Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளைக் கண்காணிக்க புதிய விமான தளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளைக் கண்காணிக்க புதிய விமான தளம்

புதன்கிழமை, டிசம்பர் 26, 2007

ராமநாதபுரம்: விடுதலைப் புலிகளின் விமான பலத்தால், தமிழக கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு தமிழகம் அல்லது புதுவையில் விமான தளத்தை அமைக்க இந்திய கடலோரக் காவல் படை திட்டமிட்டுள்ளது.

கிழக்குப் பிராந்திய இந்திய கடலோரக் காவல் படை ஐஜி ராஜேந்திர சிங் ராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். பின்னர் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப் பகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். கடலோரப் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் ராமநாதபுரம் திரும்பிய அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தஞ்சையில் உள்ள விமானப்படை அதிகாரிகள், புதுச்சேரி மற்றும் தூத்துக்குடியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகளுடன் விமான தளம் அமைப்பது குறித்து பேச்சு நடந்து வருகிறது.

தமிழகம் அல்லது புதுச்சேரியில் விமான தளத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்தில் அமைப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

விமான தளம் அமைப்பது தொடர்பான ஒப்புதல் கிடைத்தவுடன் கடலோரக் காவல் படையின் கண்காணிப்பு விமானங்களான டொர்னியர் ரக விமானங்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்படும்.

புலிகளால் மிரட்டல் இல்லை:

தமிழக கடலோரப் பகுதிகளுக்கு விடுதலைப் புலிகளால் எந்தவித மிரட்டலும் தற்போதைக்கு இல்லை. கிழக்குக் கடலோரப் பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது.

தமிழகத்திலும், ஒரிசா மாநிலம் கோபால்பூரிலும் தலா ஒரு அதி நவீன கடலோரக் காவல் படை நிலையம் அமைக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் நாகை உள்ளிட்ட 3 இடங்களில் இந்த நிலையம் அமைக்கப்படும். இடம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசைக் கோரியுள்ளோம்.

இந்த நிலையங்களில் பெரிய கப்பல்கள், இடை மறித்துத் தாக்கும் விமானங்கள் ஆகியவை பணியில் ஈடுபடுத்தப்படும். இதுதவிர அதி நவீன தகவல் தொடர்பு மையமும் அமைக்கப்படும்.

சர்வதேச கடல் எல்லைப் பகுதியில், இலங்கையுடன் இணைந்து கூட்டு ரோந்து செல்லும் திட்டம் எதுவும் இல்லை. இதுதொடர்பான முடிவை மத்திய அரசுதான் எடுக்கும்.

தமிழக காவல்துறையுடன் இணைந்து கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடலோர காவல் நிலையங்கள் மிகவும் சிறப்பாக செயலாற்றி வருகின்றன என்றார் அவர்.

http://thatstamil.oneindia.in/news/2007/12...ir-station.html

அப்ப உங்களுக்கு பாகிஸ்தான்காரன் சும்மா வெளுத்து கட்டுவான். சிகரெட் ஊதி முடிக்கிற்துக்குள்ள இல்லாம போற பெடியளுக்கே இந்தளவு ஆர்ப்பாட்டம் எண்டால் பாகிஸ்தான் காரன் பாடு கொண்டாட்டம் தான்

இந்தியாவின் தளம்பல் நிலையைத்தான் உலக நாடுகள் தமது பலமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. தங்களைப் பாதுகாக்கவா? அல்லது இலங்கைக்கு உதவுவதற்காகவா? இந்த ஏற்பாடு? விடுதலைப்புலிகளால் மிரட்டல் இல்லை என்று தெரிந்து கொண்டு இலங்கைக்கு உதவுதல்தான் இதன் உள்நோக்கம். எல்லோருக்குமே இலங்கை வேண்டும். ஆனால் புலிகள் யாருக்கு வேண்டும். அவர்களும் எல்லோருக்கும் வேண்டும். அப்போதுதான் தேவைப்படுபவர்களின் காலடியில் இலங்கை வீழ்ந்து கிடக்கும்.

இலங்கையில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றத்தைத் தொடாந்து விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் தவிக்கும் தடுக்கும் விதமாக தமிழக, நாகபட்டின கடலோரப் பகுதியில் இந்தியக் கடலோரக் காவல் படையினர் முகாமொன்று அமைக்கப்பட உள்ளது.

விடுதலைப்புலிகள் மற்றும் அந்நியர் ஊடுருவலைத் தடுக்க நாகபட்டினத்தில் இந்திய கடலோர காவல் படை முகாம் விரைவில் அமைக்கப்படவுள்ளது.'. என்று தென் பிராந்திய ஐ.ஜீ..ராஜேந்திர சிங் குறிப்பிட்டுள்ளர் எனத் தமிழக நாளேடுகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

மூன்று நாள் ஆய்வுப் பயணமாக, விமானம் மூலம் உச்சிப்புளி வந்த ஐ.ஜீ., மண்டபத்தில் தங்கி 'ஹோவர் கிராப்ட் கப்பலில் பாக் ஜலசந்திக் கடற் பகுதியிலுள்ள தீவுகள், சர்வதேச கடல் எல்லைப் பகுதிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர் ஊடகவியலாளர்களைக் கரையில் சந்தித்த அவர் :-

'கடற் பகுதிகளில் அந்நிய ஊடுருவலைத் தடுக்க தமிழகத்தின் நாகபட்டினம், ஒரிசா மாநிலத்தில் கோபல பூர் பகுதியில் புதிதாக இந்தியக் கடலோரக் காவல் படை முகாம் அமையவுள்ளது.

வான் வழியை கண்காணிக்க தஞ்சாவூர், புதுச்சேரி, தூத்துக்குடி ஆகிய மூன்றில், ஏதூவது ஒரு இடத்தில் விமானத்தளம் அமைக்கப்படவுள்ளது.

ஆழ்கடல் ரோந்து பணிக்காக 375 கோடி ரூபா(இந்திய) மதிப்பில் மூன்று புதிய கப்பல்கள், ஆழம் குறைவான பகுதியில் ரோந்து செல் ஐந்து கப்பல்கள், மேலும் 16 சிறிய கப்பல்கள் தேவை என மத்திய அரசுக்கு நாம் பரிந்துரைத்துள்ளோம்.

கடலில் மீனவர்கள் ஆபத்தில சிக்கும் போது 'சிக்னல்' கொடுக்கும் கருவியை 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளது. இக்கருவியை முதன் முதலாக தமிழகத்தில் சென்னைப் பகுதியிலுள்ள விசைப்டகுகளுக்கு தமிழக அரசு மூலம் வழங்கவுள்ளோம். இக்கருவியை மீனவர்கள் பயன்படுத்தும் போது எந்த இடத்தில் மீனவர்கள் ஆபத்தில் சிக்கி உள்ளனர் என்பதை அறிய முடியும். இதன் மூலம் மீட்புப் பணியில், கடலோர காவல்படையினர் எளிதாக ஈடுபட முடியும்" என்றார்.

நன்றி சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.