Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாரிசில் இருந்து வந்த சிறிலங்காத் தூதரக இராஜதந்திரியே என்னை வரவேற்றார்: கருணா வாக்குமூலம்

Featured Replies

பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து வந்த சிறிலங்காத் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தன்னை ஹீத்துரு வானூர்தி நிலையத்தில் வரவேற்க வந்ததையும், அவரின் பெயரையும் பிரித்தானியா அதிகாரிகளின் விசாரணைகளின் போது கருணா தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

பாரிசில் இருந்து வந்த சிறிலங்காத் தூதரக இராஜதந்திரியே என்னை வரவேற்றார்: கருணா வாக்குமூலம்

[sunday December 16 2007 01:43:27 PM GMT] [pathma]

பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து வந்த சிறிலங்காத் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தன்னை ஹீத்துரு வானூர்தி நிலையத்தில் வரவேற்க வந்ததையும், அவரின் பெயரையும் பிரித்தானியா அதிகாரிகளின் விசாரணைகளின் போது கருணா தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

சண்டே ரைம்சில் வெளிவந்த முக்கிய பகுதிகள்:

சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அனுசரணைகளுடன் கருணா குழு எனப்படும் துணை இராணுவக்குழுவின் தலைவரான கருணா, பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பான விசாரணைகளுக்காக பிரித்தானியாவில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் கேனுகா செனிவிரட்ன, பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் அணிசேரா நாடுகளின் அலுவலகத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் அங்கு செல்லவில்லை. அவர் தனது அதிகாரம் தொடர்பான தெளிவற்ற தன்மையினாலேயே அழைப்பிற்கு சமூகம் தரவில்லை என வெளிவிவகார மற்றும் அணிசேரா நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும் தூதுவருக்கு கொழும்பில் இருந்து அவரின் அதிகாரத்திற்கான உத்தரவுகள் கிடைக்கவில்லை என வேறு சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவருக்கான அதிகாரபூர்வமான அறிவித்தல் பிரதி வெளிவிவகார அமைச்சர் குசைன் பைலாவிடம் இருந்தே அனுப்பப்பட்டிருந்தது. எனினும் கருணா பிரித்தானியாவிற்குள் நுழைந்தது தொடர்பாக அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது என அமைச்சர் குசைன் பைலா தெரிவித்துள்ளார். கருணாவிற்கு வழங்கப்பட்ட கடவுச்சீட்டானது (இலக்கம்: டி 1944260) தற்போது பாவனையில் இல்லாதது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கும் எதுவும் தெரியாது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால், கருணா பிரித்தானியாவிற்குள் அரசாங்கத்தின் ஆதரவுடன் நுழைந்தது தொடர்பாக தூதுவர் செனிவரட்னவிடம் தமது அதிருப்திகளை தெரிவிக்க வேண்டும் எனவும், அது தொடர்பான விளக்கங்கள் மற்றும் அவர் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக அவருடன் கலந்துரையாட வேண்டும் எனவும் பிரித்தானியாவின் வெளிவிவகார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருணா, கடந்த செப்ரெம்பர் மாதம் 18 ஆம் நாள் இராஜதந்திரிகளுக்குரிய போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் நுழைந்திருந்தார். அவருக்கான நுழைவு அனுமதி, சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தினால் வழங்கப்பட்டிருந்தது.

டிலோ கோட், மலபேயைச் சேர்ந்த கோகிலா துஸ்மந்த குணவர்த்தனவுக்கு நுழைவு அனுமதியை வழங்குமாறு பரிந்துரைக் கடிதமும் தூதரகத்திற்கு அனுப்பப்ட்டிருந்தது. அதனை வனவள திணைக்களத்தைச் சேர்ந்த பணிப்பாளர் அனுப்பியிருந்தார்.

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் பயணம் செய்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு கடந்த ஓகஸ்ட் 18 ஆம் நாள் வழங்கப்பட்டிருந்ததுடன் நுழைவு அனுமதிக்கான விண்ணப் படிவவும் அதே நாளில் அனுப்பப்ட்டிருந்தது. கோகில குணவர்த்தன எனும் பெயரில் கடவுச்சீட்டு வழங்கப்படடிருப்பினும் அதில் கருணாவின் புகைப்படமே இணைக்கப்பட்டிருந்தது.

தற்போது பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கருணாவிடம் பிரித்தானியாவின் காவல்துறையினர், குடிவரவு அதிகாரிகள், புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் இந்த விசாரணைகளின் போது கருணா முழுமையான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் பாரிசில் உள்ள சிறிலங்காத் தூதரகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தன்னை ஹீத்துரு வானூர்தி நிலையத்தில் வரவேற்க வந்ததையும், அவரின் பெயரையும் கருணா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சில் இருந்து வரும் பரிந்துரைகள் தொடர்பாகவே தற்போது கொழும்பில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரமும் பிரித்தானியாவின் தூதரகத்திற்கு அதிகளவிலான பரிந்துரைகள் அனுப்பப்பட்டிருந்தன. பிரித்தானியாவிற்கு பயணம் செய்யும் மகிந்த ராஜபக்சவுடன் செல்பவர்களுக்கானதே அவை.

மகிந்த ராஜபக்சவின் மகன் ஜோசித, பிரித்தானியாவின் கடற்படைக் கல்லூரியில் பயிற்சியை நிறைவுசெய்து வெளியேறும் வைபவத்தில் பங்குபற்றவே மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்குச் சென்றிருந்தார்.

வெளிவிவகார அமைச்சினால் பரிந்துரை செய்யப்பட்டவர்களில் ஜோசிதவின் நண்பர்களும் அடங்குவார்கள். எனினும் மிகவும் உன்னிப்பாக ஆராயப்பட்ட பின்னர் பெரும்பாலானவர்களுக்கு நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மகிந்த ராஜபக்சவின் மனைவியுடன் செல்லும் வர்த்தகர் என ஒருவருக்கு வெளிவிவகார அமைச்சினால் பரிந்துரைக் கடிதம் வழங்கப்பட்ட போதும் அவருக்கான நுழைவு அனுமதியை தூதரகம் வழங்கவில்லை. எனினும் பின்னர் அது மீண்டும் வழங்கப்பட்டதா என்பது தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகள் கருத்துக்கூற மறுத்து விட்டனர்.

தமக்கு இதுவரை 500 பரிந்துரைக் கடிதங்கள் கிடைத்துள்ளதாகவும், அவை மிகவும் சலிப்புத் தருவன எனவும் பிரித்தானிய தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamilwin.net/article.php?artiId=575...;token=dispNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.