Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவின் யுத்தம் இலங்கை பூராவிற்குமானதே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் யுத்தம் இலங்கை பூராவிற்குமானதே!-ஜெயராஜ்-

'எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பேன்" என சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் உயர்மட்டக் கூட்டத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமையானது, அரசு பெரும் போர் ஒன்றிற்குத் தயாராகிவிட்டதன் பிரகடனமாகவே கொள்ளத்தக்கதாகும்.

சிறிலங்கா அரசு பெரும் போருக்கெனத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் வகை யில் அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியில் பூரண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது என்பது அண்மைய அதன் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தும் ஒன்றாகும்.

இதன் ஓர் அங்கமாக ஆயுதப்படைக்கென வரவு-செலவுத் திட்டத்தில் ஏனைய துறைகள் அனைத்தையும் விட அதிகளவிலான நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. இது சிறிலங்காவின் அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் 18 வீதத்திற்கு மேற்பட்டதாகும்.

சிறிலங்கா அரசு 'ஓர் இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசு" என சர்வதேச ரீதியிலான மதிப்பீடு ஏற்படுத்தப்படும் அளவில் சிறிலங்காவில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்றுள்ளது. உலகில் இன்று குடித்தொகைக்கும், ஆயுதப்படையினருக்கும் இடையிலான விகிதாசாரம் உயர் நிலையில் உள்ள நாடுகளில் சிறிலங்காவும் ஒன்றாகும். தென்னாசியாவில் இது முதன்மை இடமாகும். அத்தோடு, கல்வி, சுகாதாரம், அபிவிருத்திப் பணிகள் என்பன வற்றைவிட ஆயுதப் படையினருக்கென அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, சிறிலங்கா ஆயுதப் படையினரின் பெருக்கமானது முப்படைகளுக்கும் ஆளணிகளைச் சேர்த்தல், ஊர்காவற்படைக்கென ஆட்களைத் திரட்டுதல் என்ற அடிப் படையில் படைப்பலம் பெருக்கப்பட்டு வருகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக, யுத்த நிறுத்த உடன்பாட்டின் பின்னர் மூன்று டிவிசன் படையினரைச் சிறிலங்கா இராணுவம் உருவாக்கியுள்ளதைச் சுட்டிக்காட்ட முடியும்.

இதில் 57 ஆவது டிவிசன் மன்னாரிலும் 58 ஆவது டிவிசன் மணலாற்றிலும் 59 ஆவது டிவிசன் அநுராதபுரத்திலும் தள மையத்தைக் கொண்டவையாகச் செயற்பட்டு வருகின்றன. இதில், 59 ஆவது டிவிசன் அண்மைய வாரங்களில் உருவாக்கப்பட்டதொன்றாகும்.

இதேவேளை, வரவு-செலவுத்திட்ட நிறைவேற்றத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டு விடலாம் என எண்ணிய அரசாங்கம் தமது எதிர்கால இராணுவ நடவடிக்கைகளை இனவாதக் கட்சிகளிடம் - குறிப்பாக ஜே.வி.பி.யிடம் உறுதி செய்து வரவு-செலவுத் திட்டத்தை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

கொழும்பில் இருந்து கசியும் தகவல்களின்படி வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவைப் பெற்றுக்கொண்டதற்காக அடுத்த ஆண்டை ஒரு யுத்த ஆண்டாகக் கொள்ளவும், யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறி, முழு அளவில் யுத்தத்தைப் பிரகடனம் செய்ய அரசு தயாராக உள்ளதாகவும் இதனைப் பேரினவாதக் கட்சிகளிடம் அரசு உறுதி செய்திருப்பதாகவும் ஊர்ஜிதம் செய்யப்படுகிறது.

அதாவது, யுத்தத்திற்கென அரசு இராணுவ, பொருளாதார, அரசியல் ரீதியில் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே இராணுவத் தளபதிகள், அமைச்சர்கள், ஆட்சித் தலைவர் உட்பட அனைவருமே யுத்தத்தைப் பற்றியும் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது பற்றியும் பேசுகின்றனர். குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் வரையறுத்துக் கூறுவதானால், ஆறு மாத காலப் பகுதிக்குள் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்துவிடப் போவதாகவும், அதாவது புலிகளை அழித்து விடப் போவதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், இன்றைய களநிலவரம் எவ்வாறு உள்ளது? அரசாங்கத்தரப்போ, இராணுவத் தரப்போ கூறிக்கொள்வது போன்றதானதொரு நிலையில் அது உள்ளதா? அரசாங்கமோ இராணுவமோ கூறிக்கொள்வது போன்று யுத்தமானது வன்னிக்குள் - குறிப்பாக, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மட்டும் - மட்டுப்படுத்தப்பட்டு விட்டதா? என்பது போன்ற கேள்விக்குப் பதில் தேடும்போதும், இன்றைய கள யதார்த்தம் குறித்து எவருக்குமே பல கேள்விகள் எழக்கூடும்.

கிழக்கு மாகாணத்தில் - குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பிமலைப் பிரதேசத்தை இராணுவம் சென்றடைந்ததாகக் கூறிக் கொண்டதோடு, விடுதலைப் புலிகளை கிழக்கில் இருந்து முற்றாக வெளியேற்றி விட்டதாகப் பிரகடனம் செய்தது. இதற்கென அரச தரப்பில் பெரும் வெற்றி விழாவும் ஏற்பாடு செய்யவும்பட்டது.

ஆனால், தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கூட ஒன்றிற்கு மேற்பட்ட பிரிகேட் துருப்புக்களையும் பல நூற்றுக்கணக்கில் ஊர்காவற் படையினரையும் நிறுத்த வேண்டியதாகியுள்ளது. அவ்வாறு இருந்தும் தாக்குதல்கள் இடம்பெறவே செய்கின்றன.

குறிப்பாக, யால காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் அங்கு தேடுதல் நடத்துவதற்கு மேலதிக துருப்புக்கள் தேவையென்ற நிலையும் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. சிலர் விடுதலைப் புலிகளின் வான் படையின் ஓடுதளம் இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கின்றனர். ஆனால், இது கிழக்கின் தென்கோடியில் மட்டும் உள்ள நிலை என்றில்லை. கிழக்கின் ஏனைய பகுதிகளிலும், அதாவது மட்டு.-திருமலைக்கும் இது பொருத்தப்பாடானதே ஆகும்.

இது ஒருபுறம் இருக்க, மேற்கில் மன்னார் மாவட்டத்தின் தெற்குக் கரையோரப் பகுதி நோக்கி இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு அதனை ஆக்கிரமித்துக் கொண்ட சிறிலங்காப் படைத்தரப்பு மன்னாரின் வட பகுதியிலும் தாக்குதல்களைத் தொடங்கியது.

மட்டுப்படுத்தப்பட்டவையாகவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவின் யுத்தம் இலங்கை பூராவிற்குமானதே!-ஜெயராஜ்-

இந்த வகையில், கடந்த ஓரிரு மாதங்களில் யுத்தத்தின் போக்கானது மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது போன்று வெற்றிப்பிரகடனங்கள் செய்யத்தக்கதாக அமையவில்லை என்பதே நிதர்சனமானதாகும். அவ்வாறானதொரு நிலை இருந்திருக்குமானால், மகிந்த ராஜபக்ச, வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகப் பேரங்கள் பேச வேண்டியதாகவோ, உறுதி மொழிகள் அளிக்க வேண்டியதாகவோ இருந்திருக்கமாட்டாது. வெற்றிப் பிரகடனம் ஒன்றுடன் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேறச் செய்திருப்பார். மாறாக, யுத்தத்தின் போக்கில் ஏற்பட்ட திருப்பங்களும், பின்னடைவுகளுமே மகிந்த ராஜபக்ச அரசியல் பேரங்களை நடத்த வேண்டிய நிலையை உருவாக்கியிருந்தது.

நன்றி: ஈழநாதம் (19.12.07)

http://www.tamilnaatham.com/articles/2007/...raj20071220.htm

கட்டுரை ஆசிரியரின் இந்த பகுதி கேள்விக்குரியதே.

ஜே.வி.பி மற்றும் தொண்டமான் போன்றவர்கள் இருக்குமட்டும் மகிந்த இதைப்பற்றி கவலைப்பட்டிருக்கவே மாட்டார். இந்தியா சொல்வதை தான் மலையக தமிழ் கட்சிகள் பின்பற்றும்.

பேரங்கள் எல்லாம் வெளியுலகை ஏமாற்ற தான். மகிந்த இப்போ அரசியலில் நன்றாக தேறிவிட்டார் போல தான் தெரிகின்றது.

யுத்த நிறுத்தமென்பது 6 ஆண்டுகழுக்கு முற்பட்டதுதான். ஆனால் போராட்டம் தொடங்கிய காலமுதல் யுத்தச் செலவீனம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அடுத்த வருடத்தினை யுத்த ஆண்டாகப் பிரகடனம் செய்வதற்கு இப்போ ஏன் அவசரம்.

"கொழும்பில் இருந்து கசியும் தகவல்களின்படி வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவைப் பெற்றுக்கொண்டதற்காக அடுத்த ஆண்டை ஒரு யுத்த ஆண்டாகக் கொள்ளவும் யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறி முழு அளவில் யுத்தத்தைப் பிரகடனம் செய்ய அரசு தயாராக உள்ளதாகவும் இதனைப் பேரினவாதக் கட்சிகளிடம் அரசு உறுதி செய்திருப்பதாகவும் ஊர்ஜிதம் செய்யப்படுகிறது."

இங்கே கட்டுரையில் எழுதப்பட்டுள்ள இந்த விடயம், 87 வீதம் யுத்தத்திற்கான ஆதரவைத் தெரிவித்திருக்கும் சிங்கள மக்களுக்கும் சந்தோசமான வாழ்வைக் கொடுக்குமா? என்பது சந்தேகம். இந்தத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பேச்சுவார்த்தைக்குள் அரசு வருமா? அல்லது மீண்டும் முருங்கை மரத்திலா?

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை ஆசிரியரின் இந்த பகுதி கேள்விக்குரியதே.

ஜே.வி.பி மற்றும் தொண்டமான் போன்றவர்கள் இருக்குமட்டும் மகிந்த இதைப்பற்றி கவலைப்பட்டிருக்கவே மாட்டார். இந்தியா சொல்வதை தான் மலையக தமிழ் கட்சிகள் பின்பற்றும்.

பேரங்கள் எல்லாம் வெளியுலகை ஏமாற்ற தான். மகிந்த இப்போ அரசியலில் நன்றாக தேறிவிட்டார் போல தான் தெரிகின்றது

இல்லையே, ஏனெனில் நாடு நாடாக அட்சய பாத்திரம் ஏந்த வேண்டியதில்லையே தான் ஒரு ஸ்திர நிலையில் இருந்திருந்தால்.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.