Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுனாமி பறித்த 4 குழந்தைகளை, மீண்டும் பெறுவேன் என்று சபதம் செய்த பெண் மூன்றாவது குழந்தையை பெற கர்ப்பமாக இருக்கிறார்

Featured Replies

சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 4 குழந்தைகளை பறிகொடுத்த பெண், குடும்ப கட்டுப்பாடு மறு ஆபரேஷன் செய்து 2 குழந்தைகளை பெற்றார். தற்போது அவர் 3-வது குழந்தை பெற கர்ப்பமாக உள்ளார்.

சுனாமியில் பறிகொடுத்த 4 குழந்தைகளையும் பெற்றெடுப்பேன் என்று அவர் சபதம் செய்து அதை நிறைவேற்றி வருகிறார்.

சுனாமி தாண்டவம்

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கிய சுனாமி பேரலைக்கு உலகின் பல நாடுகளில் லட்சக்கணக்கானவர்கள் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் வரை இறந்தனர். குமரி மாவட்டத்தில் பல கடற்கரை கிராமங்களில் ஏராளமானவர்கள் குடும்பம், குடும்பமாக உயிரிழந்தனர்.

குமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கொட்டில்பாட்டை சேர்ந்த ஒரு பெண் 4 குழந்தைகளை சுனாமிக்கு பறிகொடுத்தார்.

குடும்ப கட்டுப்பாடு செய்திருந்த அந்த பெண், மீண்டும் 4 குழந்தைகளையும் பெற்றெடுப்பேன் என்று சபதமிட்டு மறு ஆபரேஷன் மூலம் ஏற்கனவே 2 குழந்தைகளை பெற்றார்.

தற்போது 3-வதாக கர்ப்பம் ஆகியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-

குடும்ப கட்டுப்பாடு

குளச்சல் அருகே உள்ள கடற்கரையோர கிராமமான கொட்டில்பாட்டை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி ஆக்னஸ். இவர்களுக்கு அருண்பிரமோத் (வயது 8), பிரதிமா நாயகி (6), பிரதீஷா (4), ரஞ்சிதா (2) ஆகிய 4 குழந்தைகள் இருந்தனர்.

4-வது குழந்தை பிறந்ததும் இனி குழந்தை வேண்டாம் என்று ஆக்னஸ் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டார்.

விதி விளையாடியது

இந்த சூழ்நிலையில் அவர்களது வாழ்க்கையில் விதி விளையாடியது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலை இந்த பிஞ்சு குழந்தைகள் 4 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதில் பிரதீஷா, ரஞ்சிதா ஆகிய 2 பேரின் உடல்கள் மட்டும் கிடைத்தன. மற்ற 2 குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று இதுவரையிலும் தெரியவில்லை.

சுனாமியில் குழந்தைகளை இழந்த ராஜ×ம், ஆக்னேசும் கதறி துடித்தனர். 4 குழந்தைகளில் ஒன்று கூட மிஞ்சவில்லையே என்று மனம்நொந்து வாழ்ந்தனர். குழந்தைகளின் ஞாபகம் அவர்களை வாட்டி வதைத்தது. குடும்பக் கட்டுப்பாடு செய்து விட்டதால் இனி குழந்தைகளும் பெற முடியாதே என்று வேதனையுடன் காலத்தை கழித்தனர். இருந்தாலும் வேறு வழி இருக்கிறதா? என்றும் யோசித்தனர்.

விடிவு காலம்

இந்த நிலையில் சுனாமியில் வாரிசுகளை தொலைத்தவர்களில் குடும்பக்கட்டுப்பாடு செய்தவர்களுக்கு மறுஆபரேஷன் நடத்தி அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள தமிழக அரசு வழிவகை செய்தது.

இதை அறிந்த ராஜ்-ஆக்னஸ் தம்பதியர் மனம் நெகிழ்ந்தனர். இதன் மூலம் விடிவு காலம் ஏற்படும் என்று அவர்களுக்கு மனதில் நம்பிக்கை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சில நாட்களில் ஆக்னஸ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்து மறு ஆபரேஷன் செய்து கொண்டார். சுனாமியில் பறி கொடுத்த 4 குழந்தைகளையும் மீண்டும் பெற்றெடுக்க அவர் சபதமெடுத்தார். அதன்படி ஆபரேஷனுக்கு பிறகு சில மாதங்களில் அவர் கருதரித்தார்.

2 குழந்தைகள் பிறந்தன

பின்னர் 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சுனாமி நினைவு தினத்துக்கு 9 நாட்களுக்கு முன்னதாக அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஏற்கனவே சுனாமியில் இறந்த குழந்தை பிரதீஷா நினைவாக ஆரோக்கிய பிரதீஷா என்று பெயரிட்டு பெற்றோர் மகிழ்ந்தனர். தற்போது அந்த குழந்தைக்கு 2 வயதாகிறது.

இந்த நிலையில் ஆக்னஸ் மீண்டும் கர்ப்பம் அடைந்து 2-ம் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த 2-ம் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆரோக்கிய பிரதீமா என்று பெயரிட்டுள்ளனர். அதற்கு ஒரு வயது ஆகப்போகிறது.

3-வது குழந்தை

சுனாமியில் இறந்த 4 குழந்தைகளையும் பெற்று எடுப்பேன் என்ற சபதத்தின்படி அவர் 3-வது குழந்தை பெற தயாராகி வருகிறார். தற்போது அவர் 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

மறு ஆபரேஷன் செய்து குழந்தை பெற்றது குறித்து ஆக்னசிடம் கேட்டபோது ஆனந்த கண்ணீருடன் அவர் கூறியதாவது:-

என்னுடைய 4 குழந்தைகளும் சுனாமி பேரலையில் இறந்தது. அந்த குழந்தைகள் இறந்த பிறகு வேதனையில் வாழ்ந்தாலும், இழந்த குழந்தைகளை மீண்டும் பெற்றெடுக்க வேண்டும் என்று குறியாக இருந்தேன்.

மறு ஆபரேஷன் செய்த பிறகு எனக்கு வரிசையாக 2 குழந்தைகள் பிறந்ததும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். என் கணவருக்கும் மிகுந்த சந்தோஷமாக உள்ளது.

இந்த நிலையில் மேலும் 3-வது குழந்தையை பெற்றெடுக்க உள்ளேன். பிறக்கும் குழந்தைக்கும் இறந்து போன குழந்தையின் பெயரைத்தான் வைப்பேன்.

இவ்வாறு அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

viparam.com

நான்காவது குழந்தையையும் வெற்றிகரமாக பெற்றெடுக்க அவருக்கு ஆண்டவன் அருள் புரிவானாக..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.