Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்மோகன் சிங்கின் விஜயம் குறித்து கொழும்பு அவசரப்பட்டு அறிவிப்பு? - புதுடில்லி வட்டாரங்களில் ஆச்சரியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங்கின் விஜயம் குறித்து கொழும்பு அவசரப்பட்டு அறிவிப்பு? - புதுடில்லி வட்டாரங்களில் ஆச்சரியம்

[Tuesday December 11 2007 02:45:54 PM GMT] [pathma]

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக கொழும்பு அறிவித்திருப்பது குறித்து இந்தியா ஆச்சரியமடைந்துள்ளது.

இலங்கைத் தீவின் சமாதான நடவடிக்கைகளில் கணிசமான முன்னேற்றத்தை மன்மோகன் சிங்கின் பயணத்துடன் தொடர்புபடுத்த இந்தியா விரும்புகின்றது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வாரென வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்திருந்தார். ஆனால், அவர் இவ்வாறு தெரிவித்தமை அவசரமாக வெளியிடப்பட்ட அறிவிப்பு என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதற்கு முன்னுரிமை கொடுப்பாரென நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள் கருதுவதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச் சேவை நேற்று திங்கட்கிழமை தெரிவித்தது.

தமிழ் பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக 1987 இல் முன்னால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக கொழும்புக்கு விஜயம் மேற்கொண்ட பின் இந்தியப் பிரதமர் எவரும் இலங்கைக்கு இரு தரப்பு விஜயத்தை மேற்கொள்ளவில்லை.

முன்னாள் இந்தியப் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவும் ஐ.ஜே.குஜ்ராலும் சார்க் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்ளவே கொழும்புக்கு வருகை தந்திருந்தனர்.

மன்மோகன் சிங் பெப்ரவரியில் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்வாராயின் 20 ஆண்டுகளின் பின் இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக அது அமையும். ஆனால், இந்தக் காலப் பகுதியில் இலங்கையிலிருந்து பல தலைவர்கள் புது டில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

2005 நவம்பரில் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு நான்கு தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மன்மோகன் சிங்கின் இலங்கை விஜயத்திற்கு இந்திய நிர்வாகம் எதிரானதாக இல்லை. ஆனால், இன நெருக்கடிக்கு கொழும்பின் இராணுவ ரீதியான அணுகு முறைக்கு புதுடில்லி ஆதரவளிக்கின்றது என்ற சமிக்ஞையை ஏற்படுத்தும் சூழ்நிலைகளில், மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு குறித்து இந்திய அரசாங்கம் தீவிர கவலையடைந்துள்ளது. இலங்கையின் எதிர்காலத்துக்கு அதிகாரப் பகிர்வு அவசியமென புதுடில்லி கருதுகிறது.

இலங்கை அரசின் அனுசரணையுடனான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தொடர்பாக விசனம் அதிகரித்து வருகிறது. இக்குழு அரசியல் தீர்வு யோசனைகளை முன்வைப்பதில் கால தாமதம் காட்டி வருவதும் இதனால் அரசியல் நடவடிக்கைகள் தடம் புரள்வதும் கவலையை அதிகரிக்க வைத்துள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியில் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ இடைக்கால நிர்வாகமொன்று ஏற்படுத்தப்படுவதை இந்தியா விரும்புகின்றது.

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டுமென்றால் இன நெருக்கடி தொடர்பான சில குறிப்பிட்ட விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற கருத்து இந்திய தரப்பில் காணப்படுகின்றது. அதாவது, சமாதான நடவடிக்கைகளுக்கு சாதகமான முறையில் பங்களிப்பு வழங்கக் கூடிய விடயங்கள் பூர்த்தியாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை டில்லி நிர்வாக மட்டத்தில் காணப்படுகின்றது.

அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதில் கொழும்பு தவறியிருப்பதையிட்டு இலங்கையிலுள்ள மிதவாதத் தமிழர்கள் கவலையடைந்திருப்பதை இந்தியா அறிந்து வைத்திருக்கிறது. அத்துடன் புதுடில்லி இந்த விடயம் தொடர்பாக செயற்பாடற்று இருப்பதாக இந்த மிதவாத தமிழ் மக்கள் டில்லி மீது குற்றம் சுமத்த ஆரம்பித்திருப்பதும் இந்தியாவுக்குத் தெரியும்.

அத்துடன், அரசியல் தீர்வொன்றை நாடாமலே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தென்படும் இலங்கையின் அரச தரப்பை மன்மோகன் சிங் அரவணைப்பதை இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகளும் விரும்பவில்லை.

இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு எப்போதுமே உறுதியான ஆதரவை இந்தியா வெளிப்படுத்தி வருகின்ற போதும், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை கொழும்பிலுள்ள சிலர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். அப்பாவிப் பொது மக்களே அதிகளவில் பாதிக்கப்படும் இந்த மோதலை தவறான வழிக்கு இட்டுச் செல்வதற்கு இந்தியா ஆதரவளிக்கின்றதென்ற தவறுதலான கண்ணோட்டத்துடன் அவர்கள் செயற்படுவதாக இந்தியா கருதுகின்றது.

இந்தச் சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே இலங்கை அரசியல் ரீதியாக இன நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எத்தகைய முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கின்றது என்பதை அவதானிக்க விரும்புகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் விஜயம் தொடர்பாக இந்த அவதானத்தின் பின்பே இந்தியா உறுதியான முடிவினை தெரிவிக்குமென அறிய வருவதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திகள் தெரிவித்தன.

புதுடில்லி சந்திப்புகளுக்கு அப்பால் இதர நாடுகளிலும் தொலைபேசியிலும் இந்தியப் பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் கலந்துரையாடியிருக்கின்றனர். ஒவ்வொரு சந்திப்புகளின் போதும் அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறும் பொது மக்களின் துன்பத்தை முடிவுக்கு கொண்டு வருமாறும் இந்தியத் தலைவர்கள் இலங்கைத் தலைவர்களிடம் வலியுறுத்தி வந்துள்ளனர்.

இலங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ உதவிகளை இந்தியா வழங்கி வருகின்ற போதும் தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளுக்கு தீர்வு காணாவிடில் சமாதானம் இல்லை என்பது இந்தியாவின் அடிப்படையான நிலைப்பாடாகும்.

http://tamilwin.net/article.php?artiId=566...;token=dispNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.