Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலையை விரித்தவர்களே அறுத்தெறிந்த நிகழ்வு-இதயச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலையை விரித்தவர்களே அறுத்தெறிந்த நிகழ்வு-இதயச்சந்திரன்

"தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்' என்கிற வரலாற்று ஆவணத்தை மறுபடியும் வாசித்தேன்.

கனமான நூல் அது. இந்திய அமைதிப்படை காலத்தில், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகள் குறித்து விபரிக்கப்பட்ட விடயங்கள், சமகால அரசியல் மாற்றங்களுடன் ஏதோவொரு வகையில் இணைந்து செல்வது போலிருந்தது.

நண்பனாக உட்புகுந்த எதிரிக்கும், நிரந்தரமான பகைவனிற்குமிடையே இருந்த முரண்பாடுகளை, மிக நுணுக்கமாகக் கையாண்டு, போராட்ட முனைப்பினை தக்க வைத்த இராஜதந்திரம் அந்நூலில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது.

அதைப்படிக்கும் போது, ஜப்பானிய மேலாதிக்கத்திற்கெதிராக, சீன ஆட்சியாளர் சியாங்கோ சேக்குடன் கூட்டுச் சேர்ந்த மாவோ, அந்த முரண்பாடுகளைச் சரியாகக் கையாண்ட சூத்திரம் நினைவிற்கு வந்தது.

ஆனையிறவு மீட்பு, கட்டுநாயக்கா விமானப் படைத்தள அழிப்பினால் உருவாகிய போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தோடு, சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டம், பல விதமான முரண்பாட்டுச் சக்திகளை ஒரே நேரத்தில் கையாள வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டது.

22 பெப்ரவரி 2002 ஆம் ஆண்டிற்குப் பின்னர், நுண்ணரசியல் நிறைந்த விடுதலைப் போராட்டத்தை, விடுதலைப் புலிகள் மிகக் கவனமாகக் கையாண்டனர்.

இந்த சமாதான காலத்தில், மக்கள் இயக்க அடித்தளங்கள் தோற்றம் பெற்று, இதுகாலவரை ஈட்டப்பட்ட இராணுவ வெற்றிகளுக்கு நாட்டுருவாக்கப் பரிமாணம் கொடுக்கப்பட்டது.

சமரில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் தேச நிர்மாணிப்பு அடித்தளங்களும், விடுவிக்கப்படாத பகுதிகளில் அரசியல் செயற்பாடுகளும், ஏககõலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி பீடமேற்றப்பட்டார்.

பண்டா செல்வா ஒப்பந்தத்திலிருந்து பிரபா ரணில் ஒப்பந்தம் வரை, கிழிப்பு வேலைகள் யாவும் சிங்களப் பேரினவாதக் கைகளால் நிறைவேற்றப்பட்டதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு, சர்வதேசம் விரித்த வலைப்பின்னலை, அரசாங்கத்தின் கரங்களால் கிழித்தெறியவைத்த, விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரின் மதிநுட்ப அரசியல் உத்தியினை, தமிழ் மக்கள் தற்போது உணர்கிறார்கள்.

முரண்பாடுகளை எதிர்கொண்டு, அதற்கேற்ப நகர்வுகளை மேற்கொள்வது, பொதுவான நடைமுறை.

அதற்கு எதிர் நிலையாக, வலிந்து, முரண்பாடுகளை உருவாக்கி, அதனூடாக இலக்கை நோக்கி, சகல முரண்பாட்டுச் சக்திகளையும், நகர வைப்பது இன்னொரு வகையான அரசியல் தந்திரோபாய நகர்வாக இருக்கும்.

அவ்வகையான முரண்பாடுகள் உருவாகும் காலவெளியில், இழப்புக்களையும் பின்னடைவுகளையும் எதிர்கொள்ளும் வலிமையும், நிதானப் போக்கும் முரண்நிலை உருவாக்கச் சக்திகளிடம் காணப்பட வேண்டும்.

மாவிலாற்றுப் பொறிக்குள் சிங்கள தேசம் காலடி வைத்த நாளில் இருந்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கிழித்த காலம் வரையான நிகழ்வுகளை தொகுத்துப் பார்த்தால், விடுதலைப் புலிகளின் அரசியல் இராஜதந்திர முதிர்ச்சியும், நவீன முரண்பாட்டுத் தத்துவ பொறிமுறைகளும் புரியப்படலாம்.

ஏனெனில் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் இந்த விடுதலைப் போராட்டக் களமானது, பிராந்திய சர்வதேச வல்லாதிக்க நலன்களிற்கும், பேரினவாதத்தின் இன அழிப்புக் கோட்பாட்டிற்கும் முகங்கொடுத்தவாறு, கடினமான பாதையிலேயே நகர்வினை மேற்கொள்ள வேண்டிய அழுத்தத்திலுள்ளது.

சர்வதேச மயமானவுடன், இப்போராட்டத்தளப்பரிமாணமே, புதிய வடிவமொன்றிற்குள் புகுந்து விட்டது.

விடுதலைப் போராட்டத்திற்கெதிராகச் சர்வதேசமே திரண்டுள்ளது போன்றதொரு தோற்றப்பாட்டினை, சிங்களம் நிலைநாட்ட முயன்றபோது, தடுமாறிய தமிழர்கள், புலிகளின் சமாதான காலத்து பொறுமையினையும், பின்னகர்வுகளை தற்போது தெளிவாகப் புரியும் காலம் அண்மித்து விட்டதென்பதே உண்மையாகும்.

ஆகவே, இனிவரும் காலமே, ஈழத் தமிழ் மக்களின் கனவிற்கு பெரும் சவால்களை அளிக்கப் போகும், கடினமான நகர்வுகளைக் கொண்டதாக அமையப் போகிறது.

அதனை எதிர்கொள்ளத் தயாராகும் இவ்வேளையில், 35 வருடகால ஆயுத வழிப்போராட்டம் உணர்த்தும், ஆழமான சில விடயங்களை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

1948 இல், காலனி ஆதிக்கத்திலிருந்து சிங்களத்திடம் கைமாறிய இலங்கைத்தீவின் ஆட்சியில், மிதவாத தமிழ் தலைமைகள், புதிய அரசியல் அமைப்பு வரையறைக்குள் இருந்தவாறே ஜனநாயக வழிப்போராட்டம் நடத்தின.

எழுதிய ஒப்பந்தங்கள், மை காய முன் கிழித்தெறியப்பட்டன.சுயநிர்ண

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலையை விரித்தவர்களே அறுத்தெறிந்த நிகழ்வு-இதயச்சந்திரன்

தென்னிலங்கை மையமானது சீனாவிற்கு வாசலைத் திறக்காமலிருக்க, தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் பக்கத்தில் நிலையெடுத்து இருக்கவே இந்தியா விரும்பும்.

இது நிட்சயமாக காரணமல்ல. ஏன் இதை தான் தமிழ் எழுத்தாளர்கள் பெரிது படுத்துகின்றனர் என்று தான் விளங்கவில்லை. :lol:

இது நிட்சயமாக காரணமல்ல. ஏன் இதை தான் தமிழ் எழுத்தாளர்கள் பெரிது படுத்துகின்றனர் என்று தான் விளங்கவில்லை. :lol:

இதைத்தவிர அnரிக்காவிற்கும் வேறென்ன காரணமுண்டு. வல்லரசிற்கும், பிராந்திய வல்லரசிற்கும் இந்த இடத்தில் சிறிதளவு வேறுபாடுதாணுண்டு. காலூன்ற நினைக்கிறது அமெரிக்கா. தன் பிராந்தியத்தைக் காப்பாற்ற நினைக்கிறது இந்தியா. இவர்களுக்கு ஆப்பு வைக்கிறது இலங்கை.

"நண்பனாக உட்புகுந்த எதிரிக்கும்இ நிரந்தரமான பகைவனிற்குமிடையே இருந்த முரண்பாடுகளைஇ மிக நுணுக்கமாகக் கையாண்டுஇ போராட்ட முனைப்பினை தக்க வைத்த இராஜதந்திரம் அந்நூலில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. "

இத்தகைய தந்திரமான நகர்வுகளை, அதனது இறுதி முடிவினை, எதிரிகளும் புல்லுருவிகளும் காலஞ்சென்றபின்பே உணர்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுக்கு பயம் தமிழீழம் உருவானால் தனது தென்பகுதியை இழக்க வேண்டி வரும் என்பது தான்.

இது தான் இந்தியாவின் பயம்.

அதைவிட்டுவிட்டு சீனா அமெரிக்கா ஆட்டுகுட்டி பூனைக் குட்டி என்று ஏன் தான் சொல்லுறாங்க என்று தான் தெரியலை.

Edited by tamillinux

இந்தியாவுக்கு பயம் தமிழீழம் உருவானால் தனது தென்பகுதியை இழக்க வேண்டி வரும் என்பது தான்.

இது தான் இந்தியாவின் பயம்.

அதைவிட்டுவிட்டு சீனா அமெரிக்கா ஆட்டுகுட்டி பூனைக் குட்டி என்று ஏன் தான் சொல்லுறாங்க என்று தான் தெரியலை.

இந்தியாவை நம்பி தனது கழுத்தை அறுத்துக் கொள்வதற்கு இலங்கை தயாரில்லை. இதைப் புரியாதவர்கள் ஆட்டுக்குட்டிகளைப் புரிந்து கொள்வதால் என்ன பயன். இலங்யை விடயத்தில் இந்தியா எத்தனை தடவைகள் கையை விரித்துள்ளது. இந்திய எதிர்ப்புகளால் அமெரிக்கா சில நேரங்களில் தனது நடவடிக்கைகளைக் கைவிட்டதுண்டு. ஆனால் சீனாவின் வலையமைப்பு இந்த நாடுகளுக்கு ஆபத்தானது. இது இலங்கைக்குத் தெரியும். அதனால் பயன் படுத்திக் கொள்கின்றது. தமிழீழத்தினால் இந்தியாவிற்கு ஒருபோதும் ஆபத்தில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தினால் இந்தியாவுக்கு ஆபத்தில்லை என்று நாங்கள் தான் கூறிக்கொண்டிருக்கிறோமே தவிர இந்தியா அப்படி நினைக்கவில்லை. தமிழீழம் உருவானால் அது தமிழ்நாட்டையும் சுதந்திரத்திற்காகத் தூண்டும் என்ற பயம் இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம், இந்தியாவின் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை விட இலங்கையின் வடக்குக் கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதலான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கக் கூடாது என்று இந்தியா சொல்லி வருவது.

இதைவிடவும், தமிழீழம் ஒருபோதுமே தனக்குச் சார்பாக( காலம் காலமாக தான் செய்து வரும் துரோகங்களால்) இருக்கப் போவதில்லை என்பது இந்தியாவுக்கு நல்லாகவே தெரியும். அமெரிக்க ஆகிரமிப்புக்கு எதிராக இந்தியாவினால் எதையும் இப்பொதைக்குச் செய்ய முடியாது. ஆகவே அது அமெரிக்க விஷதரிப்புக்கெதிராக காய் நகர்த்துகிறது என்பதை ஏற்க முடியாது.சீனாவை பொறுத்தவரை அது பிராந்திய விஷ்தரிப்பை பார்க்கிலும் தனது சந்தை விஷ்தரிப்பிலெயே அதிக கவனம் கொண்டிருக்கிறது. ஆக, சீனாவுக்குப் பயப்பிட்டுத்தான் இலங்கைக்கு இந்தியா உதவுகிறது என்பது கேள்விக்குறிதான்.

இலங்கையின் விளையாட்டுகளுக்கு ஏமாறி இந்தியா நடக்கிறது என்பது நாம் நமக்குச் சொல்லிக்கொள்ளும் விளக்ககங்கே தவிர வேறொன்றுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.