Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவையும், பாகிஸ்தானையும் காட்டி மஹிந்த அரசு இந்தியாவுக்கு பூச்சாண்டி காட்ட முற்படுகின்றதாம் அதைக் கண்டு பாரதம் பயப்படுவது பேதமை என்கிறது "தினமணி'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவையும், பாகிஸ்தானையும் காட்டி மஹிந்த அரசு

இந்தியாவுக்கு பூச்சாண்டி காட்ட முற்படுகின்றதாம்

அதைக் கண்டு பாரதம் பயப்படுவது பேதமை என்கிறது "தினமணி'

பண்டாரநாயக்கா, ஜெயவர்த்தனா, பிரேமதாஸா, சந்திரிகா என்று இலங்கையின் அரசுத் தலைவர்கள் எல்லோருமே இந்தியாவை ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றி மட்டம் தட்டிய பிறகும் இந்திய அரசு, இலங்கை விடயத்தில் தெளிவான, உறுதியான நிலைப்பாடு எதையும் கையாளத் தயங்குவது ஏன்?

இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கின்றது தமிழகத்தின் பிரபல நாளிதழான "தினமணி.'

சீனாவையும், பாகிஸ்தானையும் காட்டி, இந்தியாவுக்கு பூச்சாண்டி காட்ட முயல்கிறது இலங்கையின் ராஜபக்ஷ அரசு. அதைக்கண்டு பாரதம் பயப்படுவது பேதமை என்றும் அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இது தொடர்பாக "வேண்டாம் விஷப் பரீட்சை' என்ற தலைப்பில் அந்த நாளிதழ் நேற்று வெளியிட்ட ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

அதிகாரப் பகிர்வுக்குத் தான் தயாராக இருப்பதாகவும், இலங்கை இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்பட்டுவிடும் என்றும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கைப் பயணம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.

இலங்கையில் தேசிய நாள் கொண் டாட்டமும், அந்த நாட்டின் அறுபதாவது சுதந்திர தின விழாவும் கொழும்பு நகரில் பெப்ரவரி நான்காம் திகதி நடக்க இருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள இருக்கிறார் என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகம அறிவித்திருக்கிறார். இன்னும் இந்தியப் பிரதமரின் அலுவலகம் இந்தப் பயணத்தைப் பற்றி உறுதி செய்யவில்லை என்பதும் வேடிக்கை.

பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலகம் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்காத நிலையில், இலங்கை அரசு பிரதமரின் பயணத்தை உறுதிசெய்திருப்பது பிரதமருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மத்தியில் மன்மோகன் சிங்கை, ராஜபக்ஷ நிர்வாகம் தனக்கு ஆதரவாகச் செயற்பட வைத்துவிடுமோ என்கிற அச்சம். விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்களுக்கு மத்தியில் ராஜீவ் காந்திக்கு ஆனதுபோல் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற அச்சம்.

ஆரம்பம் முதலே, இலங்கையின் அதிபர்களாக இருந்த அனைவருமே இந்தியாவை ஏமாற்றி வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. சிறி மாவோ லால் பகதூர் சாஸ்திரி ஒப்பந்தத்தில் தொடங்கி, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லா ஒப்பந்தங்களும் ஏதாவது ஒருவகையில் இந்தியாவுக்குப் பாதகமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றன. கச்சதீவு விடயத்தில் இந்திரா காந்தியும், இந்திய அமைதிப்படை விடயத்தில் ராஜீவ் காந்தியும் இலங்கை அரசால் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை சரித்திரம் உறுதி செய்திருக்கிறது.

"அங்கே இந்திய வீரர்கள் செத்துமடியும்போது, இங்கே நமது வீரர்கள் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்' என்கிற பிரேமதாஸவின் கேலி வார்த்தைகள் நம்மில் பலரையும் இப்போதும்கூட ஆத்திரமடையச் செய்கின்றன.

இலங்கை அதிபர்களாக இருந்த பண்டாரநாயக்க, ஜெயவர்த்தன, பிரே மதாஸ, சந்திரிகா என்று அனைவருமே ஏதாவது ஒருவிதத்தில் இந்தியாவை ஏமாற்றி மட்டம் தட்டிய பிறகும் இந்திய அரசு இலங்கை விடயத்தில் தெளிவான, உறுதியான நிலைப்பாடு எதையும் கையாளத் தயங்குவது ஏன் என்பது நமக்குப் புரியவில்லை.

கடந்த 15ஆண்டுகளில், சீனாவும் பாகிஸ்தானும் இலங்கை இராணுவத்திற்குள் ஊடுருவியிருப்பது நமது அரசுக்குத் தெரியாமல் இருக்கவழியில்லை. இந்த நிலையில், நாமும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கை இராணுவத்தைப் பலப்படுத்துவது என்பது இலங்கையுடன் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் நெருக்கத்தைக் குறைக்கும் என்று நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். நமது விரலை வைத்தே நமது கண்ணைக் குத்திக்கொள்ளும் முயற்சியாகத்தான் அது முடியும்.

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு முடிவு காணப்படவேண்டும். இலங்கையின் செயற்பாடுகளில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டும் என்பதில் இரு கருத்து இல்லை. அதற்காக, இலங்கை அரசுக்கு அடிபணியும் நிலையும், பயப்படும் தேவையும் நிச்சயமாக இந்தியாவுக்கு இல்லை. சீனாவையும், பாகிஸ்தானையும் காட்டி ராஜபக்ஷ அரசு நம்மைப் பூச்சாண்டி காட்ட முற்பட்டால் அதைக்கண்டு இந்தியா பயப்படுவது பேதமை.

உறுதியாகவும், நிரந்தரமாகவும், இலங்கையில் அமைதி திரும்ப உத்தரவாதம் இல்லாதவரையில் இந்தியப் பிரதமர் தனது உயிரைப் பணயம் வைத்து இலங்கைக்குச் செல்ல வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை.

http://www.sudaroli.com/pages/news/today/09.htm

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவான பார்வை. இந்தத் தெளிவு மற்றய இந்தியர்களிடமும், குறிப்பாக இந்திய வெளியுறவுதுறையினரிடம் இருந்தால் நாம் இவ்வளவு கஷ்ட்டப்படத்தேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாவையும், பாகிஸ்தானையும் காட்டி ராஜபக்ஷ அரசு நம்மைப் பூச்சாண்டி காட்ட முற்பட்டால் அதைக்கண்டு இந்தியா பயப்படுவது பேதமை.

இவை காரணமில்லை இந்தியா இப்படி நடப்பதற்கு.

தமிழீழம் உருவாகினால் தனது தென்பகுதியை இழக்க வேண்டி வருமோ என்ற பயம்தான்

சீனாவின் வரவுதான் இந்தியாவைத் திக்குமுக்காட வைக்கிறது. மேற்கத்திய சக்திகளின் பிரசன்னம் நோக்கங்கள் வேறுபாடுடையது. சீனா பிராந்திய விஸ்தரிப்பு நோக்கத்தையுடையது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.