Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழர்கள் தாயக விடுதலையை விரைவுபடுத்தும் செயற்பாட்டில் இணைந்து கொள்ள வேண்டும்: புத்தாண்டுச் செய்தியில் சுவிஸ் தமிழர் பேரவை

Featured Replies

புலம்பெயர் தமிழர்கள் தாயக விடுதலையை விரைவுபடுத்தும் செயற்பாட்டில் இணைந்து கொள்ள வேண்டும் என்று சுவிஸ் தமிழர் பேரவை விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலையை விரைவுபடுத்தும் வகையில்

தாயக விடுதலையை விரைவுபடுத்தும் வகையில்

சுவிஸ் தமிழர் பேரவை அழைப்பு

""புலம்பெயர் தமிழர்கள் தாயக விடுதலையை விரைவுபடுத்தும் செயற்பாட்டில் இணைந்துகொள்ள வேண்டும்.''

இவ்வாறு சுவிஸ் தமிழர் பேரவை விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளது.

இது குறித்து இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

மற்றொரு புதுவருடத்தில் உலகம் காலடியெடுத்து வைத்துள்ளது. பூமிப்பந்தில் வாழும் மனிதர்களில் பெரும்பாலானோர் நம்பிக்கையுடன் 2008ஆம் ஆண்டில் பிரவேசிக்கின்றனர். தத்தம் நாடுகளில் நிலவும் ஜனநாயகம், ஸ்திரத்தன்மையுள்ளஅரசு, நிலையான பொருளாதார வளர்ச்சி, சக மனிதர்களுடனான புரிந்துணர்வு, எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்பு என்பன அவர்களிடம் நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்திருக்கின்றன.

ஆனாலும்கூட, மனித குலம் நாகரிகத்தின் உச்சக்கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படும் இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும்கூட உலகில் ஆங்காங்கே வாழும் ஒரு சில சமூகங்கள் பிறக்கும் புதுவருடத்திலும்கூட நம்பிக்கையீனத்துடனும் நிச்சயமற்ற எதிர்காலத்துடனுமேயே காலடியெடுத்து வைக்கின்றன.

அத்தகைய மக்கள் கூட்டத்தில் ஒன்றாகவே ஈழத்தமிழினமும் உள்ளது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடரும் கொடிய யுத்தத்தின் விளைவாக சுமார் ஒரு லட்சம் உயிர்களை ஈழத் தமிழினம் பலிகொடுத்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாப் பெறுமதியான சொத்தழிவுக்கும், ஆயிரக்கணக்கில் பெண்கள் விதவைகளாகவும், கிட்டத்தட்ட அதேயளவான சிறார்கள் ஆதரவற்றவர்கள் ஆகவும், மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு வீதத்தினர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகதிகளாக அவல வாழ்வு வாழும் நிலைக்கு அது உட்படுத்தப்பட்டுள்ளது. தினமும் தொடரும் விமானக் குண்டுவீச்சு, எறிகணைவீச்சு, பொருளாதாரத் தடை, பற்றாக்குறை என கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்களை அனுபவித்து வரும் சூழல் ஈழத் தமிழர்களுக்குத் தொடர்கதையாகியுள்ளது.

2002ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தான போது தமக்கு நீதி கிடைக்கும் எனத் தமிழர்களிடம் உருவான நம்பிக்கை கடந்த 5 வருடங்களில் பொய்த்துப்போனது. அதேபோன்று,சர்வதேச சமூகம் தமது விடயத்தில் நீதியாக நடந்துகொள்ளும் என்ற எதிர்பார்ப்பும் கூட மெல்ல மெல்லத் தேய்ந்துவருகின்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்து 1948ஆம் ஆண்டின் பின்னர்,மாறி மாறி ஆட்சிக்கு வந்த சகல சிங்கள அரசுகளும் தமிழ் மக்களின் வாழ்வை போட்டி போட்டுக்கொண்டு துயர்மிக்கதாக்கி வந்த போதிலும்கூட மஹிந்த ராஜபக்ஷ அரசு அதில் பலபடி முன்னணியிலேயே நிற்கின்றது.

இந்த அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது என்ற போதிலும் கூடத் தமிழ் மக்களுக்கு இந்த ஆட்சி செய்துவிட்ட கொடுமை மிகப்பெரியது. தரை மூலமாகவும், ஆகாய மார்க்கமாகவும் தமிழ் மக்களைக்கொன்று குவிப்பதில் மஹிந்த அரசு சாதனை படைத்து நிற்கின்றது. இது தவிர சட்ட விரோத மனிதக் கடத்தல்கள், சித்திரவதைகள், நீதிக்குப் புறம்பான கொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள், பலவந்தப்படுத்த இடப்பெயர்வுகள், காணாமற்போதல்கள் எனத் தமிழ் மக்களின் துயரத்தை அதிகப்படுத்தியதில் ராஜபக்ஷ அரசே முன்னிலை வகிக்கின்றது.

புலம்பெயர் தமிழ் மக்களாகிய நாமும் இக்காலப் பகுதியில் பல அஞ்சலி நிகழ்வுகளையும், துயர் பகிர்வுகளையும் நடத்திவிட்டு கனத்த இதயங்களினூடே நிற்கின்றோம். இருண்ட சுரங்கத்தின் முடிவில் சிறு ஒளிக்கீற்றாவது தென்படாதா? எமது மக்களின் துயரத்துக்கு முடிவு கிட்டாதா? எனக் காத்து நிற்கின்றோம்.

புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கும் நாம் கடந்த வருட நிகழ்வுகளை மீள் சிந்தனைக்கு உட்படுத்திப் புதிய வருடத்தில் எமது செயற்பாடுகளை செழுமை மிக்கதாக்க திடசங்கற்பம் கொள்வோம்.

இந்த வேளையிலே புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாயக விடுதலையை விரைவுபடுத்தும் செயற்பாட்டில் தம்மை இணைத்துக் கொள்ளவேண்டிய கடப்பாடு உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் எமது தேசத்தின் இராஜ தந்திரிகளாக மாறி, எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை எமது மக்களின் அவலங்களை சர்வதேச சமூகத்திற்கு எமது மக்களின் சார்பில் எடுத்துரைப்பவர்களாக மாற வேண்டும். நாம் சந்திக்கும் ஒவ்வொரு வெள்ளையினத்தவரிடமும், அது வேலைத் தலமாயினும், பாடசாலையாயினும், போக்குவரத்தின் போதாயினும், விருந்துபசாரத்தின் போதாயினும் எமது உளக்கிடக்கையை வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக எமது கருத்துகள் அரச மட்டத்தை எட்டும் வாய்ப்பு உள்ளது.

சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை சுமார் 42 ஆயிரம் ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இதுவரை சுவிஸ் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15ஆயிரம் பேர் வெகுவிரைவில் குடியுரிமையைப் பெறவிருக்கின்றார்கள். இதற்கூடாக இந்த மக்கள் சட்டபூர்வமாக அரசியல் கட்சிகளில் இணைந்து செயற்படவும் தேர்தல்களில் பங்கெடுக்கவும் வாய்ப்புள்ளது. இதுகூட எமது தாயகப் பணிக்கு உதவக்கூடிய வாய்ப்பைத் தருகின்றது. எனவே, புதிய ஆண்டில் இந்தத் திசையில் கூட நாம் கவனஞ் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.

புலம்பெயர் வாழ்வில் பல்வேறு நாடுகளில் இருந்து அகதிகளாக வருகை தந்த மக்களை நாம் காணுகிறோம். இவர்களுள் தமிழ் மக்கள் நல்ல பெயரையே சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். எனினும், இந்த நற்பெயரைக் கெடுத்துவிட இலங்கை அரசும் அதன் கைக்கூலிகளும் ஒருசில தற்குறிகளும் முயன்று வருவதை அவதானிக்க முடிகின்றது. இவர்களின் எளிய தந்திரோபாயங்களுக்கு நாமும் நமது பிள்ளைகளும் பலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியதும் அவசியமானது.

எதுவாயினும், நாம் செல்லவேண்டிய பாதை வெகுதொலைவில் இருக்கின்றது என்ற கசப்பான உண்மையையே கடந்த வருடம் எமக்குப் புலப்படுத்தி நிற்கின்றது. எனினும், விடுதலையை வேண்டி நிற்கும் மக்கள் துவண்டு விடக்கூடாது. அவர்கள் நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபோட வேண்டியது அவசியம். காலம் கனியும் என்று காத்திராமல் காலத்தைக் கனிய வைக்க முயற்சி செய்வோம். மலரும் ஆண்டில் சுதந்திர மனிதர்களாய் ஏனைய தேசங்களோடு நாமும் ஒரு தேசமாய் வாழுவோம் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டை எதிர்கொள்வோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.sudaroli.com/pages/news/today/19.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.