Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்ல தாயின் மார்பில் பால் குடித்த தமிழன் அரசின் பட்ஜெட்டுக்கு ஆதரவளிக்க மாட்டான் சபையில் மகேஸ்வரன் எம்.பி. ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தாயின் மார்பில் பால் குடித்த தமிழன்

அரசின் பட்ஜெட்டுக்கு ஆதரவளிக்க மாட்டான்

சபையில் மகேஸ்வரன் எம்.பி. ஆவேசம்

""ஒரு நல்ல தாயின் மார்பில் பால் குடித்த எந்த ஒரு தமிழனும் இந்த அராஜக அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டான். பதவிக்காகவும், பணத்திற்காகவும் அரசின் அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களை மானமுள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.''

இவ்வாறு ஐ.தே.க. கொழும்பு மாவட்ட எம்.பி. மகேஸ்வரன் ஆவேசத்துடன் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மகேஸ்வரன் எம்.பி. தொடர்ந்து உரையாற்றும் போது கூறியதாவது:

வடக்கு கிழக்கு, மலையகம், கொழும்பு எனப் பல இடங்களிலும் வாழ்ந்த தமிழர்களை வயது வித்தியாசம் இன்றி ஆண்கள், பெண்கள், வயோதிபர், நோயாளர்கள், குழந்தைகள் என்ற பாரபட்சம் இன்றி சிறையில் அடைத்து வைத்துள்ளது இந்த அரசு.

பொலிஸ் நிலையங்களிலும் பூஸா முகாமிலும் தமிழ் மக்கள் அடைத்து துன்புறுத்தப்படும் இந்த வேளையில் இங்கே வரவு செலவுத்திட்டத்திற்கு வாக்கெடுப்பு நடத்துகின்றனர்.

மலையக மக்களின் பாதுகாப்பிற்காகவே நாம் அரசுடன் இணைந்தோம், ஆதரவளிக்கின்றோம் என்று கூறிக்கொள்பவர்கள், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் கண்ணீருக்கு என்ன பதில் கொடுக்கப் போகின்றீர்கள். இதுவரை எவரையாவது விடுதலை செய்துள்ளீர்களா?

இங்கே எந்த முகத்துடன் வந்து அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகின்றீர்கள். நீங்கள் வேஷ்டியை கட்டிக்கொண்டுதான் இந்தச் சபைக்கு வருகிறீர்களா? உங்களுக்கு வெட்கம், மானம், ரோஷம் என்பது எதுவுமே கிடையாதா?

யாழ்ப்பாணத்தில் தினசரி ஆறு பேர் கொல்லப்படுகின்றனர். மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. அரச படையினரின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி அஞ்சி வாழ்கின்றனர்.

கிழக்கே அரச அனுசரணையுடன் இயங்கும் துணைப்படையினர் தினசரி பொதுமக்களைக் கடத்தி கொலை செய்கின்றனர். இப்பொழுது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களைக் கடத்தி உயிரைப் பணயமாக வைத்துக்கொண்டு பேரம் பேசுகின்றது.

இப்படி கேவலம் கெட்ட நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் அரசு மேற்கொள்ளும் இன ஒழிப்பையும் வகை தொகையின்றி தமிழர்கள் கைது செய்யப்படுவதையும் அங்கீகரிப்பதாக அமையும். இன்று வாக்கெடுப்பில் தப்பிப்பிழைத்தாலும் நாளை மக்களின் சாபத்திற்கு பதில் அளித்தே ஆகவேண்டும் என்றார். (க 01)

http://www.sudaroli.com/pages/news/today/13.htm

  • கருத்துக்கள உறவுகள்

மகேச்வரன் அவர்களே,

நீங்கள் சொல்வதெல்லாம் நியாயம் தான். அதில் மறு பேச்சுக்கு இடமில்லை. மானமுள்ள ஒவ்வொரு தமிழனிடமும் வரவேண்டிய கோபம் தான்.

உங்களிடம் சில கேள்விகள்:

(1) நீங்கள் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி கருணாவை சூழ்ச்சியால் பிரித்தபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள் ?

(2)ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமாச் செய்வீர்களா ?

(3)ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் தமிழரை அழிப்பது தொடர்பாக உள்ள வேறுபாடு என்ன ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகேச்வரன் அவர்களே,

நீங்கள் சொல்வதெல்லாம் நியாயம் தான். அதில் மறு பேச்சுக்கு இடமில்லை. மானமுள்ள ஒவ்வொரு தமிழனிடமும் வரவேண்டிய கோபம் தான்.

உங்களிடம் சில கேள்விகள்:

(1) நீங்கள் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி கருணாவை சூழ்ச்சியால் பிரித்தபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள் ?

(2)ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமாச் செய்வீர்களா ?

(3)ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் தமிழரை அழிப்பது தொடர்பாக உள்ள வேறுபாடு என்ன ?

ragunathan உங்களுக்கு ஒரு சபாஸ் <_< . சரியான கேள்விகள். இவங்களை போன்றவர்களும் அதை பெரிது படுத்தும் ஊடகங்களும் தான் காரணம் எமது போராட்டம் இப்படி பின்தங்கி குழம்பி நிற்பதற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.