Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் இருந்து 3600 km?

Featured Replies

இராமேசுவரம் படத்தைப் பார்த்தேன்.ஈழத்தமிழர் பற்றி தமிழ்சினிமா நினைப்பு என்ன என்று குழப்பமாக தான் இருக்கிறது.எங்கள் பிரச்சனைய மையமாக வைத்து சுயலாபம் தேடுவதற்கு இயக்குனர் செல்வம் முயற்ச்சி செய்கிறாரா.இராமேசுவரம் படத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து 36 km என்று இருக்கிறது .ஆனால் படத்தைப்பார்த்தால்

3600 km போலல்லவா இருக்கிறது...........

"இராமேசுவரம் படம் பற்றி இயக்குனர் சீமான்"

(இலங்கைப் பிரச்சனையை படமாக்கக் கூடாது)

இலங்கைப்பிரச்சனையை அரைகுறையாக சொல்வதை விட அதை படமாக்காமல் இருக்கலாம் என்கிறார் இயக்குனர் சீமான்.

இலங்கை அகதிகளைப்பற்றி இராமேசுவரம் படத்தில் கூறியிருப்பதாக சொன்னார்கள்.ஆனால் படத்தில் இலங்கையில் இருந்து வரும் அகதி இங்குள்ள பண்ணையார் பெண்ணைக் காதலிக்கிறார்.இது ஏற்க்கும்படி இல்லை இங்கே வரும் இலங்கை அகதிகள் ஒவ்வொரு நாளும் சொந்த நாட்டுக்குத்திரும்பும் ஏக்கத்தில் உள்ளனர்.அவர்களின் ஏக்கத்தையும் வலிகளையும் தான் படத்தில் காட்ட வேண்டும்.புலம்பெயர்ந்து வருபவர்கள் இங்கு காதலித்து கொண்டு இருப்பதாக காட்டக்கூடாது. தணிக்கைக் குழுவை மீறி இலங்கை பிரச்சனையை முழுமையாக சொல்ல முடியாது அதனால் அத்தகைய படங்களை எடுக்காமல் இருப்பது நல்லது"

தினகரன் 13.12.2007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது ஈழ சமுதாயத்தில் இருக்கும் சிலரை திருத்த முடியாது. அதற்கு யாழ்களத்தில் இந்த படத்தை பற்றி ஆதரவாக எழுதியவர்களையே முன்னுதாரணமாக கொள்ளலாம்.

இந்திய சினிமாவால் ஈழ தமிழருக்கு ஆதரவா பிரச்சாரம் செய்யமுடியாது

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஐயோ வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்.

இந்த களத்தலை இதுக்காக வக்காலத்து வாங்கினவர்கள் கொல்லப்போகின்றார்கள்.

நிரு ஈழத்தமிழன் என்பதற்காக நாங்கள் இதை ஆதரிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள் சிலர். ஈழத்தவன் என்ற ரீதியில் அவரை நான் ஆதரிக்கின்றேன்.

அதற்காக நாம் எல்லாவற்றையும் வரவேற்கமுடியாது.

இந்த திரைப்படத்தை ஆதரிப்பதால் ஈழத்திலுள்ள தமிழனுக்கு ஏதாவது கிடைக்குமா? கிடைக்குமென்றால் நான் ஆதரிப்பேன். இல்லையென்றால்...................... எனக்கு எதைப்பற்றியும் கவலையில்லை.

நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் .................... கிடைக்காவிட்டால்?

நிச்சயமாக கிடைக்கும் கிடைக்காவிட்டால் செய் அல்லது செத்து மடி...........

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சரியோ பிழையோ எமக்காக ஏதும் செய்ய வேண்டும் என்று துடிக்கின்ற ஒவ்வொருவனுடைய செயற்பாடும் ஊக்குவிக்க்பபட வேண்டியவை. ஆதரிக்கப்பட வேண்டியவை. அவர் ஈழத்தமிழீழப் போராட்டத்தை 100 வீதம் பிரதிபலிக்க முடியுமா என்பது பிரச்சனையானதே அல்ல.

சிங்கள அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கின்ற எம்மவர்கள் எத்தனை பேர் நெஞ்சை நிமித்தி, நான் புலி ஆதரவாளன், நெஞ்சை நிமிர்த்தி, ஏன் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் சொல்ல முடியும்?

அது எவ்வாறு முடியாதோ, அவ்வாறு தான் ஒரு தமிழகத்து இயக்குனராலும் ஒரு மட்டத்திற்கு அப்பால் போகமுடியாது. ஏனென்றால் குறித்த இயக்குனர் புதுமுகம். அரசியல் செல்வாக்குமற்றவர். அவரின் வருகைய ஊக்குவிப்பதோடு, நன்றி தெரிவிப்பதே நமக்குள்ள பண்பு

சீமான் கேட்ட கேள்விக்கு குறித்த இயக்குனர் படத்திலேயே பதிலையும் சொல்லியிருக்கின்றார். காதல் என்பது எங்கும் வரலாம் என்று. ஆனால் இராமனுக்கு அணைக்காக மண் தடவிய(குறிப்பு: .யாராவது இராமர் பற்றி விவாதிக்க விரும்பினால் வேறு தலைப்பில் வைக்கவும்) அணில் போல ஏதோ தம்மால் வெளிக்காட்ட முடிகின்ற செயற்பாடுகளை காட்டுகின்றவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்.

சரியோ பிழையோ எமக்காக ஏதும் செய்ய வேண்டும் என்று துடிக்கின்ற ஒவ்வொருவனுடைய செயற்பாடும் ஊக்குவிக்க்பபட வேண்டியவை. ஆதரிக்கப்பட வேண்டியவை. அவர் ஈழத்தமிழீழப் போராட்டத்தை 100 வீதம் பிரதிபலிக்க முடியுமா என்பது பிரச்சனையானதே அல்ல.

சிங்கள அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கின்ற எம்மவர்கள் எத்தனை பேர் நெஞ்சை நிமித்தி, நான் புலி ஆதரவாளன், நெஞ்சை நிமிர்த்தி, ஏன் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் சொல்ல முடியும்?

அது எவ்வாறு முடியாதோ, அவ்வாறு தான் ஒரு தமிழகத்து இயக்குனராலும் ஒரு மட்டத்திற்கு அப்பால் போகமுடியாது. ஏனென்றால் குறித்த இயக்குனர் புதுமுகம். அரசியல் செல்வாக்குமற்றவர். அவரின் வருகைய ஊக்குவிப்பதோடு, நன்றி தெரிவிப்பதே நமக்குள்ள பண்பு

சீமான் கேட்ட கேள்விக்கு குறித்த இயக்குனர் படத்திலேயே பதிலையும் சொல்லியிருக்கின்றார். காதல் என்பது எங்கும் வரலாம் என்று. ஆனால் இராமனுக்கு அணைக்காக மண் தடவிய(குறிப்பு: .யாராவது இராமர் பற்றி விவாதிக்க விரும்பினால் வேறு தலைப்பில் வைக்கவும்) அணில் போல ஏதோ தம்மால் வெளிக்காட்ட முடிகின்ற செயற்பாடுகளை காட்டுகின்றவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்.

ஆமேரதிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமேரதிக்கிறேன்.

தோழர் சீமான் தமிழீழ ஆதரவாளர். எனினும் அவரது சில கருத்துக்களுடன் எனக்குசம்மதமில்லை. உலக கலை இலக்கிய வரலாற்றில் தணிக்கை காலத்திலல் ஹணிக்கையை கலாபூர்வமாக கடந்துவருகிற பாச்சல்கள் பல ஏற்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர் பற்றி நூறு சிருஸ்டிகளும் படங்களும் வரவேண்டிய தருணமிது. தூயவனின்க்கருத்த்ஹ் எனக்கும் சம்ம்மதமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.