Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழவேந்தனை நீக்கியது சட்டவிரோதமானது: உச&

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவேந்தனை நீக்கியது சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்படும் - த.தே.கூ.

ஈழவேந்தன் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து சட்டவிரோதமான முறையில் சிறீலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சிறீலங்கா உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்குத் தாக்கல் குறித்து தற்போது ஆராயப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த 2008ம் ஆண்டு வரவு - செலவு வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்த போதும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்று சென்று உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pathivu

  • கருத்துக்கள உறவுகள்

தவறு தன்னுடையதல்ல என்கிறார் ஈழவேந்தன்

இலங்கை நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த விடயத்தில் தான் ஒரு சூழ்நிலைக் கைதி என்றும் ஆகவே தனது நிலைமையை உணர்ந்து தனது கட்சித் தலைமைப்பீடம் தன்னை மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கும் என்று தான் நம்புவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.

தனது விடுமுறையை நீட்டிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் ஊடாக தான் ஒரு கடிதத்தை அனுப்பியதாகவும், ஆயினும், நாடாளுமன்ற பணியாளர் ஒருவர் வழங்கிய தவறான தகவல் காரணமாக அவர் அந்த கடிதத்தை கையளிக்காமல் விட்டுவிட்டதாகவும், அதனால்தான் இன்று தான் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த நிலையில் தவறு தன்னுடையது அல்ல என்றும், குறிப்பிட்ட நாடாளுமன்ற அதிகாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை (சிறியளவு தவறாயினும்) ஆகியோரின் தவறினாலேயே தான் தற்போது இந்த இக்கட்டான நிலைக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக நான்கு நாட்கள் தான் நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருந்து மூன்று உரைகளை ஆற்றியிருந்ததாகவும், ஆயினும் வாக்களிப்பு தினத்தன்றே தான் அதற்கு தடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தவிவகாரம் குறித்து ஈழவேந்தன் மற்றும் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே ஆகியோரது செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

-பிபிசி தமிழோசை

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவேந்தன் அவர்கள் பதவியை உதறிவிட்டு அரசியல் ரீதியாக மேற்குலகில் பணிபுரிவது சால சிறந்தது என நினைக்கிறேன்.ஈழவேந்தன் அவர்களை நேரடியாக தெரிந்தவன் என்ற வகையில் . அரசியலிலும் சரி .ஆங்கில மொழியிலான பேச்சிலும் சரி ஈழவேந்தனுக்கு நிகர் அவரே தான்.இங்கு இந்தியாவால் நிராகரிக்கப்பட்டவர் என்பதும் (நாடு கடத்தப்பட்டதும்) தெரிந்ததே :lol::lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.