Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென் பிராந்தியத்தில் கவனத்தை திருப்பும் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென் பிராந்தியத்தில் கவனத்தை திருப்பும் இந்தியா

[04 - January - 2008]

விடுதலைப் புலிகளின் தரைவழி, வான்மார்க்க தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய ஆயுதப் படைகள் தென்பிராந்தியக் குடாவில் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.

இந்த வருட முற்பகுதியில் இந்தப் பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாக யூ.பி.ஐ. செய்தி சேவை நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருக்கிறது.

`இலங்கைப் படையினர் மீது விடுதலைப் புலிகள் தரைவழியிலும் வான்மார்க்கமாகவும்

தாக்குதல்களை முன்னெடுத்ததால் அச்சுறுத்தல் உணர்வு இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது. அதனால் அடுத்தவருட முற்பகுதியில் தெற்குக் குடாவில் தொடர்ச்சியாக கூட்டுப்பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்தியாவின் ஆயுதப் படைகளிடம் கேட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுவரை சீனா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அச்சுறுத்தல்கள் இருந்ததால் ஆயுதப் படையினர் அந்தப் பகுதியிலேயே அதிகளவுக்கு கவனத்தை திருப்பியிருந்தனர். ஆனால் விடுதலைப் புலிகள் கடந்த 9 மாதங்களில் தொடர்ச்சியாக மேற்கொண்ட விமானத் தாக்குதல்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அதன் தெற்குப் பிராந்திய கரையோரத்திலும் கடலிலுமிருந்து அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுத்து நிறுத்த ஆயத்தமாக இருப்பது அவசியமான விடயம் என்று பாதுகாப்பு விவகார ஆய்வாளர் ராஜீவ் சர்மா தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் இந்த நடவடிக்கையானது அதன் பாதுகாப்பு தொடர்பான உபாயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை வெளிப்படுத்துவதுடன் முதற் தடவையாக பாதுகாப்புத் தொடர்பான உபாயங்களை வகுப்போர் மற்றும் திட்டமிடுவோர் தெற்குக் குடாவிலிருந்து அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பது தொடர்பாக கவனத்தை திருப்பவுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் நிலைவரம் தொடர்பாக இந்திய அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்துவருவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

தெற்குக்குடாவில் ஏதாவது தாக்குதல் இடம்பெற்றால் அதனை எதிர்கொள்வதற்குத் தயாராக படையினர் போர்ப்பயிற்சி நடத்த திட்டமிட்டிருப்பதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் யூ.பி.ஐ.க்கு கூறியுள்ளார்.

இரண்டு சிறிய விமானங்களைப் பயன்படுத்தி 400 கிலோமீற்றர் தூரம் பறந்து சென்று இரவு நேரத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்ததையிட்டு இந்திய பாதுகாப்பு, வெளிவிவகாரத் துறையினர் ஆச்சரியமடைந்திருந்தனர்.

உத்தேச கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகள் இந்தியாவின் முக்கியமான கடல் பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதென இந்திய அரசு கூறுகிறது. இந்த உத்தேச கூட்டுப் பயிற்சியில் இந்திய விமானப் படையின் முன்னணி யுத்த விமானங்கள், கடற்படையின் போர்க்கப்பல்கள், கரையோரக் காவற்படையினர், கடல் வழித் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்ட இராணுவப் பிரிவுகள் என்பன ஈடு படுத்தப்படவுள்ளன.

கடலில் இடம்பெறும் கடத்தல்கள் மற்றும் தீவிரவாதக் குழுக்களின் ஆகாய, கடல் மார்க்க ஊடுருவல் அச்சுறுத்தல்களை கையாள்வது தொடர்பான யுத்த விளையாட்டுகளையும் நடத்த பாதுகாப்பு விடயங்களில் திட்டமிடுவோர்கள் உத்தேசித்துள்ளனர்.

`விடுதலைப் புலிகள் நாளுக்கு நாள் பலமடைந்து வருகின்றமையால் இந்தமாதிரியான பயிற்சிகளை படையினர் முன்னெடுக்க வேண்டும் என்று ஆசிய கேந்திரக் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.பி. மகாபத்ரா தெரிவித்திருக்கிறார். இவர் தெற்காசியாவின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்யும் நிறுவனமான ஆசிய கேந்திர நிலையத்தைச் சேர்ந்த புத்திஜீவியாவார்.

தென் பிராந்தியத்தில் கூட்டுப்படைப் பயிற்சிகளில் ஈடுபடுவது இலங்கைப் படையினருக்கு உதவுவதை இலக்காக கொண்டதல்ல என்று இந்தியா தெரிவித்திருப்பதுடன் இந்த நடவடிக்கைள் இந்தியாவின் கடல் எல்லையின் பாதுகாப்புக்காகவே என்றும் கூறியுள்ளது.

இந்திய விமானப் படையினர் 2008 இல் நாட்டின் தென்பகுதியில் அதிக கவனத்தை செலுத்தவுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுவரை தென்பிராந்தியம் கைவிடப்பட்டிருந்ததாகவும் ஆனாலும் கடந்த டிசம்பர் மாதம் `தக்ஷிண பிரகார' என்ற கூட்டு ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

தற்போது பாக்கு நீரிணையில் இந்தியக் கடற்படையினர், கரையோரக் காவல் படையினர் ஹேவர் கிராப்ட், கப்பல்கள், விமானங்களைப் பயன்படுத்தி ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்

http://www.thinakkural.com/news/2008/1/4/i...s_page43546.htm

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தியா சுற்றிவளைக்கப் பட்டிட்டுது. நல்ல விசயம். பேசாம தமிழீழம் அமெரிக்காவோட ஒரு ரகசியம் ஒப்பந்தம் போட்டு தாய்வான் போல மிசைல்ஸை அடுக்கி வைக்க இடமளிச்சா காணும். இந்தியாவிட வல்லரசுக் கனவு அம்போ..........! :lol::)

இந்தியாவில உள்ள கொள்கை வகுப்புவாதிகளுக்கு தலைக்க ஒன்றுமே இல்லையா...???! சிங்களவனுக்கு வால் பிடிச்சு.. அழியுறதே அவையிட கொள்கை போல..! :D:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இந்தியா சுற்றிவளைக்கப் பட்டிட்டுது. நல்ல விசயம். பேசாம தமிழீழம் அமெரிக்காவோட ஒரு ரகசியம் ஒப்பந்தம் போட்டு தாய்வான் போல மிசைல்ஸை அடுக்கி வைக்க இடமளிச்சா காணும். இந்தியாவிட வல்லரசுக் கனவு அம்போ..........! :):D

இந்தியாவில உள்ள கொள்கை வகுப்புவாதிகளுக்கு தலைக்க ஒன்றுமே இல்லையா...???! சிங்களவனுக்கு வால் பிடிச்சு.. அழியுறதே அவையிட கொள்கை போல..! :D:lol:

என்ன நெடுக்ஸ் திடிரென உங்கள் எழுத்தில் பல மாற்றங்கள் தெரியுது :lol: . கட்சி மாறிட்டியளோ :D:lol:

எல்லாம் இந்த கிழட்டு ராமசாமியின் கொள்கையையும் தமிழ்தேசியத்தையும் ஒன்றாக முன்னெடுக்கும் கட்சிகளின் வழியில்லா அரசியலே............

சரி தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியாவ்து இந்திய மத்திய அரசின் உதவியை தடுத்து இருக்கா??????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் கனவு எல்லாம் தவிடு பொடிதான். :lol: .

வடக்கே பயம் என்று சிலவற்றை தெற்கே அமைச்சா. இப்ப அதைவிட பயமாய் இருக்காம் பாப்பாணர்களுக்கும் அதன் அடிமைகளுக்கும் :) .

இந்தியா முன்னொரு காலத்தில் தமிழ் நாட்டிலிருக்கும் சிலரை கொண்டு அவர்களின் தமிழ் பேச்சாற்றலை பயன்படுத்தி ஈழத்தமிழரை முட்டாளாக்கியது.

ஆனால் இப்போ அந்த காலம் மலையேறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கனவு எல்லாம் தவிடு பொடிதான். :lol: .

வடக்கே பயம் என்று சிலவற்றை தெற்கே அமைச்சா. இப்ப அதைவிட பயமாய் இருக்காம் பாப்பாணர்களுக்கும் அதன் அடிமைகளுக்கும் :) .

இந்தியா முன்னொரு காலத்தில் தமிழ் நாட்டிலிருக்கும் சிலரை கொண்டு அவர்களின் தமிழ் பேச்சாற்றலை பயன்படுத்தி ஈழத்தமிழரை முட்டாளாக்கியது.

ஆனால் இப்போ அந்த காலம் மலையேறிவிட்டது.

தமிழ் லினக்ஸ்

நெடுங்காலபோவனும் சரி, நானும் சரி, அல்லது பிறரும் சரி கொள்கை விடயத்தில் மாற்றம் கொண்டவர்களல்ல. ஆனால் உங்களைப் போவ இப்படி இந்தியா என்ற ஒரு நாட்டின் கொள்கைவகுப்பாளர்களுக்கும், குறித்த ஒரு சமூகம் மேலே குற்றம் சாட்டி வேறுபாடு தெரியாமல் இன்பம் காணுகின்ற போக்கிற்கிற்குத் தான் எதிரானவர்கள்.

அமெரிக்கா எதிர்த்தால் கிறிஸ்தவவாதம் என்றோ, சீனா எதிர்த்தால் கம்னூசியவாத எதிர்ப்பு என்றோ, ஈரான் ஆயுதம் கொடுத்தால் உடனே முஸ்லீம் எதிர்ப்போ என்று திசை திருப்புகின்ற கோக்கிரித்தனம் தான் எமக்குப் பிடிப்பதில்லை.

; எம் மக்களை முட்டாளாக்குவது இந்தியா மட்டுமல்ல.....

இது இரண்டாவது தரம் இந்தியா கூழ்ப்பானைக்குள் விழுகிறது. சீனாவின் வரவினைத் தடுப்பதே இதனது முழு நோக்கம். அதனைச் செவ்வனே செய்ய முடியாமல் இவ்வாறு தடுமாறுகின்றது. :)

இறைவன் அண்ணை, இந்தியாவிற்கு சீனாவின் வரவைத் தடுக்கிறதும் மாத்திரமல்ல நோக்கம் தமிழர் போராட்டத்தை நசுக்குவதுமே.

முன்னர் புலிகளின் ஓயாத அலைகள் நடவடிக்கையின் போது யாழ். குடா புலிகளின் முற்றுகைக்குள் வீழ்ந்தபோது அதனை முறியடிக்க இந்தியப் படைகள் தயாராக இருந்ததைப் போன்று இனிவரும் காலங்களில் அப்படி ஏதாவது நடந்தால் அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடாக போர் பயிற்சிகளில் அவர்கள் ஈடுபடுகிறார்களோ என்னவோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் லினக்ஸ்

நெடுங்காலபோவனும் சரி, நானும் சரி, அல்லது பிறரும் சரி கொள்கை விடயத்தில் மாற்றம் கொண்டவர்களல்ல. ஆனால் உங்களைப் போவ இப்படி இந்தியா என்ற ஒரு நாட்டின் கொள்கைவகுப்பாளர்களுக்கும், குறித்த ஒரு சமூகம் மேலே குற்றம் சாட்டி வேறுபாடு தெரியாமல் இன்பம் காணுகின்ற போக்கிற்கிற்குத் தான் எதிரானவர்கள்.

அமெரிக்கா எதிர்த்தால் கிறிஸ்தவவாதம் என்றோ, சீனா எதிர்த்தால் கம்னூசியவாத எதிர்ப்பு என்றோ, ஈரான் ஆயுதம் கொடுத்தால் உடனே முஸ்லீம் எதிர்ப்போ என்று திசை திருப்புகின்ற கோக்கிரித்தனம் தான் எமக்குப் பிடிப்பதில்லை.

; எம் மக்களை முட்டாளாக்குவது இந்தியா மட்டுமல்ல.....

துயவன் நான் இந்து சமயத்துக்கு எதிரானவன் இல்லை. இந்து சமயத்தில் சொல்லப்பட்டிருக்கும் அத்தனை விடையங்களும் ஏதோ காரணத்தோடு தான் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆனால் இந்திய அரசியலில் அதை அந்த சமுகம் தப்பாக உபயோகிக்கின்றது என்பதை தான் சொல்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.