Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெங்களூர் கொலைகாரி மல்லிகா: மேலும் 3 பெண்களை கொலை செய்தாரா?- போட்டோக்களை காட்டி போலீஸ் விசாரணை

Featured Replies

பெங்களூர் புறநகர் பகுதியில் கோவிலுக்கு சென்ற பெண்களை மயக்கி சயனைடு கொடுத்து கொன்று நகை கொள்ளையடித்த கொலைகாரி மல்லிகா கைது செய்யப்பட்டார்.

பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவள் 6 பெண்களை கொன்று நகை, கொள்ளையடித்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முதலில் மல்லிகா ஏலச்சீட்டு நடத்தி வந்தாள். இதில் பொதுமக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டினார். தினமும் ஏராளமானோர் வந்து பணத்தை திரும்ப கேட்டு நச்சரித்து வந்தனர். மல்லிகா ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் கொண்டவள். அதனால் கடனை அடைக்கவும் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் பெண்களை கொன்று நகைகளை கொள்ளையடித்ததாக போலீசில் தெரிவித்து இருக்கிறாள்.

இதற்கிடையே பெங்களூர் கலாசிபாளையம் போலீஸ் எல்லைபகுதியில் 3 பெண்கள் கடந்த 1999-ம் ஆண்டு முதல் மாயமாகி விட்டார்கள். அவர்கள் கதி என்னவென்று தெரியாமல் உள்ளது.

அவர்களும் மல்லிகா வால் கொலை செய்யப்பட்டு இருப்பார்களோ என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கைதான மல்லிகாவின் போட்டோ பெங்களூர் டெலிவிசன்களில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்த மாயமான 3 பெண் களின் உறவினர்கள், பெங்க ளூர் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் வந்தனர். மாயமான 3 பெண்களும் மல்லிகாவுக்கு தெரிந்தவர்கள். எனவே மல்லிகா விடம் விசாரணை நடத்தி னால் அவர்கள் கதி என்ன வென்று தெரியும் என்று கூறினார்கள்.

இதையடுத்து சிறையில் இருக்கும் மல்லிகாவிடம் 3 பெண்களின் போட்டோக் களை காட்டி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இது தவிர மேலும் பல பெண்களை மல்லிகா கொன்று இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூர் புறநகர் பகுதியில் மாயமான பெண்கள், அனாதைப் பிணங்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

மலலிகாவின் போக்கு பிடிக்காமல் அவரது கணவர் அனுமந்தப்பா ஏற்கனவே பிரிந்து சென்றுவிட்டார். அவர் பெங்களூர் கித் வாய் ஆஸ்பத்திரி அருகே டெய்லராக வேலை பார்த்துவரு கிறார். மகன் டாக்சிடிரைவராக இருக்கிறார். 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் தந்தையுடனேயே வசித்து வருகிறார்கள்.

மல்லிகா தனது தாயார் போரம்மாவுடன் பெங்களூர் அருகே உள்ள கக்கலிபுரா கிராமத்தில் வசித்து வந்தாள். ஆனால் வாரம் ஒருமுறைதான் இங்கு வருவாள். மற்ற நாட்கள் எங்கு இருப்பாள் என்று தெரியாது.

கணவனை பிரிந்த மல்லிகாவுக்கும் 35வயது வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

இவர்கள் ஒவ்வொரு கோவிலாக சென்று வாட கைக்கு அறைஎடுத்து தங்கி உல்லாசமாக இருப்பார்கள். தாய் கேட்கும் போது கோவி லில் பூஜை நடத்தி வருகிறேன் என்று மல்லிகா சொல்லி விடு வாள். இவ்வாறு கோவில் கோவிலாக சென்ற போது தான் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கோவிலுக்கு வரும் பெண்களை சயனைடு கொடுத்து கொன்று கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

கோவிலுக்கு தனியாக நகைகள் அணிந்து வரம் பெண்களைத்தான் குறி வைப்பார்கள். அவர்களிடம் அன்பாக பேசி நலம் விசாரித்து இந்த பெண்களை மயக்கி விடுவார்கள்.

தங்களுடன் தங்கி நீண்ட நாள் பூஜை நடத்தினால் நல்லது நடக்கும், கணவர் உடன் வரக்கூடாது என்று கூறி கோவில் அறையில் தங்களுடனேயே தங்க வைப் பார்கள்.

அப்போது சயனைடு கொடுத்து கொன்று விட்டு நகைகளுடன் இருவரும் தப்பி விடுவார்கள். அதன் பிறகு அடுத்த கோவிலுக்கு சென்று விடுவார்கள். கைதான மல்லிகாவிடம் இருந்து போலீசார் செல்போனை கைப்பற்றினார்கள். அதை வைத்து மல்லிகாவின் கள்ளக்காதலன் யார் என் பதை கண்டு பிடித்து கைது செய்தனர். அவனது பெயர் விவரங்களை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர்.

இதற்கிடையே மல்லிகா பெண்களை கொன்றது குறித்து வாய் திறக்க மறுக் கிறாள். இதனால் அவள் எத்தனை பெண்களை கொலை செய்தாள் என்பதை கண்டு பிடிக்க அவளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.