Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வைக்கோவும் நெடுமாறனும் தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கவில்லை: என்கிறார் சுப்பிரமணியம் சுவாமி

Featured Replies

வைக்கோவும் நெடுமாறனும் தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கவில்லை: என்கிறார் சுப்பர் சுப்பிரமணியம் சுவாமி

பாதுகாப்பு காரணமாகவே இந்திய பிரதமர் மன்மோன் சிங் அவர்களின் சிறீலங்காவிற்கான விஜயம் இரத்துச் செய்யப்பட்டது எனத் தெரிவித்த சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துக்கள் பின்வருமாறு:

விடுதலைப்புலிகளின் தாக்குதல் பட்டியலில் இந்திய பிரதமரின் பெயரும் அடங்கியிருக்கின்றது. இந்தியாவின் பிராந்திய செயற்பாட்டை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை.

அதேவேளை சிறீலங்கா அரசு தமிழ் மக்களை பாகுபாடாக நடத்தும் அணுகுமுறையை கைவிடவேண்டும். சிறீலங்கா அரசினது தற்போதைய தவறான அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாதபட்சத்தில், அரசு தனிமைப்படுத்தும் அபாயத்தை எட்டும். கடந்த காலம் போன்று இனவாத தளத்திலிருந்தே சிறீலங்கா அரசு செயற்படுகின்றது.

அதேசமயம் இந்தியா தமிழ்மக்களின் பிரச்சனைக்கான தீர்வை விரும்புகின்றது. ஆனால் விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. இந்தியாவின் நிலைப்பாட்டில் எப்பொழுதும் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

துரதிஷ்டவசமாக விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் முட்டாள் கருணாநிதி மீது மத்திய அரசு எதுவித சட்ட நடவடிக்கையையும் எடுக்காமால் இருக்கின்றது. வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோரின் எதிர்ப்புக் காரணமாக இந்திய பிரதமர் சிறீலங்காவுக்கான விஜயத்தை இரத்துச் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சுப்ரமண்ய சாமி்யோட நகைச்சுவைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.

புலிகள் யாரு யார கொல்லப் போறாங்கனு ஒரு 40 பக்க நோட்ல எழுதி வச்சுருக்காங்க, அத யாரும் பார்காத நேரத்துல இவரு எடுத்துட்டு வந்துட்டாரு, அத வைச்சுத்தான் இந்திய பிரதமர் புலிகளின் கொலைப்பட்டியல்ல இருக்கத கண்டுபுடிச்சுட்டாரு. எவ்ளோ நாள்தான் இன்னும் இந்த ஆள் இதே மாதிரி காமெடி பண்ணுவாருணு தெரியல.

இவரு பண்ணுற காமெடியிலயே பெரிய காமெடி என்னான்னா, இவர புலிகள் கொல்லப்போறாங்க அப்டினு கதை விட்டுகிட்டு, இவருக்கு இந்திய அரசாங்கத்தின் கருப்பு பூனை படை பாதுக்காப்பு வாங்கி எங்க காச காலியாக்குறது தான். இந்த பைத்தியத்த போய் யாராவது கொல்லுவாங்களா? ஒரு வேளை இவர மாதிரி பைத்தியம் எதாவது கொன்னாதான் உண்டு. இது இந்தியாவுல இருக்க எல்லாருக்கும் தெரியும், இருந்தும் இன்னம் இவருக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு. அத மொதல்ல ஒழிக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள் சோழா ! அதுசரி எங்கே ஆளைக் காணோம் சிறிது நாளா? ரொம்ப பிசியோ ?

நைனாவுக்கு இடைக்கிடை அமவாசை பௌர்ணமிக்கு உப்படித்தான் புலம்புவர் தான் மட்டும் தான் இந்தியாவின்ர ஐனநாயக வாக்கு பலத்தால் வந்த தலைவர் என்று ! எப்பதான் திருந்தப் போகுதுகளோ !!!

இந்தவார காலக்கணிப்பில் மன்மோகனின் விஜயம் ரத்தானது பற்றி தமிழர்கள் சந்தோசமடைய தேவையில்லை அது அவரின் சொந்தபாதுகாப்புகாக நிறுத்தப்பட்டுள்ளதே தவிர எதிர்ப்பை காட்ட அல்ல என கூறப்பட்டிருகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாகச் சொன்னீர்கள் சோழா ! அதுசரி எங்கே ஆளைக் காணோம் சிறிது நாளா? ரொம்ப பிசியோ ?

நன்றி ரகுநாதன், வேலை நிமித்தமாக கொரியா சென்றிருந்ததால் இடையில் என்னால் எதுவும் எழுத இயலவில்லை. ஆனால் தொடர்ந்து யாழ்களத்தின் செய்திகளை படித்துக்கொண்டுதான் உள்ளேன்.

ஒரு இந்தியனாய், என் நாடு செய்யும் தவறான செய்கைகளாலும் மனம் வெறுத்துப்போய் உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::lol: சோழா, நீங்கள் எங்களுக்கு வேறு ஆள் கிடையாது. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு எங்களுக்கு இன்னொரு தாய்நாடு. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை நாங்கள் விமர்சிக்கும்போது நீங்கள் தாக்கப்பட்டிருந்தால் மன்னியுங்கள்.

அதுசரி மாப்ளே...கொரியா கிரியா எல்லாம் போனீங்களாக்கும்... இன்னா கொண்ணுவந்தே எங்களுக்கு ? சும்மா பிலிமு காட்டிக்கிண்ணு....ஒரு படமாவது அனுப்பிறது?!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes::lol: சோழா, நீங்கள் எங்களுக்கு வேறு ஆள் கிடையாது. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு எங்களுக்கு இன்னொரு தாய்நாடு. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை நாங்கள் விமர்சிக்கும்போது நீங்கள் தாக்கப்பட்டிருந்தால் மன்னியுங்கள்.

அதுசரி மாப்ளே...கொரியா கிரியா எல்லாம் போனீங்களாக்கும்... இன்னா கொண்ணுவந்தே எங்களுக்கு ? சும்மா பிலிமு காட்டிக்கிண்ணு....ஒரு படமாவது அனுப்பிறது?!!!!!!!!

என் உணர்வுகளை சரியாக புரிந்துகொண்டமைக்காக மாமா ரகு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

உண்மையில் நீங்கள் தமிழக அரசியல்வாதிகளையும், இந்திய அரசியல்வாதிகளையும் தாக்கிப் பேசுகையில் நான் காயமடையவில்லை. ஆனால் உங்கள் பேச்சில் இருக்கும் நியாயம் புரிந்ததால் வெட்கித் தலைகுனியும் நிலைதான் ஏற்பட்டது. நாம் எல்லாம் தமிழர் எனும் ஓர் உணர்வால் கட்டுண்ட உறவுகள்.எம் ஈழ உறவுகள் மகிழ்சிகாணும் நாளே(தமிழ் ஈழம் மலரும் நாள்) எனக்கு திருநாள்.

தமிழ் ஈழம் விரைவில் மலரும், மலர்ந்த உடன் நானும் அங்கு வந்து விடுதலைக்கு பாடுபட்டு வித்தான என் சொந்தங்களுக்கு ஒரு மெழுகுதிரி ஏற்றி என் வணக்கங்கங்களை தெரிவிப்பேன். இதை தான் நான் தினமும் பிரார்திக்கிறேன்.

இந்த முறை என்னால் உங்களுக்கு எதுவும் வாங்க முடியவில்லை. என்னா வேணும்னு சொல்லுங்க, அடுத்த தடவ வாங்கிட்டு வர்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சோழா, தமிழ்நாட்டுத் தமிழனின் நிலை நாங்கள் அறியாதது இல்லை. எங்கள் ஆதங்கத்தைத்தான் எழுதுகிறொமே தவிர தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாலோ அல்லது தனிமனிதர்களாலோ மத்திய அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை தடுக்க முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். அப்படிச் செய்தால் இலகுவாக தீவிரவாதத்தை ஆதரிக்கீறார்கள் என்று பிடித்து உள்ளே அல்லவா போட்டுவிடுவார்கள்?

இது தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் உள்ள பிரச்சனை கிடையாது. இந்திய மத்திய அரசுக்கும் ஈழத் தமிழனுக்கும் உள்ள பிரச்சனை. நீங்கள் வீணே கலங்க வேண்டாம்.

பரிசு ஒன்றும் வேண்டாம், நீங்கள் தொடர்ந்து எழுதினாலே போதும்.

நன்றியும், வணக்கங்களும் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.