Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சாது போரை அரசு முன்னெடுக்க வேண்டும் - ஜே.வி.பி கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சாது போரை அரசு முன்னெடுக்க வேண்டும் - ஜே.வி.பி கோரிக்கை

[Wednesday December 19 2007 06:52:39 PM GMT] [யாழினி]

அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அரசாங்கம் அடிபணியக்கூடாது. தமது இலங்கை முகவர்களான விடுதலைப் புலிகள் தோல்வியடைவதனை சகித்துக்கொள்ள முடியாமையினாலேயே இலங்கைக்கான ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

எனவே இதற்கெல்லாம் அஞ்சாது அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அமெரிக்கா ஆயுதம் வழங்காவிடினும் வேறு நாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெற்று அரசாங்கம் வன்னியை கைப்பற்ற வேண்டும். இதனைவிடுத்து அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு புலிகளுக்கு ஒட்சிசன் வழங்குவதற்கு அரசாங்கம் முயலக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மனித உரிமை தொடர்பில் சாதக நிலை ஏற்படும்வரை இலங்கைக்கான இராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளமை குறித்து கருத்துதெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

எமது தேசியப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை நாமே எடுக்க வேண்டும். எனவே தீர்வு இப்படித்தான் இருக்க வேண்டுமெனக் கூறுவதற்கு அமெரிக்காவிற்கோ அல்லது புஷ்ஷுக்கோ அதிகாரமில்லை.

எமது படையினரின் தாக்குதல்களால் புலிகள் பலவீனமடைந்துள்ளனர். கிழக்கு மாகாணத்தையும் படையினர் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து அப்பிரதேச மக்களுக்கு ஜனநாயக காற்றை சுவாசிக்க சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர்.

அதேபோல் விரைவில் வன்னியையும்படையினர் கைப்பற்றி அப்பிரதேச மக்களை மீட்பார்கள். எனவே அமெரிக்கா கலக்கமடைந்துள்ளது. என்னதான் உலக பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்க குரல் கொடுத்தாலும் எமது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி வளங்களை சூறையாடுவதற்கு விடுதலைப் புலிகளை முகவர்களாக அமெரிக்கா நியமித்துள்ளது.

மரண தறுவாயில் புலிகள்

தற்போது புலிகள் முழுமையாக பலவீனமடைந்துள்ளனர். மரணத் தறுவாயில் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒட்சிசன் வழங்கி உயர்ப்பிக்கவே அமெரிக்கா ஆயுதம் வழங்குவதை நிறுத்தியுள்ளதுடன் ஏனைய சில தடைகளையும் விதித்துள்ளது. இலங்கையில் ஈழத்தை ஆதரித்து பிரேரணை நிறைவேற்றிய பிராந்தியமும் அமெரிக்காவில் தானிருக்கிறது. அமெரிக்காவின் இந்த மிரட்டல்களுக்கு அரசாங்கம் அஞ்சாது எமது நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்க முன்வரும் எந்த நாட்டிலிருந்தும் ஆயுதங்களை பெற்று பிரிவினைவாத பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து புலிகளின் சர்வதேச எஜமான்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து பேச்சுவார்த்தையென்ற பொய்யான நிலைக்குபோகக் கூடாது.

http://tamilwin.net/article.php?artiId=581...;token=dispNews

புலிகள் பலவீனமடைந்துள்ள நிலை போன்ற கருத்துக்களால் சிங்கள ராணுவத்தின் மனோபலத்தை மெருகூட்ட நினைக்கிறது ஜே வீ பி.ஆனால் புலிகளின் பொறுமையையும் விட்டுக்கொடுப்பையும் விழுந்த அடியையும் நினைத்து நினைத்து இராணுவமும் சிங்கள மக்களும் எப்போதும் திணறும் நிலை தான் காணப்படுகிறது.இனி எந்தக்கோணத்தில் அடி விழும் என்று எண்ணிப்பார்த்தே பயந்து சாகிறது.பயத்தின் உச்சத்தில் நின்று நடுக்கத்தின் மிகுதியால் பொய் வீராப்பு பேசுகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.