Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடங்ககளிற்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில்-பி.ஈ.சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடங்ககளிற்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில்-பி.ஈ.சி

[Tuesday December 18 2007 10:25:08 AM GMT] [யாழினி]

ஊடங்கங்களிற்கு மிகவும் அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது நாடாக இலங்கை காணப்படுவதாக ஊடக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.இவ்வருடத்தி

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நாடுகள் வரிசையில் மூன்றாமிடத்தில் இலங்கை ஜெனிவா ஊடக பாதுகாப்பு குழு அறிவிப்பு

வீரகேசரி நாளேடு

ஊடகவியலாளர்கள் அதிகளவில் படுகொலை செய்யப்பட்ட நாடுகளின் வரிசையில் இலங்கை மூன்றாமிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் "பிரெஸ் எம்பிளெம் கம்பெயின்' என்ற ஊடக பாதுகாப்பு குழுவினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளியிடப்பட்டிருந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

இந்த வருடம் உலகெங்கும் 27 நாடுகளில் 110 பேருக்கு அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தொகை கடந்த ஆண்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலைகளுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகமாகும். இந்த வருடம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகளில் மூன்றிலிருபங்கு ஈராக், சோமாலியா, இலங்கை ஆப்கானிஸ்தான், கொங்கோ ஜனநாயக குடியரசு ஆகிய குழப்ப நிலைமைகளை எதிர்கொண்டுள்ள நாடுகளில் இடம்பெற்றுள்ளன. ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை மிக மோசமான நாடாக ஈராக் உள்ளது. அங்கு இவ்வருடத்தில் சுமார் 50 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக்கில் அமெரிக்கப் படையினர் நிலை கொண்டதன் பிற்பாடு அங்கு 250 பேருக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளனர். ஈராக்கிற்கு அடுத்து ஊடகவியலாளர்கள் அநேகரைப் பலியெடுத்த நாடாக சோமாலியா விளங்குகிறது. இந்த வருடம் அங்கு 8 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சோமாலியாவிற்கு அடுத்து மூன்றாமிடத்தில் அதிக ஊடகவியலாளர்களின் படுகொலைகளை எதிர்கொண்ட நாடாக இலங்கை உள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக 7 ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பாகிஸ்தானில் 5 ஊடகவியலாளர்களும், ஆப்கானிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா 4 ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேற்படி குழுவின் செயலாளர் நாயகம் பிளெய்ஸி லெம்பென் விபரிக்கையில், ""இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. இந்த வன்முறைத் தாக்குதல்களை நாம் கண்டிக்கிறோம்'' என்று கூறினார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரைவில் முதலாம் இடத்தை பிடிக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.