Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் இயக்கம் தடைசெய்யப்படுமானால் பேச்சுக்கான கதவை அரசே மூடுவதாக அமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கம் தடைசெய்யப்படுமானால் பேச்சுக்கான கதவை அரசே மூடுவதாக அமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

[sunday December 30 2007 10:23:49 PM GMT] [யாழ் வாணன்]

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்படுமானால், பேச்சுவார்த்தைக்கான கதவை அரசாங்கமே இழுத்து மூடுவதாக அமையும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல், யுத்தத்தை நிரந்தரமாக நிறுத்த முடியாது. தொடரும் யுத்தத்தின் மறுதரப்பாக புலிகள் இயக்கமே இருப்பதால், அவர்களை தடைசெய்துவிட்டு அரசாங்கம் யாருடன் பேச்சு நடத்தப்போகிறது? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என். ஸ்ரீகாந்தா கேள்வியெழுப்பினார்.

போர் நிறுத்த உடன்படிக்கை ரத்துச்செய்யப்படுமானால், முழுமையான யுத்தத்தினை உத்தியோகபூர்வமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியதாகவே அமையும். இந்த உடன்படிக்கையை ரத்துச்செய்வதற்கு அரசாங்கம் முன்வந்தால், சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டிவரும் என்றும் அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ரத்துச்செய்ய வேண்டும் எனவும் புலிகள் இயக்கத்தை தடைசெய்யவேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் கேட்டபோதே என். ஸ்ரீகாந்தா எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், போர்நிறுத்த உடன்படிக்கையை ரத்துச்செய்வதற்கு அரசாங்கம் விரும்பினால், அதனை தாராளமாக செய்ய முடியும். கடந்த 17 மாதங்களுக்கும் மேலாக இந்த உடன்படிக்கை செயலிழந்துவிட்டபோதிலும், அரசாங்கம் அதனை ரத்துச்செய்வதற்கு முன்வரவில்லை. இதிலிருந்தே இந்த விடயத்தில் உள்ள சிக்கலை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

போர்நிறுத்த உடன்படிக்கை ரத்துச்செய்யப்படுமானால், முழுமையான யுத்தத்தினை உத்தியோகபூர்வமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியதாக அர்த்தப்பட்டுவிடும். இந்நிலையில், அரசாங்கத்தினால் இவ்விதம் செய்ய முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகும். இதுதொடர்பில் முடிவு செய்ய வேண்டியதும் அரசாங்கமே. இதனடிப்படையில் போர்நிறுத்த உடன்படிக்கை ரத்துச்செய்யப்படுமானால், அது சர்வதேச ரீதியாக எதிர்ப்பை சம்பாதிக்கவே வழிவகுக்கும்.

இந்த காரணத்திற்காகவே போர்நிறுத்த உடன்படிக்கை பெயரளவில் இருக்கின்றது. இந்நிலையில், விடுதலைப்புலிகளை அரசாங்கம் தடைசெய்தால், பேச்சுவார்த்தைக்கான கதவை அரசாங்கமே இழுத்து மூடுவதாக அமையும். இனப்பிரச்சினையின் விளைவாகத்தான் யுத்தம் தொடர்கின்றது. இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணாமல், யுத்தத்தை நிரந்தரமாக நிறுத்த முடியாது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனில், தமிழின தரப்பில் விடுதலைப்புலிகளுடனேயே அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனெனில், தொடரும் யுத்தத்தின் மறுதரப்பாக அந்த இயக்கமே உள்ளது. இதுதான் யதார்த்தம். இந்நிலையில், புலிகளை தடைசெய்துவிட்டு யாருடன் அரசாங்கம் பேச்சு நடத்தப்போகிறது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் பேச்சு மேசைக்கு போகப்போவதில்லை. விடுதலைப்புலிகளுடன் அரசாங்கம் பேச்சு நடத்தி, பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திட்டவட்டமான நிலைப்பாடு. இந்நிலையில், வேறு யாருடன் அரசாங்கம் பேச்சு நடத்தப்போகிறது?

தமிழ் மக்கள் மத்தியில் எந்தவித ஆதரவும் அற்ற ஈ.பி.டி.பி. மற்றும் பிள்ளையான் குழு போன்ற ஆயுதக்குழுக்களுடனா பேச்சு நடத்தப்போகிறது? இப்போதாவது யதார்த்த நிலைமைகள் அரசு தரப்பால் உணரப்பட வேண்டும். போர்நிறுத்த உடன்படிக்கையை ரத்துச்செய்வது பற்றியோ அல்லது புலிகள் இயக்கத்தை தடைசெய்வது பற்றியோ அரசியல் மட்டத்திலேயே அரசாங்கம் ஆராய வேண்டும். மாறாக நிர்வாக அதிகாரிகள் மட்டத்தில் அல்ல.

இந்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை அல்ல. ஒட்டுமொத்தமாக ஜனாதிபதியும் அரசாங்கமும் என்ன முடிவை எடுக்கப்போகிறார்கள் என்பதுதான் இன்றுள்ள கேள்வியாகும் என்றார்.

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.