக் கொண்டாட்டமானது அதன் கவனத்தை கிழக்குப் பகுதியில் செலுத்தவுள்ளது. அப்பகுதி பயங்;கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்தன் பின்னர் நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வந்த சுதந்திரத்தை மக்கள் அங்கு அனுபவிக்கின்றனர், எனது அரசின் நோக்கம் ஜனநாயக சுதந்திரத்தையும் மனித உரிiமைக்குக்கு மதிப்பளித்தலையும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விஸ்தரிப்பதாகும். இந்த நோக்கத்திற்காக எமது சமூகத்தின் ஆளுமையின் அனைத்துத் துறைகளிலும் மனித உரிமைகளைப் பலப்படுத்துவதை நோக்கியதாக நாட்டில் அதற்கான நிறுவனங்கள் மற்றும் திறன் கட்டியெழுப்புகை என்பவற்றை நாம் வேண்டி நிற்கிறோம்.

எமது அரசானது மனித உரிமைகளுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணித்துச் செயற்படுகிறது. இதை, மனித உரிiமைக்ளுக்கான தனியான அமைச்சொன்றைத் ஸ்தமாபித்ததன் மூலமும், மனித உரிமை தொடர்பான பல்வேறு விடயங்களைக் கையாளுகின்ற ஐக்கிய நாடுகள் முகவரானண்மைகளுடனான நெருக்கமான இடைத் தொடர்புகளின் மூலமும் காணக்கூடியதாக இருக்கின்றது.

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், பயங்கரவாத்தின் அச்சம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறல் போன்ற அனைத்து விதமான ஜனநாயக சுதந்திரங்களையும் எமது மக்கள் அனுபவிக்க உதவுவது எமது நோக்காகும்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் அமைச்சு மற்றும் மனித உரிமைகளுடன் தொடர்பான ஏனைய அனைத்து அமைப்புகள் ஆகியவை மனித உரிமைகள் தின நிகழ்வு தொடர்பான தமது பணிகளில் பூரண வெற்றி பெறவும் எமது நாட்டின் மனித உரிமைகளை முழு அளவில அரசோசுவதற்கான தமது தொடரான முயற்சிகளில் அவை வெற்றி பெறவும் நான் வாழ்த்துகிறேன். என்றார் அவர்.

நனறி : சுடர் ஒளி

புல்லரிக்கிறது.இங்கே மனித உரிமைகள் தின விழா எங்கே பூஸாவிலா,பொலிஸ் நிலையங்களிலா நடைபெறுகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
:lol: மகிந்தவின் மனித உரிமைப் புராணங்களை நம்புவதற்கும் பல நாடுகள் ஆவலாய் இருக்கின்றனவே ?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.