Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாத்காரமாக பௌத்த சின்னங்களை அழித்து கிழக்கில் காணிகளை முஸ்லிம்கள் சுவீகரித்துள்ளனர் - கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தாயகமல்ல. அவர்களது தாயகம் சவூதி அரேபியாவாகும். எல்லாவெல மேதானந்த தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலாத்காரமாக பௌத்த சின்னங்களை அழித்து கிழக்கில் காணிகளை முஸ்லிம்கள் சுவீகரித்துள்ளனர் - கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தாயகமல்ல. அவர்களது தாயகம் சவூதி அரேபியாவாகும். எல்லாவெல மேதானந்த தேரர்

[Wednesday December 12 2007 09:38:14 AM GMT] [யாழ் வாணன்]

இலங்கையின் கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தாயகமல்ல. அவர்களது தாயகம் சவூதி அரேபியாவாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த புராதன சின்னங்களை அழித்து பலாத்காரமாக கிழக்கு மாகாணத்தில் காணிகளை முஸ்லிம்களே சுவீகரித்துள்ளனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பி.யுமான எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஜாதிக ஹெல உறுமய மேற்கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதில் உண்மையெதுவும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

இன்று சில முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் இனவாதத்தை பரப்பி வருகின்றனர். இது எதிர்காலத்தில் புதியதொரு இனநெருக்கடிக்கு வழி வகுக்கும்.

கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தாயகமல்ல. வர்த்தகத்திற்காக இங்கு வந்தவர்களே அவர்களாவர். அவர்கள் மீது ஆங்கிலேயர்கள் தாக்குதல்களை நடத்திய போது கண்டி மன்னன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை தற்காலிகமாகத் தங்க வைத்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு காணி கொள்வனவு செய்வதும் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்று நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

நாம் சொல்வது கிழக்கில் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படும் போது அப்பிரதேசங்களில் குடிசனத் தொகையை கருத்தில் கொள்ள வேண்டுமென்பதேயாகும்.

யால காட்டின் மேற்குப் புற எல்லையில் லாவுகல ஹெடஓயா பிரதேசத்திலுள்ள 2500 ஏக்கர் காடு முஸ்லிம்களால் அழிக்கப்பட்டு பலாத்காரமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்ல வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த சிங்கள தமிழ் மக்கள் தமது சொந்த வீடுகளில் இதுவரையில் குடிபோகவில்லை. கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய இன மக்களின் வீடுகளையும் முஸ்லிம்கள் பலாத்காரமாக கைப்பற்றியுள்ளனர். மட்டக்களப்பின் பிரதான நகரம் அம்பாறையாகும். அங்கு மூவினத்தவர்களும் வாழ்ந்து வருவதோடு அரசாங்கத்தின் பிரதான அலுவலகங்களும் இயங்குகின்றன. ஆனால் சில முஸ்லிம் இனவாதக் குழுக்கள் அக்கரைப்பற்றை பிரதானமான நகராக மாற்ற சதித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. அதற்கான முன்முயற்சியாக உப அரச அலுவலகங்கள் அக்கரைப்பற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு இடமளிக்க முடியாது.

கிழக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த புராதனச் சின்னங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் இவர்கள் அழித்து விட்டனர். தீகவாபியிலும் பலாத்காரமாக குடியேறியுள்ளனர்.பேரம் பேசி முன்னெடுக்கின்றனர். சில முஸ்லிம் அரசியல்கட்சிகள் அரசாங்கத்துடன் பேரம் பேசி இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. எனவே, புதிதாக புத்தர் சிலைகள் வைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே, ஏனைய இனத்தோருக்கும் அந்த உரிமையுண்டு. கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தாயகமல்ல. அவர்களது தாயகம் சவூதி அரேபியாவாகும். பொத்துவில் பிரதேசத்தில் சிங்கள மக்களின் காணிகள் பலாத்காரமாக சூறையாடப்படுகின்றன. ஹிங்குரான சீனித் தொழிற்சாலை சிங்கள தொழிலாளர்களின் காணிகளை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து ஆக்கிரமித்துள்ளனர்.

எனவே குறிப்பிட்ட சில முஸ்லிம் குழுவினர் மேற்கொள்ளும் இனவாத செயற்பாடானது புதியதொரு இன நெருக்கடியை தோற்றுவிக்கும்

http://tamilwin.net/article.php?artiId=568...;token=dispNews

//

Edited by Panangkai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.