Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அந்நியத் தலையீடு அதிகரிப்பதற்கு அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்நியத் தலையீடு அதிகரிப்பதற்கு அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம்

[19 - December - 2007] [Font Size - A - A - A]

* யுத்தமுனைப்பிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி வரும் அரசாங்கம் ஒரு ஆக்கபூர்வமான அரசியல் தீர்வுத் திட்டத்தினை இன்னும்தான் முன்வைக்காமல் தட்டிக் கழித்து வருகிறது. அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) தீர்வுத் திட்டத்தினைத் தீட்டி வருவதாகவும் அதன் மீது தாம் பெருமதிப்பு வைத்திருப்பதாகவும் சில்கொட் கூறியுள்ளார். அரசாங்கத்தின் ஏமாற்று வித்தையொன்றுக்கு சில்கொட் பலியாகிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது.

வ.திருநாவுக்கரசு

"இலங்கை அரச படைகளால் விடுதலைப் புலிகளை களமுனையில் தோற்கடிக்க முடியுமா என்பதை என்னால் கூற முடியாது. ஆனால், ஈராக், ஆப்கானிஸ்தான், வடஅயர்லாந்து மற்றும் உலகில் எழுந்துள்ள எத்தனையோ பிணக்குகள் மூலம் நாம் அறியக் கிடக்கிறது என்னவென்றால் யுத்தத்தில் வெற்றியீட்டுவதை விட சமாதானத்தை வென்றெடுப்பது கடினம் என்பதாகும். இலங்கை இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், வன்னியில் தான் விடுதலைப் புலிகளைப் படுதோல்வியடைச் செய்தாலும் கூட, பிரச்சினை வேறு வடிவத்தில் தொடரவே செய்யும். நிரந்தர சமாதானத்தை எட்ட வேண்டுமாயின் தமிழ் மக்கள் ஏலவே அந்நியப்படுவதற்கு காரணமாயிருந்த சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டிய கடப்பாட்டினைத் தட்டிக் கழிக்கக் கூடாது.

மேற்கண்டவாறு, "புதிய நூற்றாண்டின் புதிய இராஜதந்திரம்" எனும் தொனிப்பொருளில் 10-12-07 ஆம் திகதி இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டொமினிக் சில்கொட் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆற்றிய டட்லி சேனநாயக்க நினைவுப் பேருரையில் குறிப்பிட்டிருந்தார். அவர் ஆற்றிய சற்று நீண்ட உரை ஒட்டுமொத்தமாக பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முதலாவதாக நாட்டின் உள்விவகாரங்களில் சில்கொட் எல்லை தாண்டி மூக்கு நுழைக்க முற்பட்டுள்ளதாக; அவரை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜே.வி.பி. கடுஞ்சினம் வெளிப்படுத்தியுள்ளது. அடுத்ததாக அரசாங்க தரப்பிலிருந்தும் சில்கொட்டின் உரை மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஈழம் என்ற அபிலாஷையானது நியாயபூர்வமற்றது என்று சொல்ல முடியாது" என சில்கொட் மேலும் குறிப்பிட்டிருந்தமை கடுமையான ஆட்சேபனைக்குரியதென வெளிநாட்டுச் செயலாளர் கலாநிதி பாலித்த கோஹென அவரை அமைச்சுக்கு அழைத்து விசனம் தெரிவிக்கப்பட்டது. எனினும், பாராளுமன்றத்தில் இது விடயமாக ஜே.வி.பி. மற்றும் அரசாங்க தரப்பினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக தான் எதுவும் கூறவிரும்பவில்லை எனவும் நினைவுப்பேருரையில் தான் கூறிவைத்த கருத்துக்களில் தவறேதும் இல்லை எனவும் சில்கொட் சார்பில் பேசவல்ல உயிர்ஸ்தானிக அலுவலர் ஒருவர் கூறியுள்ளார். இதனிடையில் ஸ்தானிகர் ஒருவர் கூறும் எல்லா விடயங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை எனவும் விரும்பத்தகாத பாரதூரமான எதுவும் கூறப்பட்டால் சம்பந்தப்பட்ட ஸ்தானிகரை நாட்டைவிட்டு வெளியேற்ற முடியும் எனவும் வெளிநாட்டமைச்சர் றோகித்த போகொல்லாகம கூறியுள்ளார்.

பிரபாகரன் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றதல்ல- சில்கொட்

நிற்க உயர்ஸ்தானிகர் சில்கொட் நினைவுப் பேருரையில் கூறிவைத்த விடயங்கள் சிலவற்றைப் பார்ப்போம். தமிழ் மக்கள் அரசாங்கத்தினால் ஆளாக்கப்படும் அவலங்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் அர சாங்கத்தின் மீது போதிய அழுத்தத்தைப் பிரயோகிக்கவில்லையென பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டானது ஆதாரமற்றதல்ல. ஆனால், ஜனநாயகத்தை தழுவுதல், அரசியல் இலக்குகளை அடைவதற்கு வன்முறைகளற்ற வழி முறைகளைக் கடைப்பிடித்தல் போன்ற பிரதானமான விடயங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்தின் நியமங்களுக்கேற்ப நடந்துகொள்ளவில்லை என்பதை பிரபாகரன் வெகு இலகுவாக மறந்துவிட்டாரே! ஸ்கொட்லாந்திலுள்ள தேசிய வாதக் கட்சி (SNP) சுதந்திர ஸ்கொட்லாந்து வேண்டுமென உழைத்து வருவது நியாயபூர்வமற்றதல்ல என்பது போலவே தமிழரின் ஈழம் எனும் அபிலாஷையும் நியாயபூர்வமற்றதல்ல என்பது தனது வாதமாகும் என்றெல்லாம் சில்கொட் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும் எஸ்.என்.பி.யினதும் புலிகளினதும் வழிமுறைகள் எத்தகையவை என்பது முக்கியமானதாகும். புலிகள் மேற்கொள்ளும் வழிமுறைகள் வன்முறையானவை என்பதால் அவை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல எனவும் சில்கொட் கூறியுள்ளார். எனவே, சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கேற்ப புலிகள் நடந்துகொள்ளத் தவறிவிட்டனர் எனும் குற்றச்சாட்டையும் சில்கொட் சுமத்தியுள்ளார். 3 தசாப்தங்களாக தமிழ் தலைமைகள் நடத்திய சாத்வீகப் போராட்டங்கள் மற்றும் சிங்களத் தலைமைகளுடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தங்கள் யாவும் விழலுக்கிறைத்த நீராகியதுடன் வடக்கு- கிழக்கிலேயே அரசபடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாக தமிழரின் பாதுகாப்பும் இருப்புமே கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையிலேயே தமிழர் தரப்பில் ஆயுதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதை சர்வதேச சமூகமோ, மேற்குலக இராஜதந்திரிகளோ புரிந்துகொள்ளாததையே சில்கொட்டின் கருத்து வெளிப்படுத்துகிறது. "யுத்தமுனைப்பிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி வரும் அரசாங்கம் ஒரு ஆக்கபூர்வமான அரசியல் தீர்வுத் திட்டத்தினை இன்னும் தான் முன்வைக்காமல் தட்டிக்கழித்து வருகிறது. அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) தீர்வுத் திட்டத்தினைத் தீட்டி வருவதாகவும் அதன் மீது தாம் பெருமதிப்பு வைத்திருப்பதாகவும் சில்கொட் கூறியுள்ளார். அரசாங்கத்தின் ஏமாற்று வித்தையொன்றுக்கு சில்கொட் பலியாகிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது.

வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் பின் தீர்வுத் திட்டமாம்

வரவு- செலவுத் திட்ட விவாதம் முடிவுற்றதும் மிதவாத தமிழ், முஸ்லிம் மக்கட் பிரிவினரின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய அதிகாரப் பகிர்வு கொண்ட அர்த்தமுள்ள யோசனைகளை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென்பதில் சர்வதேச சமூகம் அக்கறை கொண்டு செயற்படுமென தான் எண்ணுவதாகவும் சில்கொட் கூறியுள்ளார். இராணுவ அணுகுமுறையினூடாக மட்டும் இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியாதென அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை நாட்டை எப்படி மீண்டும் ஒற்றுமைப்படுத்தி, வெவ்வேறு சமூகங்கள் எவ்வாறு இணைந்து வாழ வழி சமைக்க வேண்டுமென்பதற்கான அரசியல் மதிநுட்பம் பிரதானம் எனவும் இதனை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும் எனவும் சில்கொட் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறான அரசியல் மதிநுட்பம் இலங்கையில் ஆட்சித் தலைவர் எவர் ஒருவரிடமாவது இருந்ததில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

மேலும், தமிழ் மொழி உபயோகம் உறுதிப்படுத்தல் கிழக்கில் கூட எல்லா சமூகங்களும் பயனடையும் விதத்தில் பாரபட்சமெதுவுமின்றி பணியாற்றல், மக்கள் மனங்களை வென்றெடுக்கக் கூடிய வகையில் செயற்படுதல் மற்றும் சட்ட ஆட்சி பேணி, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன்நிறுத்தல், காவல்துறை அடங்கலான அரச பணியகங்களில் இனவாதம் நிறுவனமயப்படுத்தப்பட்டிருக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.