Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லாராவுக்கு பந்து வீசுவதே கடினமாயிருந்தது சச்சினை களத்தில் சந்தித்தது குறைவென்கிறார் முரளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லாராவுக்கு பந்து வீசுவதே கடினமாயிருந்தது சச்சினை களத்தில் சந்தித்தது குறைவென்கிறார் முரளி

[25 - December - 2007] [Font Size - A - A - A]

தான் சந்தித்த துடுப்பாட்ட வீரர்களில் லாராவுக்கு பந்து வீசுவதே கடினமாக இருந்ததாக முரளிதரன் கூறியிருக்கிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சமீபத்தில் தனது சொந்த ஊரான கண்டியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷேன் வோர்னின் அதிக டெஸ்ட் விக்கெட் (708 விக்கெட்) சாதனையை முறியடித்து புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரரானார். முரளிதரன் இதுவரை 118 டெஸ்ட் விளையாடி 723 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் 35 வயதான முரளிதரன் சென்னையைச் சேர்ந்த மதிமலரை திருமணம் செய்திருக்கிறார். இவர்ளுக்கு நரேன் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து முரளிதரன் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது;

"எனது 8 ஆவது வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன். பாடசாலையில் படிக்கும் போது வேகப்பந்து வீச்சாளராகவும் துடுப்பாட்ட வீரராகவும் இருந்தேன். எனது பயிற்சியாளர் தான் நீ ஏன் சுழற்பந்து வீச்சாளராக முயற்சிக்கக் கூடாது என்று என்னை ஊக்கு வித்தார். இதைத் தொடர்ந்து எனது 14 வயது முதல் சுழற்பந்து பயிற்சியை தொடங்கினேன்.

1991 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது தேசிய அணியில் இடம் கிடைத்தது. ஆனால், அங்கு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே விளையாட வாய்ப்புக் கிடைத்தது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் இடம் கிடைக்க வில்லை. இதன் பின் 1992ஆம் ஆண்டு ஆவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன். பதற்றமிருந்ததால் இந்த டெஸ்டில் என்னால் சரியாக செயல்பட முடியவில்லை. முதல் இனிங்ஸில் ஒரே ஒரு விக்கெட்டாக கிரேக் மெக்டமோட்டின் விக்கெட்டை கைப்பற்றினேன். இது தான் எனது முதல் சர்வதேச விக்கெட்டாகும்.

கிரிக்கெட்டில் நான் 6,7 ஆண்டுகள் கழித்துத் தான் `தூஸ்ரா' வகை பந்து வீச முயற்சி செய்தேன். சக்லைன் முஷ்டாக்கை பார்த்துத்தான் இந்த ஆசை எனக்கு வந்தது. இதற்கு 2 ஆண்டுகள் தீவிர பயிற்சி எடுத்தேன். முன்பு பந்து வீசிய போது சராசரியாக 4 அல்லது 5 விக்கெட்டுகள் கிடைத்தது. ஆனால், தூஸ்ரா வகைப் பந்து வீச்சுக்கு பின் டெஸ்டுக்கு சராசரியாக 7 முதல் 8 விக்கெட்கள் கிடைத்தன. எனது பந்து வீச்சு சர்ச்சைக்குள்ளான போது கிரிக்கெட் சபை நிர்வாகிகள், அணி வீரர்கள், மக்கள் எல்லோருமே எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். இதன் மூலம் சோதனையிலும் வெற்றி கண்டேன்.

நான் பந்து வீசிய வீரர்களில் எனக்கு சவால் அளிக்கும் வகையில் இருந்தவர் மேற்கிந்தியாவின் பிரையன் லாரா. சச்சின் டெண்டுல்கரும் சிறந்த துடுப்பாட்ட வீரர் தான். ஆனால், சில சுற்றுப் பயணத்தின் போது அவர் காயமடைந்திருந்ததால் அவரை அதிகமாக நான் எதிர் கொள்ளவில்லை.

வேகப்பந்து வீச்சாளர்களில் வாசிம் அக்ரம் என்னைக் கவர்ந்தவர். சுழற்பந்து வீச்சாளர்களில் கும்பிளே எனக்கு பிடித்தமானவர். அவர் எனது நண்பருமாவார். நான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய காலகட்டத்தில் தான் கும்பிளேயும் தொடங்கினார். இலங்கையில் சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா, சங்கக்கார ஆகியோரின் துடுப்பாட்டம் எனக்குப் பிடிக்கும்

வோர்னின் சாதனையை சொந்த மண்ணில் முறியடிப்பதே விருப்பமாக இருந்தது. எனது பெற்றோர்,மனைவி, நண்பர்கள், உறவினர்கள், சொந்த மக்கள் முன்னிலையில் சாதனை நிகழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. வோர்ன் எனக்கு இயன்பொதம் மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.

எல்லாவற்றுக்குமே ஒரு முடிவுண்டு. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் கிரிக்கெட்டில் இருப்பேன். அதன் பின் அடுத்த கட்ட முடிவெடுப்பேன். அந்தக் காலகட்டத்தில் எத்தனை விக்கெட்டுகள் வீழ்த்த முடியும் என்று கணிக்க முடியாது. ஓய்வுக்குப் பின் அக்கடமி தொடங்கும் எண்ணமில்லை. ஆனால், எனது நண்பர் கும்பிளே தனியாக பயிற்சி நிலையம் தொடங்கி சுழற்பந்து வீச்சு பயிற்சியளிக்கலாம் என்று எனக்கு யோசனை சொல்லியிருக்கிறார். எனவே, தனியாக அமைப்பு தொடங்கி அந்தப்பணியில் ஈடுபடும் உத்தேசமிருக்கிறது.

எனது மகன் நரேன் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறானோ அவன் விருப்பப்படியே விட்டு விடுவோம். கிரிக்கெட் விளையாடு என்று கட்டாயப்படுத்த மாட்டோம். அவனது விருப்பம் எதுவோ அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

1998 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடந்த டெஸ்டில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியது மறக்க முடியாதது. இதேபோல், 1996 ஆம் ஆண்டு லாகூரில் நடந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது என்றும் மறக்க முடியாத விடயமாகும். ஒரு தமிழன் என்று சொல்வதில் பெருமையாக இருக்கிறது. ஆனால், இதில் பிரித்துப் பார்க்கவிரும்பவில்லை.

கிரிக்கெட்டில் 20 ஓவருக்கு கீழ் குறைக்கப்பட்ட வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் 20ஓவர் போட்டி, ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி ஆகியவற்றுக்கு தனித்தனியாக வீரர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.

thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.